Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Makkal TV serial on sandalwood smuggler ‘Veerappan’

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

மணம் பரப்பும் “சந்தனக்காடு’

மக்கள் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சந்தனக்காடு’ தொடர், நேயர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஐம்பதாவது பகுதியைக் கடந்துள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளும் ஒருசேர செவ்வாய்க்கிழமை (ஜன.1) ஒளிபரப்பானது. சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை ஒப்பனையில்லாமல் வெளிப்படுத்தி வரும் இந்தத் தொடரை ஒரு தேர்ந்த திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கியிருக்கிறார் வ.கெüதமன். இந்தத் தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தொடரைப் பார்த்துவிட்டு தொடருக்கு எதிராகத் தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார்.

“சந்தனக்காடு’ குறித்து இயக்குநர் பாலா… “”நான் கடவுள்’ படப்பிடிப்பில் இருந்தாலும் என்னுடைய கடுமையான வேலைப் பளுவிற்கு இடையே இந்தத் தொடரைப் பார்த்து வருகிறேன்.

சில சமயம் அதனுடைய தொடர்ச்சியைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எதையோ இழந்ததைப் போல உணர்ந்தேன். ஒரு சிறந்த திரைப்படத்துக்கான கதைக் களத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது” என்கிறார்.

பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வரும் “சந்தனக்காடு’ தொடர், மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: