Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Nadu, India & World in 2007 – News, Incidents, Flashback, People: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

வருட மலர்  2007

ஜனவரி

தமிழகம்

ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.

ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.

ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.

*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு

நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.

ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.

ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.

*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.

ஜன.23: விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகளில் வருமான வரி ரெய்டு.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேயராக இருக்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.

ஜன.24: சென்னையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் 8 பேர் கைது.

ஜன.27: ஸ்ரீவில்லிபுத்துõர் நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் அண்ணாதுரை வெட்டிக் கொலை.

ஜன.29: முன்னாள் எம்.எல்.ஏ., தேனி பன்னீர்செல்வம் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

இந்தியா

ஜன.2: அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை.

ஜன.4: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

* காஷ்மீர் பிரேம் நகர் பகுதியில் சென்ற அரசு பஸ் செனாப் நதியில் விழுந்ததில் 9 பேர் பலி.

ஜன.5: பெங்களூரு விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இம்ரான் என்ற பயங்கரவாதி பெங்களூருரில் கைது.

ஜன.6: அசாமில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலி.

* ஐ.நா., பொதுச் செயலர் பான்கீமூனின் ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் நியமனம்.

ஜன.7: மேற்கு வங்கம் நந்திகிராம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்த பேரணியில் 6 பேர் பலி.

ஜன.10: பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற 11 எம்.பி.,க்களின் பதவி நீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

* நொய்டாவைப் போல் பஞ்சாபிலும் கொன்று புதைக் கப்பட்ட 4 குழந்தைகளின் உடல் கண்டெடுக்கப் பட்டது.

ஜன.11: அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க் கப்படும் சட்ட திருத்தங்களும் ஆய்வுக்கு உட்பட்டவை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: அப்சல் துõக்குத் தண்டனை மீதான தீர்ப்பாய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.

* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் விதிமுறை மீறி வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜன.18: உ.பி.,யில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ்.

ஜன.19: பெங்களூருவில் சதாம் உசேன் துõக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டம் கலவரம்.

ஜன.29: விமானப் படை புதிய தளபதியாக பாலி.எச்.மேஜர் தேர்வு.

ஜன.31: தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு காந்தி அமைதி விருதை ஜனாதிபதி வழங்கினார்.

உலகம்

ஜன.2: இந்தோனோசியாவில் ஜாவாவிலிந்து மனாடோவுக்குச் சென்ற போயிங் ரக விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.

ஜன.11: ஈராக்கிற்குக் கூடுதலாக 20 ஆயிரம் வீரர்களை அனுப்ப புஷ் உத்தரவு.

ஜன.12: கிரீசின் தலைநகர்

ஏதென்சிலுள்ள அமெரிக்க துõதரகத்தில் குண்டு வெடித்தது.

ஜன.13: தெற்காசிய நாடுகளின் ஆசியான் மாநாடு பிலிப்பைன்சில் தொடங்கியது.

ஜன.15: சதாம் சகோதரர் பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவாத் ஹமீது ஆகியோர் துஜெயில் வழக்கில் துõக்கிலிடப்பட்டனர்.

ஜன.17: நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதல்முறையாக பார்லிமென்ட்டில் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றனர்.

ஜன.19: விடுதலைப் புலிகள் வசமிருந்த வாகரைப் பகுதியைக் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவிப்பு.

ஜன.22: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்வர்த்தகப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 78 பேர் பலி

அ. சிறப்பு தகவல்கள்

1. நீதிக்கு பெருமை

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் ஜன., 14ம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டார். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் ஒருவர் இந்த பொறுப்புக்கு வருவது இது முதல்முறை.

2. தொடரும் சாதனை

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் ஜன. 10ல் நான்கு செயற்கைகோள்களில் ஒன்றாக அனுப்பப்பட்ட “எஸ்.ஆர்.இ.,1′ விண்கலம், திட்டமிட்ட படி விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வங்கக்கடலில் பத்திரமாக இறங்கியது. அதனை கடற்படை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.

3. ம.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

ம.தி.மு.க.,வில் போர்க்கொடி துõக்கிய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க., என அறிவித்துக்கொண்டனர். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியை விட்டு ஜன., 10ல் நீக்கப்பட்டனர். இப்போது இவர்கள் போட்டி ம.தி.மு.க., வாக செயல்பட்டு வருகின்றனர்.

4. தணியாத கோபம்

உ.பி., மாநிலம் நிதாரியில் குழந்தைகளை கொன்று குவித்த குற்றவாளிகள் மொனிந்தர் சிங், சுரேந்திர கோலியை ஜன., 25 காஜியாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி வந்தனர். தயாராக காத்திருந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்டனர்.

பிப்ரவரி

தமிழகம்

பிப். 1: மதுரையில் இரண்டு கிராம் நகைக்காக, 4 வயது குழந்தையை ராஜா (12), ஜலால் (13) ஆகிய சிறுவர்கள் சேர்ந்து கொன்றனர்.

* விஜயகாந்த் மீது தி.மு.க., அவதுõறு வழக்கு.

பிப். 2: திருவள்ளூரிலுள்ள சாரதா ராமகிருஷ்ணா அனாதை ஆசிரமத்தில் பெண்கள் மர்மமான முறையில் இறப்பதாகப் புகார்.

பிப். 4: நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்வதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சனம்.

பிப். 5: மயிலாடுதுறையிலிருந்து மதுரை சிறைக்கு அழைத்து வந்த போது, தப்ப முயன்ற ரவுடி மணல் மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.

பிப். 9: அ.தி.மு.க., ஆட்சியில் கல்லுõரி பேராசிரியர்கள் நடத்திய 25 நாள் வேலை நிறுத்த போராட்டத்தைப் பணிக் காலமாக அறிவித்து முதல்வர் உத்தரவு.

பிப். 13: தனுஷ்கோடி கடல் பகுதியில் புலிகளுக்குப் கடத்திச் சென்ற வெடி மருந்துகளைக் போலீசார் பறிமுதல்.

* தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.

* காவிரி, பெரியாறு அணைப் பிரச்னைகளில் கருணாநிதி முரண்பட்டுப் பேசி வருகிறார் என்று பா.ம.க., ராமதாஸ் குற்றச்சாட்டு.

* நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு.

* கலப்புத் திருமணத்துக்கு உதவித் தொகை வழங்க ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.

பிப். 14: சேலம் அருகே சாலை விபத்தில் மேட்டூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தராம்பாள் பலி.

பிப். 16: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 98 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா தீர்ப்பு.

பிப். 17: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குக் குறைந்த அளவு தண்ணீர் வழங்கியிருப்பதைக் கண்டித்து வைகோ சென்னையில் உண்ணாவிரதம்.

பிப். 18: சென்னை மாநகராட்சியில் 67 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடந்தது.

பிப். 22: நெல்லையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நன்கொடையால் கட்டப்பட்ட ஊடகக் கூடம் திறப்பு.

பிப். 25: திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலரின் மகன், தேர்தல் முன்விரோதத்தால் பாண்டியமணி என்பவரை கொலை செய்தார்.

* கொடைக்கானலில் 4 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு துõக்கு தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு.

* இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ., மலைக்கண்ணன் மரணம்.

இந்தியா

பிப். 1: விளையாட்டுப் போட் டிகளை ஒளிபரப்பும் தனியார் “டிவி’க்கள் பிரசார் பாரதியுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் பார்லியில் நிறைவேறியது.

பிப். 2: மகாராஷ்டிராவில் 10 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.

பிப். 6: போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலியைச் சேர்ந்த குட்ரோச்சி அர்ஜென்டினா இன்டர்போல் போலீசாரால் கைது.

பிப். 7: மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசார் நுழைவதை எதிர்த்து நடந்த வன்முறையில் எஸ்.ஐ., கொல்லப் பட்டார்.

பிப். 14: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாட காவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா.

* முலாயம் அரசுக்கு ஆதரவு அளித்த 13 பகுஜன் எம்.எல்.ஏ.,க்களைத் தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

பிப். 17: உ.பி., அரசை கலைக்க அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்குப் பரிந்துரை.

* நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முகமது இக்பால் மேமன் சென்னையில் கைது.

பிப். 21: ஆந்திரா மார்கதரிசி நிதி நிறுவனத்தில் மாநில சி.ஐ.டி., போலீசார் சோதனை.

பிப். 24: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

* உ.பி.,யில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 78 எம்.எல்.ஏ., பேர் ராஜினாமா.

* மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலில் 15 வீரர்கள் பலி.

பிப். 26: குட்ரோச்சிக்கு அர்ஜென்டினா கோர்ட் ஜாமீன் வழங்கியது.

* உ.பி., சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் முலாயம் சிங்.

* நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசிய கேரள அமைச்சர் பொலாலி முகமது குட்டி கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார்.

பிப். 27: பஞ்சாப், உத்தரகண்ட்டில் பா.ஜ., கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றன.

உலகம்

பிப்.3 : புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகரைப் பகுதிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சென்றார்.

பிப். 5: ஈராக்கின் பாக்தாத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலி.

பிப். 9: “பிளேபாய்’ பத்திரிகையின் பிரபல மாடல் அழகி அன்னா நிகாலே ஸ்மித் மரணம்.

பிப். 13: அரசு புலிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இலங்கை புத்த பிட்சுகள் கோரிக்கை.

பிப். 17: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் கோர்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் நீதிபதி உட்பட 15 பேர் பலி.

பிப். 25: பாக்தாத்தில் கல்லுõரி வளாகத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலி.

பிப். 27: ஆப்கனில் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியைக் குறி வைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சாதனை பட்ஜெட்

தொடர்ந்து நான்காவது முறையாக பயணிகள் நலன் காக்கும் பட் ஜெட்டை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்து விமர்சகர் களின் வாயடைக்கச் செய்தார் லாலு. கட்டண உயர்வு இல்லாமல் ரயில் வேயை லாபகரமாக இயக்க முடியும் என்பதை பிப். 26ல் நிரூபித்தார்.

2. நட்புக்கு சோதனை

டில்லி முதல் பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பிப். 19ல் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். பெரும் பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்திய மண்ணில் பாகிஸ்தான் மக்களை பயங்கரவாதம் பலி கொண்ட முதல் சம்பவம் இது.

3. விபரீத முடிவு

அவதுõறு பேச்சு ஒரு குடும்பத்தை அழிவுக்கே கொண்டு சென்றது. சென்னையில் வேலாயுதம் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பிப். 8ல் தற்கொலை செய்து கொண்டார். விசா ரணையில் மகளை சிலர் அவதுõறாக பேசியதே இந்த சோகமான சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

4. ஹாலிவுட் கொண்டாட்டம்

பரபரப்பான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப். 25ல் கலிபோர்னியாவில் நடந்தது. இடி அமீனின் வாழ்க்கையை சித்தரிக்கும் “தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து’ எனும் படத்தில் நடித்த பாரஸ்ட் விட்டாக்கர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

மார்ச்

தமிழகம்

மார்ச் 1: சென்னை மாநகராட்சி மேயராக சுப்பிரமணியன் தேர்வு.

மார்ச் 5: நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்.

மார்ச் 9: நிலநடுக்கம் பெரியாறு அணை எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவிப்பு.

மார்ச் 11: வாய்த்தகராறில் சக போலீஸ் காரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றார் சிக்கிம் போலீஸ்காரர்.

* ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு.

மார்ச் 13: தி.மு.க., கூட்டணி கட்சி களுக்குள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பா.ம.க., ராமதாஸ் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி.

மார்ச் 16: காங்., கட்சிக்கு ம.தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்.

மார்ச் 25: அறையில் சாமி கும்பிடுபவர் கருணாநிதி என்று விஜயகாந்த் விமர்சனம்.

மார்ச் 29: கணித நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் அபெல் பரிசு தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வரதனுக்கு அறிவிப்பு.

மார்ச் 31: இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் 12 மணி நேர “பந்த்’.

இந்தியா

மார்ச் 1: ஏ.எக்ஸ்.என்., சேனல் மீதான தடை நீக்கம்.

* உ.பி., முதல்வர் முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி எட்டு பேர் பலி.

மார்ச் 2: கோர்ட் அவமதிப்புக் குற்றத் திற்காக மேற்கு வங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு கோல்கட்டா ஐகோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.

* பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல், 17 அமைச்சர்களுடன் பதவியேற்பு.

மார்ச் 5: புனேயில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக பி.பி.ஓ., அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 7: அசாம் காங்., எம்.பி., மோனி குமார் சுபா நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தனியார் “டிவி’ சேனல் வெளிப்படுத்தியது.

மார்ச் 8: எய்ம்ஸ் பதிவாளர் பி.சி.குப்தாவைப் பதவி நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் வேணுகோபால் உத்தரவு.

மார்ச் 13: முலாயம் சிங் அரசால் தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உ.பி., கோரக்பூர் பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் லோக்சபாவில் கண்ணீர்.

* இன்சாட்4பி தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவின் கொரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

* சென்னையில் கடல்சார் பல்கலை., அமைக்கும் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சர் பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயற்சி.

மார்ச் 15: நந்திகிராம் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க மேற்கு வங்க ஐகோர்ட் உத்தரவு.

மார்ச் 16: முலாயம் மீதான வழக்கை

விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகக் கண்ணீர்.

* மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த்.

மார்ச் 17: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படாது என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு.

மார்ச் 21: முன்னாள் பா.ஜ., பொதுச்செயலர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் துவங்கியது.

மார்ச் 22: பாபர் மசூதி இடிப்பு வழக்கை லக்னோ மற்றும் ரேபரேலி கோர்ட்டில் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி.

* நிதாரி கொலைகள் வழக்கில் மொனிந்தர் சிங் எந்தக் கொலை

யிலும் ஈடுபடவில்லை. சதி வேலையில் தான் ஈடுபட்டார் என சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை.

மார்ச் 25: விண்ணிலிருந்து விண்ணிலுள்ள மற்றொரு இலக்கை தாக்கும் “அஸ்திரா’ ஏவுகணை சோதனை பாலாசோரேயில் வெற்றிகரமாக நடந்தது.

* காஷ்மீர் பிரச்னையில் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தாத இந்தியாவின் நிலைப்பாடு சரிதான் என ஐரோப்பிய எம்.பி.,க்கள் குழு ஆய்வறிக்கை.

மார்ச் 26: இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் மஞ்சுநாத் கொலை வழக்கில் பவன் குமாருக்கு மரண தண்டனை விதித்து உ.பி., கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 29: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 30: பேஷன் “டிவி’க்கு மத்திய அரசு தடை விதித்தது.

உலகம்

மார்ச் 6: இந்தோனேசியா சுமத்ராவின் மேற்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 70 பேர் பலி.

மார்ச் 8: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியாவின் மகன் தாரிக் ரகுமான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 9: இந்திய டாக்டர்களுக்கு எதிரான குடியேற்ற சட்டத்தை வாபஸ் பெற்றது பிரிட்டன்.

பாக்., சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் முஷாரப் நீக்கினார்.

மார்ச் 22: இலங்கையில் பயங்கரவாத பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முனு பரமேஸ்வரி என்ற தமிழ் பத்திரிகையாளர் விடுதலை.

மார்ச் 24: பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக ராணா பகவன்தாஸ் பதவியேற்பு.

மார்ச் 25: ஈரானுக்குப் பிற நாடுகள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது, நிதி ஆதாரங்கள் அளிப்பதற்கு ஐ.நா., தடை விதித்தது.

அ. சிறப்பு தகவல்கள்

1. மீண்டும் முதல்வர்

மணிப்பூர் முதல்வராக காங்கிரசை சேர்ந்த இபோபி சிங் மார்ச் 2ல் பொறுப் பேற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைந்த போதும் இந்திய கம்யூ., ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இபோபி சிங் அம்மாநில முதல்வரானார்.

2. நக்சல் தலைவலி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதியின் காவல் நிலையத்தின் மீது மார்ச் 15ல் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 55 போலீசார் பலியானார்கள். கோரத்தாக்குதலில் இறங்கிய நக்சல்கள் காவல் நிலையத்தை கொள்ளையடித்து ஆயுதங்களை எடுத்து சென்றனர்.

3. இந்தோனேஷியா சோகம்

மார்ச் 7ல் இந்தோனேஷியாவின் யாக்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க வந்த “கருடா’ பயணிகள் விமானம், திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த நெல் வயலில் பாய்ந்தது. இதில் விமானம் முழுக்க தீப்பிடித்து எரிந்து, பயணிகள் 49 பேரும் பலியானார்கள்.

4. சுற்றுச்சூழல் மாதா

சர்வதேச நேரு நல்லிணக்க விருதை மார்ச் 22ல் கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் வங்காரி மாதா மாதாய்க்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். இவர் ஆப்ரிக்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

தமிழகம்

ஏப். 2: கேன்ஸ் பட விழாவில் திரையிட “வெயில்’ படம் தேர்வு.

ஏப். 3: சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு விற்கப்பட்டது.

ஏப். 5: சென்னை வந்த மலேசிய அமைச்சர் டத்தோ சிவலிங்கம் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து மரணம்.

ஏப். 6: முதல்வர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கரூர் சாயப் பட்டறைகள் “ஸ்டிரைக் வாபஸ்’.

ஏப். 7: திண்டிவனம் அருகே சென்டூரில் கார் குண்டு வெடித்து 16 பேர் பலி.

ஏப். 14: அம்பேத்கர் படத்தை யார் திறப்பது என்ற பிரச்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ரகளை.

ஏப். 15: காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

ஏப். 17: தி.மு.க.,வினருக்கு “பார்’ நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் கடிதம் எழுதியது தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனரிடம் அ.தி.மு.க., புகார்.

ஏப். 23: ஜெயா “டிவி’க்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து மோப்ப நாயுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை.

* முன்னாள் ராணுவ வீரர் நல்லகாமனை தாக்கிய வழக்கில் மதுரை விரைவு கோர்ட் எஸ்.பி., பிரேம்குமாருக்கு “கைது வாரண்ட்’.

ஏப். 25: மதுரையில் முதன்முறையாக விமானப்படையினர் வான் சாகசம்.

* பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.

ஏப். 27: சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் மீதான தடை சட்டசபையில் விலக்கப்பட்டது.

* கூடுதலாக 60 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் காவிரி நடுவர் மன்றத்தில்தமிழகம் கோரிக்கை.

ஏப். 28: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல் லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

* பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு.

ஏப். 29: விருதுநகரில் நடிகர் சரத்குமார் காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தினார். புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு.

* ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஸ்ரீதர் வாண்டையார் கைது.

இந்தியா

ஏப். 2: சட்டசபையில் உள்ள பொருட் களை சேதப்படுத்திய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அபராதம் விதித்து மேற்கு வங்க சபாநாயகர் அறிவிப்பு.

ஏப். 4: டில்லியில் சார்க் மாநாடு துவங்கியது.

ஏப். 5: உ.பி.,யில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உ.பி., ஐகோர்ட் அறிவிப்பு.

ஏப். 6: அமால்கமேசன் குழுமத்தலைவர் சிவசைலத்துக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது.

ஏப். 7: டில்லி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.

ஏப். 9: சர்ச்சைக்குரிய “சிடி’ விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ராஜ்நாத் சிங்கை போலீசார் கைது செய்ய மறுப்பு.

ஏப். 10: டில்லியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டடங்களில் சீலை உடைத்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஹர்சரண் சிங்க்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஏப். 12: முழுவதும் இந்திய தொழில் நுட்பத் தால் உருவான அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

ஏப். 18: மனைவி மற்றும் மகனின் பாஸ்போர்ட் மூலம் வேறு நபர்களை வெளிநாடு அழைத்து செல்ல முயன்ற பா.ஜ., எம்.பி. கடாரா கைது.

ஏப். 22: ஒரிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஆய்வு மையத்தில் “பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

ஏப். 23: இத்தாலியின் “ஏஜைல்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.,

ஏப். 26: போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி., கடாரா லோக்சபாவில் கலந்து கொள்ள தடை.

ஏப். 29: மீண்டும் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.

உலகம்

ஏப். 2: தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தில் சலோமன் தீவை சேர்ந்த 50 பேர் பலி.

ஏப். 6: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைபடையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி.

ஏப். 11: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.

ஏப். 14: தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 35க்கும் அதிகமானோர் பலி.

ஏப். 20: அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒருவர் உடன் பணிபுரிந்தவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை.

ஏப். 23: பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக சீனா குற்றச்சாட்டு.

ஏப். 24: இலங்கை ராணுவத்தின் மீது விடுதலை புலிகள் விமான தாக்குதல். 6 பேர் பலி.

* அமெரிக்க உளவாளியாக கருதப்பட்டவரை தலிபான் சிறுவன் கழுத்தை அறுக்கும் காட்சி அடங்கிய “சிடி’ வெளியிடப்பட்டதால் பரபரப்பு.

ஏப். 26: புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததால் கொழும்பு விமான நிலையம் மூடல்.

ஏப். 28: ஈராக் கர்பாலா நகரில் கார் குண்டு வெடித்ததில் மூன்று இந்தியர்கள் உட்பட 58 பேர் உடல் சிதறி பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சஸ்பெண்ட்

சட்டசபையில் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுõறாக பேசியதாக ரகளை செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேற்றப் பட்டனர். கலைராஜன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2. பிச்சைக்காரர்கள் வேட்டை

மதுரை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சைக் காரர்கள் தொந்தரவாக இருந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. ஏப்.9ல் களமிறங்கிய போலீசார் நகரில் திரிந்த பிச்சைக்காரர்களை கைது செய்து ஆதரவற்றோர் இல்லம் மனநல காப்பகங்களில் சேர்த்தனர்.

3. லெவல் கிராசிங் பயங்கரம்

ஏப். 16ல் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பேரணி சென்னையில் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்ள வேலுõரில் இருந்து வந்த வேன் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் விபத்தில் சிக்கியது. இதில் 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.

4. பல்கலைக்கழகத்தில் பரிதாபம்

ஏப். 16ல் அமெரிக்காவின் வெர்ஜினியா டெக் பல்கலை கழகத்தில் நுழைந்த கொரிய மாணவன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான் . இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், மும்பை மாணவி மினால் உட்பட 32 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மே

தமிழகம்

மே 3: சட்டசபையில் சபாநாயகருக்கு அருகில் சென்று புத்தகங்களை கிழித்து வீசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சஸ்பெண்ட்.

மே 4: பொதுசொத்துகள் சேத வசூல் சட்டம் வாபஸ். சட்டசபையில் அறிவிப்பு.

* நதிநீர் பிரச்னை குறித்து 1961லேயே தினமலர் நாளிதழ் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர் டி.வி.ராமசுப்பையர் என வைகோ பேச்சு.

மே 5: ஒக்கேனக்கல் அருவியின் மேற் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கர்நாடகா தொடங்கியது.

மே 8: மதுரையில் போலி மருத்துவ இன்ஸ்டிடியூட் நடத்திய போலி பேராசிரியர் உட்பட 2 பேர் கைது.

* பெரியாறு அணையின் “கேலரி’ பகுதிக்கு செல்ல தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு.

மே 12: பொன்விழா நினைவாக புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என கருணாநிதி அறிவிப்பு.

மே 13: மதுரை சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் தயாநிதி ராஜினாமா.

மே 15: அமைச்சர் தா.கிருட்டினன் கொலைவழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.

மே 18: கடத்தப்பட்ட மீனவர்கள் 11 பேரை விடுவித்தனர் விடுதலைப்புலிகள்.

* மத்திய உள்துறை இணையமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ராதிகா செல்வி பொறுப்பேற்பு.

மே 19: ஜெயா “டிவி’யின் பங்குதாரர் வைகுண்டராஜன் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை.

மே 21: முதல்வர் கருணாநிதி மீதான, மேம்பால ஊழல் வழக்கை தொடர முகாந்திரமில்லை என்ற சி.பி.சி.ஐ.டி., யின் அறிக்கையால் வழக்கு ரத்து.

* பரபரப்பு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற எஸ்.பி., பிரேம்குமார் “டிஸ்மிஸ்’.

மே 22: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

மே 23: திருப்பூர் அருகே மதுபான கடையின் “பார்’ இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி.

மே 25: ஊட்டி அருகே முத்தநாடுமந்து வனப்பகுதியில் 1.5 கி.மீ., துõரத்துக்கு பிளவு ஏற்பட்டு புகை வந்ததால் மரங்கள் கருகின.

மே 27: தமிழக “பார்’களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு.

மே 28: தமிழக எல்லையில் இருக்கும் 51 கிராமங்களில் ஆந்திர அரசு மின்சாரத்தை துண்டித்தது.

மே 30: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் கோயில் பிரச்னையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.

மே 31: கோத்தகிரியில் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டில் போலீசார் சோதனை. உள்ளே அனுமதிக்க மறுத்த தொழிலாளர்கள் கைது.

இந்தியா

மே 3: டெல்லியில் பிரதமர் வீட்டருகே தற்கொலை செய்து கொல்ல முயன்ற நபர் கைது.

மே 4: மருத்துவ உயர் படிப்பு படிக்கும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மூன் றாண்டுகள் பணிபுரிவது அவசியம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

* “டைம்’ பத்திரிகையின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் சோனியா , இந்திரா நுõயி, லட்சுமி மிட்டலுக்கு இடம்.

மே 5: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் குமார் “சஸ்பெண்ட்’.

மே 7 : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஒவியம் வரைந்த ஒவியர் எம்.எப். உசேனின் சொத்துக் களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு.

மே 8: ஆள் கடத்தல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. முகமது சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

மே 10: இந்தியாவில் இரண்டு கட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும் என கலாம் யோசனை.

மே 11: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

மே 13: 49 அமைச்சர்களுடன் உ.பி., முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார்.

மே 18: ஐதராபாத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு. 12பேர் பலி 20 பேர் படுகாயம்.

மே 21: அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது முலாயம் அரசு: உ.பி., சட்டசபையில் கவர்னர் ராஜேஷ்வர் கோபம்.

* பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு நர்ஸ் ஜெயலட்சுமி பரபரப்பு.

* கேரள மார்க்சிஸ்ட் கட்சி கோஷ்டி பூசலால் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், பினராயி விஜயனும் “பொலிட் பீரோ’விலிருந்து நீக்கம்.

மே 28: அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா மறுக்கப் பட்டதால், இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சீன பயணத்தை ரத்து.

* பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குஜ்ஜார் இன மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் வன்முறை. 14 பேர் பலி.

உலகம்

மே 1: இலங்கை வன்னி பகுதியில் நடந்த சண்டையில் 13 புலிகள் சுட்டுக்கொலை.

மே 3: கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் கடத்த முயற்சி செய்த மூவர் பிடிபட்டனர்.

மே 5: கென்ய விமானம் கேமரூனில் விழுந்து விபத்து. 15 இந்தியர்கள் உட்பட 118பேர் பலி.

மே 7 : வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

மே 12: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி கராச்சி சென்ற போது கலவரம்: 15 பேர் பலி.

மே 15: பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் பதவி விலகினார்.

மே 16: நிக்கோலஸ் சர்கோசி பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.

மே 17: கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்.

மே 18: சர்ச்சைக்குரிய உலகவங்கித் தலைவர் உல்போவிட்ஸ் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.

மே 23: பாகிஸ்தானில் பெண் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டதை கண்டித்து, லாகூர் கோர்ட் இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது.

மே 24: விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 35 பேர் பலி.

மே 28: கேன்ஸ் திரைப்பட விழாவில் “நான்கு மாதங்கள், மூன்று வாரங்கள் மற்றும் இரண்டு நாட்கள்’ என்ற திரைப் படம் சிறந்த படமாக தேர்வு.

அ. சிறப்பு தகவல்கள்

1. பிரிந்த சகோதரர்கள்

சட்டீஸ் கரை சேர்ந்த ஒட்டி பிறந்த சகோதரர்கள் ராம், லட்சுமணன். பத்துமாதங்கள் ஆன நிலையில் மே 29ல் ரெய்ப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

2. அரசியல் சோதனை

கோயம்பேட்டில் பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்தின் திருமண மண்டபம் கையகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மே.17ல் இடித்து தள்ளினர். இந்த மண்டபத்தில் விஜயகாந்தின் கட்சி அலுவலகமும் இயங்கி வந்தது.

3. கலவர குரு

சீக்கிய மத குரு கோவிந்த் சிங் போல் உடையணிந்து விளம்பரம் கொடுத்த, தேரா சச்சா சவுதாவின் பாபா குர்தீம் சிங் ராம் ரகீமுக்கு எதிராக பஞ்சாப் முழுவதும் கலவரம் வெடித்தது. மே 22ல் குர்தீம் சிங்கின் செய்கையை கண்டித்து பஞ்சாபில் “பந்த்’ நடத்தப்பட்டது.

4. நிறைவேறும் கனவு

சென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக தொடங்கப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் கால்வாய்கள் சீர்குலைந்த நிலையில் இருந்தன. இந்த திட்டத்துக்கு சாய்பாபா, 200 கோடி ரூபாய் செலவிட்டு கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை சீரமைத்து கொடுத்தார்.

ஜூன்

தமிழகம்

ஜூன் 1: கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

ஜூன் 2: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீஸ்.

ஜூன் 3: அ.தி.மு.க., தலைமைச் செயலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதாக தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

ஜூன் 5: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.

ஜூன் 6: கோவையில் இறந்து போன தம்பியின் உடலை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முயன்ற சார்லஸ் என்ற மத போதகர் கைது.

ஜூன் 9: தனியார் பள்ளிகள் நடத்தும் பிளஸ் 1 நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை.

ஜூன் 10: 2,500 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக தமிழகத்தில் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

ஜூன் 12: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்வழி கற்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

ஜூன் 13: நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஜூன் 17: மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் புகார்.

* தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த மீனவர்களையும் கடத்திச் சென்றனர்.

ஜூன் 20: மணப்பாறையில் பத்தாம் வகுப்பு மாணவன் சிசேரியன் ஆபரேசன் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜூன் 22: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார்.

ஜூன் 24: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா தேர்வு.

ஜூன் 25: மூன்று பேரை கொலை செய்த இலங்கையை சேர்ந்த ராஜனுக்கு துõக்கு தண்டனை விதித்தது திருவண்ணாமலை கோர்ட்.

ஜூன் 26: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.34 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 29: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் வெற்றி.

இந்தியா

ஜூன் 1: சஞ்சய் தத்துக்கு துப்பாக்கி வாங்கித்தந்த பாலிவுட் தயாரிப்பாளர் சமீர் ஹிங்கோராவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஜூன் 2: கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 66 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 5: டில்லி “பந்த்’க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

ஜூன் 6: சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட எட்டு மாநில கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தனர்.

ஜூன் 7: உ.பி., விவசாய நில ஒதுக்கீடு விவகாரத்தில், நடிகர் அமிதாப் போலி முகவரி கொடுத்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் தகவல்.

ஜூன் 8: கோவா முதல்வராக திகாம்பர் காமத் பதவியேற்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மந்திரிசபை அமைப்பு.

* ஐ.நா.,வில் பணியாற்றிய இந்திய அதிகாரி சஞ்சய் பாலுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை.

ஜூன் 9: குட்ரோச்சியை நாடு கடத்த கோரும் சி.பி.ஐ., மனுவை அர்ஜென்டினா கோர்ட் நிராகரிப்பு.

ஜூன் 10: ஓடும் ரயிலில் “சினிமா’ சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க ரயில்வே துறை அனுமதி மறுப்பு.

ஜூன் 11: குட்ரோச் சியின் வழக்கு செலவுகளை சி.பி.ஐ., வழங்க வேண்டும் என அர்ஜென் டினா நீதிமன்றம் உத்தரவு.

ஜூன் 14: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ராஜஸ்தான் கவர்னர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு.

ஜூன் 15: மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவையை பீகார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் முரட்டுத்தனமாக கீழே தள்ளியதால் சர்ச்சை.

ஜூன் 21: பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

ஜூன் 22: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற மூன்றாவது அணியின் கோரிக்கையை நிராகரித்தார் கலாம்.

ஜூன் 25: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக ஷெகாவத் மனு தாக்கல்.

ஜூன் 28: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிரா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூன் 6: ஓமனை தாக்கிய “கோனு’ சூறாவளியில் 2 இந்தியர்கள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஜூன் 7: கொழும்பில் தங்கியிருந்த நுõற்றுக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றம். வவுனியாவுக்கு மாற்றப்பட்டதாக இலங்கை அரசு தகவல்.

ஜூன் 14: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு.

ஜூன் 16: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு “சர்’ பட்டம்.

ஜூன் 19: சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து சுனிதா வில்லியம்சுடன் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண்கலம்.

ஜூன் 24: சதாம் உசேனின் உறவினர் கெமிக்கல் அலி, முன்னாள் ராணுவ தலைவர் உசேன் ரஷீத் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதித்து ஈராக் கோர்ட் தீர்ப்பு.

ஜூன் 27: பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பதவி விலகல்.

ஜூன் 30: இந்தியாவை சேர்ந்த சுருதி வதேரா, பிரிட்டன் அரசில் சர்வதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக நியமனம்.

* கிளாஸ்கோ விமான நிலையத்தில் குண்டுடன் சென்ற கார் வெடித்தது.

* சர்ச்சைக்குரிய உலகவங்கி தலைவர் பால் உல்போவிச் ராஜினாமா.

அ. சிறப்பு தகவல்கள்

1. சர்ச்சை வழக்கு

வரதட்சணை வழக்கு போட்ட தனது மனைவிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது என அதிர்ச்சி பேட்டியளித்தார் நடிகர் பிரசாந்த். வேணுபிரசாத் ஒத்துக்கொண்ட போதும், பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

2. குஜ்ஜார்களின் கோபம்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டில்லியில் “பந்த்’ நடத்தினர். பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

3. தமிழகத்தில் நக்சலைட்?

தேனி மாவட்டம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த 10 தீவிரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில் இதற்காக புதிய போலீஸ் படை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டது.

4. அதிர்ச்சி கொலை

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கார் குண்டு வெடிப்பால் கொல்லப்பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க., வில் நிலவிவரும் கோஷ்டி மோதலே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை

தமிழகம்

ஜூலை 1: திருநின்றவூர் பேரூராட்சியின் நான்காவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன் கொலை.

*சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்.

ஜூலை 2: கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

ஜூலை 4: சிசேரியன் சிறுவன் திலீபன் ராஜ் திருச்சி சிறுவர் நீதி குழுமத்தில் சரண். ஜாமீனில் விடுவிப்பு.

* ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை, கடலுõர் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.

ஜூலை 5: கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுவை ஏற்க மறுத்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாலபாரதி எம்.எல்.ஏ., கைது.

ஜூலை 7: பரவலான முறைகேடு களுடன் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் தொடங்கின.

ஜூலை 9: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயலலிதா மீது சிதம்பரம், புதுக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்.

ஜூலை 10: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 நக்சல்கள் கைது.

* ஓமலுõர் கூட்டுறவு தேர்தல் மோதல் தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., தமிழரசுவை கைது செய்யும்படி தி.மு.க., ஆர்ப்பாட்டம்.

ஜூலை 11: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு.

ஜூலை 15: இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் தண்டனை விதிக்க வகை செய்யும் வரைவு சட்டம் வெளியிடப்பட்டது.

* காமராஜர் பிறந்தநாளையொட்டி சத்துணவுடன் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம் அமல்.

ஜூலை 21: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்க தமிழக அரசு உறுதி.

ஜூலை 22: பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் ரயில்வே கோட்டம் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூலை 23: சென்னை அருகே பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு முடிவு.

ஜூலை 27: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

ஜூலை 30: துõத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்த டைட்டானியம் தொழிற்சாலை பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

*சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

இந்தியா

ஜூலை 9: பி.எஸ்.என்.எல்., டெண்டரில் முறைகேடு நடந்ததாக தகவல். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு.

ஜூலை 14: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க மூன்றாவது அணி முடிவு.

ஜூலை 16: மூன்றாவது அணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு.

ஜூலை 18: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஸ் ஷேக் மற்றும் முஷ்டாக் தரானி ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 19: ஜனாதிபதி தேர்தல் நடந்தது.

* மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அஷ்கர் முகாடம், ஷானவாஸ் குரேஷி, முகமது சோயப் கான்சருக்கு துõக்கு தண்டனை விதித்தது தடா கோர்ட்.

ஜூலை 20: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முகமது இக்பாலுக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

*ஆந்திர சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாயார் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டதால் அமளி.

ஜூலை 24: ஜனாதிபதி பதவியிலிருந்து அப்துல் கலாம் விடைபெற்றார். 2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதி.

*மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகீர் உசேன் ஷாயிக், அப்துல் அக்தர் கான், பெரோஸ் மாலிக் ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 25: போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நடிகை மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை.

ஜூலை 27: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு துõக்கு.

ஜூலை 28: ஆந்திராவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலி.

ஜூலை 30: மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன், பேரன் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.

ஜூலை 31: சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூலை 6: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்த விமானம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.

ஜூலை 14: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆஸ்திரேலிய போலீசார் முகமது அனீப் மீது வழக்கு.

ஜூலை 16: ஜப்பான் பூகம்பத்தில் 5 பேர் பலி. 350க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்.

ஜூலை 19: பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி.

ஜூலை 20: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என பாக்., நீதிபதி கவுன்சில் தீர்ப்பு.

அ. சிறப்பு தகவல்கள்

1. அரசியல் மொழி

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசாபா எம்.பி.,யாக ஜூலை 26ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை கவிஞராகவே அறியப்பட்ட கனிமொழி, இனி பொறுப்புகள் வழங்கப்பட்டால் ஓடி, ஒளியப்போவதில்லை என அறிவித்தார்.

2. ஆபரேஷன் சைலன்ஸ்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது மேற்கொள்ளப் பட்ட கொலைமுயற்சியால் அதிர்ச்சியடைந்தது அந்நாட்டு ராணுவம். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த லால் மசூதிக்குள் ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நுழைந்து தாக்கியது. இதில் நுõற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

3. சஞ்சு பாபாவுக்கு சிறை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் சஞ்சய்தத். இவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜூலை 31ல் தீர்ப்பளித்தது மும்பை தடா கோர்ட். இதனால் இவர் நடிப்பில் தயாராகிவந்த படங்கள் முடங்கின.

4. அரசியல் கைது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சியாளர்களால் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது.

ஆகஸ்ட்

தமிழகம்

ஆக. 1: ஓசூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி வெள்ளை ரவி போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் சுட்டுக்கொலை.

ஆக. 3: டாடா ஆலை விவகாரத்தின் ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்ட ராஜன் தம்பி ஜெகதீசன் கைது.

ஆக. 6: சீரியல் கில்லர் பில்லுõர் ரமேஷூக்கு இரட்டை துõக்கு தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ஆக.7: சீரியல் கில்லர் ரமேஷுக்கு மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஆக.9: மேட்டூரிலிருந்து நீர் திறக்கப் பட்டதால் ஈரோடு காவிரி மறுகரையில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஆக.12: மானாமதுரைராமேஸ்வரம் புதிய அகல ரயில் பாதை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

ஆக.13: தமிழகத்தில் கேபிள் “டிவி’ சேவையை நடத்த “அரசு கேபிள் “டிவி’ கார்ப்பரேஷன் எனும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆக.14: தென்காசியில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் 6 பேர் வெட்டிக்கொலை.

ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

ஆக.19: ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்டராஜன் மணல் ஆலையில் போலீசார் சோதனை.

ஆக.20: ராஜிவ் பிறந்தநாளை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது.

ஆக.24: போயஸ் கார்டனில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிர சாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் எழுந்தது.

ஆக.26: சென்னை மாணவன் பாபுராஜ், வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் வாள் பாய்ந்து பலி. மற்றொரு மாணவன் நாகராஜ் கைது.

*பழநி மலையில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.

ஆக.27: தி.மு.க., அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை கோர்ட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்துõருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஆக.28: இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் தி.மு.க., கூட்டணி வைத்துக்கொள்ளாது என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு.

*அ.தி.மு.க.,வில் பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்.

ஆக.29: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

இந்தியா

ஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.

ஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

ஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஆக.11:காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.

ஆக.13: இந்தியஅமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.

ஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.

ஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.

ஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய துõதர் இந்திய எம்.பி.,க்களை “தலையில்லாத கோழி’ என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.

ஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.

* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

ஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.

ஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.

* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.

ஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் “டிவி’யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.

ஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

உலகம்

ஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.

ஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.

ஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.

ஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.

ஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.

ஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.

ஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

ஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.

ஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.

ஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.

* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.

அ. சிறப்பு தகவல்கள்

1. திறமைக்கு கவுரவம்

பிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.

2. மோசடி மன்னன்

டில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.

3. தீவுகளான மாவட்டங்கள்

பீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.

4. மதானிக்கு நிம்மதி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.

செப்டம்பர்

தமிழகம்

செப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.

செப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.

செப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லுõரி மாணவர்கள் போராட்டம்.

செப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.

செப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.

செப்.6: 200506ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.

* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.

செப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.

செப்.8: மாமல்லபுரம் அருகே கார் அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.

செப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

செப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

செப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.

செப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

செப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.

செப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.

செப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.

செப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.

செப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.

* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

செப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.

இந்தியா

செப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.

செப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.

செப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.

* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.

செப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.

செப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.

* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.

செப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.

செப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.

செப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.

செப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.

செப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

உலகம்

செப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.

செப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.

செப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.

செப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.

செப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.

செப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.

செப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.

செப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.

செப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.

அ. சிறப்பு தகவல்கள்

1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை

ஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. ராமர் சர்ச்சை

ராமர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.

3. பதிலுக்கு பதில்

முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.

4. “குளு குளு’ பஸ்

சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.

அக்டோபர்

தமிழகம்

அக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.

அக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.

* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க “ஓட்டுச்சாவடி அதிகாரிகள்’ என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.

அக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

அக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

அக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.

அக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.

அக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.

* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.

* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து

தற்காலிகமாக பறிப்பு.

அக். 23: அமைச்சர் சாத்துõர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்வத்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.

அக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதுõறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.

* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.

அக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.

* கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.

அக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.

இந்தியா

அக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு துõக்கு.

* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.

அக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,

அக். 7: டில்லியில், “புளூலைன்’ பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.

அக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.

அக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.

அக். 13: பஞ்சாப்மாநிலம் லுõதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.

* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.

அக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.

அக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.

அக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.

* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.

அக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.

* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.

அக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.

அக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.

அக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்துõரில் கலவரம்.

உலகம்

அக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.

அக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.

அக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.

அக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.

அக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.

அக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.

அக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.

அக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.

அக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.

அ. சிறப்பு தகவல்கள்

1. புதிய முகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய தரைப்படைராணு வத்தின் புதிய தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் அக். 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தரைப்படை ராணுவத்தின் 23வது தளபதியான இவர் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என உறுதியளித்தார்.

2. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எம்.பி.,க்களை “தலையில்லாத கோழிகள்’ என அமெரிக்காவுக்கான இந்திய துõதர் ரோனன் சென் விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்.30ம் தேதி லோக்சபா உரிமைக்குழு முன் ஆஜரானர். அப்போது தனது விமர்சனத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

3. “பந்த்’ குழப்பம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகத்தில் அக்.1ம் தேதி தி.மு.க., கூட்டணி “பந்த்’ அறிவித்தது. இது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. எனினும் அன்றைய தினம் அறிவிக்கப்படாத “பந்த்’ நடந்ததால் தமிழகம் முடங்கியது.

4. வன்முறை மர்மம்

அக்.29ல் முதுகுளத்துõரில் ஒரு விழாவில் காங்., தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வேல்கம்பால் குத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கிறது.

நவம்பர்

தமிழகம்

நவ. 1: இன்ஜினியரிங் படிக்கும் பெண்கள், ஏழை மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.

நவ. 5: தமிழகத்தில் புதிய தொழில்கொள்கை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. 2011க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க திட்டம்.

* திருக்கோவிலுõரை அடுத்த கொல்லுõர் கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டு கட்டி விடப்பட்டதால் பரபரப்பு.

நவ. 6: போலீஸ் தடையை மீறி ராமநாதபுரம் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது.

நவ. 11: சென்னை சத்தியமூர்த்திபவனில் ரவுடிகள் நுழைந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலரை கத்தியால் வெட்டினர்.

நவ. 12: போலீஸ் தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க பேரணி நடத்திய வைகோ கைது.

நவ. 13: கும்மிடிபூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வீட்டில் கொள்ளை.

நவ. 15: சென்னையில் திடீர் கடல் சீற்றத்தால் 12 வீடுகள் கடலுக்குள் மூழ்கின.

நவ. 17: திருப்பூர், ஈரோடு நகராட்சி களுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து தமிழக அரசு அவசரச்சட்டம்.

*திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைச்செல்வன் பட்டப்பகலில் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.

* செங்கல்பட்டு அ.தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் குமார் உட்பட இருவர் வெட்டிக்கொலை.

நவ. 20: வாள் சண்டை மையம் அமைக்க விரும்பும் பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் காவல்துறை முன்அனுமதி பெற தமிழக அரசு உத்தரவு.

* கிராமப்புற மருத்துவசேவையை கட்டாயமாக்குவதை எதிர்த்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

நவ. 23: உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அரியலுõர் மாவட்டத்தை துவக்கிவைத்தார்.

நவ. 25: மரக்காணத்தில் பணத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மணிகண்டன், கழுத்தை நெறித்து கொலை.

நவ. 28: இந்து தெய்வங்களை அவ மதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு.

இந்தியா

நவ. 6: பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்த விவகாரத்தில் சிக்கிய உ.பி., அமைச்சர் ஆனந்த் சென் யாதவ் ராஜினாமா.

நவ. 7: நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்த பீகாரை சேர்ந்த சிறுமி லட்சுமிக்கு பெங்களூருவில் ஆபரேஷன்.

நவ. 10: நந்திகிராமில் மீண்டும் நடந்த வன்முறையில் ஒருவர் பலி. நந்திகிராம் வன்முறைகளை கண்டித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மம்தா.

நவ. 15: இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரித்த “கிரயோஜெனிக்’ இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.

* நந்திகிராம் வன் முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் 24 மணிநேர பந்த்.

நவ. 16: காங்., பொதுச்செயலர் ராகுலை கடத்த சதி செய்த மூன்று பயங்கரவாதிகள் உ.பி.,யில் கைது.

நவ. 20: கவர்னரின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார் பிரதிபா பாட்டீல்.

* டில்லி தியேட்டரில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் அதன் உரிமையாளர்கள் 2 பேர் குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பு.

நவ. 23: உ.பி., யிலுள்ள லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் வக்கீல்கள் உட்பட 14 பேர் பலி.

* கோல்கட்டாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமா நஸ்ரீன், அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் டில்லியில் தஞ்சம்.

நவ. 25: அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் உள்ளூர்வாசிகளால் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப் பட்டதால் பரபரப்பு.

நவ.27: பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் “பந்த்’. மூன்று பேர் பலி.

நவ. 28: சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு.

உலகம்

நவ. 2: விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக லண்டனில் கைது.

நவ. 7: பின்லாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவன் கைத்துப்பாக்கியால் எட்டுப்பேரை சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை.

நவ. 8: துபாயில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்ததில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் பலி.

நவ. 9: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிலமணி நேரத்தில் விடுதலை.

நவ. 11: பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கண்டுபிடிப்பு.

நவ. 13: பாகிஸ்தான் அதிபர் பெனசிர் புட்டோவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்.

நவ. 14: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது.

நவ. 23: பாகிஸ்தானின் எமர்ஜென் சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த்திலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.

நவ. 25: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

* மலேசியாவில் உரிமை கேட்டு பேரணி செல்ல முயன்ற இந்துக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தண்ணீரை பீச்சி அடித்தனர்.

நவ. 27: கிளிநொச்சியில் விடுதலை புலிகள் ரேடியோ நிலையம் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தகர்ப்பு.

நவ. 30: பயணிகள் விமானம்துருக்கியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 56 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. “புலி’ பலி

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் அந்நாட்டு விமானப்படை நவ. 2ல் தாக்குதல் நடத்தியது. இதில் விடுதலைபுலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேர் பலியானார்கள். இவரின் திடீர் மறைவு புலிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.

2. பற்றி எரியும் மாநிலம்

நந்திகிராம் பிரச்னையை கண்டித்தும், வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்ற கோரியும் கோல்கட்டாவில் சிறுபான்மை அமைப்பினர் நவ. 21ல் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக முடிந்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கோல்கட்டாவிலிருந்து தஸ்லிமா வெளியேறினார்.

3. சிதார் துயரம்

வங்கதேசத்தை செப். 16ல் சிதார் புயல் தாக்கியது. சுமார் 240 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் சந்தித்த மிக மோசமான புயலாக இது கருதப்படுகிறது.

4. பதவி படுத்தும் பாடு

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பல்வேறு நிபந்தனைகளிடையே நவ. 12ம் தேதி முதல்வர் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து ஓட்டளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்ததை அடுத்து நவ.19ல் பதவியை ராஜினாமா செய்தார்.

டிசம்பர்

தமிழகம்

டிச. 3: விவசாயத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரி விவசாய கல்லுõரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்.

டிச. 4: சென்னையில் சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் இருந்து மர்மவாயு கசிந்ததால் பொதுமக்கள் பீதி.

டிச. 6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் துõக்குதண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்.

டிச. 7: தமிழகத்தில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட தடை.

டிச. 8: சென்னையில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழாவில் வன்முறை. தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 9: இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற இருவர் சென்னையில் கைது.

டிச. 12: நெல்லை கல்லுõரிகளின் அதிபர் எஸ்.ஏ. ராஜா மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்.

டிச. 16: சென்னை மெரீனாவில் இந்திய கடற்படையினர் சாகச நிகழ்ச்சி.

டிச. 17: சென்னை அருகே கெரும்பாக்கத்தில் ஒரே வீட்டில் 80 லட்ச ரூபாய் பணமும், 250 சவரன் நகையும் கொள்ளை.

* மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கியது.

டிச. 19: வருஷநாடு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். 2 பேர் சரண்.

டிச. 20: விவசாய கல்லுõரி மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை ஜன. 10ல் துõக்கிலிடும்படி சேலம் கோர்ட் உத்தரவு.

* தமிழகத்தில் பெய்த தொடர் மழையில் 37 பேர் பலி.

டிச. 23: இளம்பெண்ணை மயக்கிய சென்னையை சேர்ந்த போலிச்சாமியார் பழனிச்சாமி கைது.

டிச. 24: ராமநாதபுரம் உச்சிபுளி அருகே புதைத்து வைக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

* மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலையில் கொடி கட்டும் பிரச்னையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 26: அதிக கட்டணம் வசூல் செய்ததாக தமிழகத்தில் உள்ள 33 இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு நோட்டீஸ்.

இந்தியா

டிச. 3: டாக்டரை தாக்கிய எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக் கோரி ஆந்திராவில் டாக்டர்கள் <<உதவி டாக்டர்கள் போராட்டம்.

டிச. 6: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் சொராபுதீன் கொல்லப் பட்டதை மோடி நியாயப்படுத்தி பேசியதால் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

டிச. 9: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை “சாவு வியாபாரி’ என விமர்சித் ததற்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சோனியாவுக்கு நோட்டீஸ்.

டிச. 10: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என கட்சியின் உயர்மட்ட குழு அறிவிப்பு.

* “நீதித்துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது’ என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.

டிச. 11: குர்கானில் உள்ள யூரோ பள்ளியில் மாணவன் அபிஷேக் தியாகியை சக மாணவன் ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

* குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னாள் முதல்வர் கேசுபாய் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தார்.

டிச. 12: ஒரு கொலைவழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நவடா விரைவு கோர்ட் தீர்ப்பு.

* சொராபுதீன் என்கவுன்டரை ஆதரித்தற்காக மோடிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.

டிச. 13: அசாம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் குண்டுவெடித்ததில் ஐந்து பேர் பலி.

டிச. 14: பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல்.

* பழங்குடி இனத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் படி அஜீத் ஜோகிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* பஞ்சாபில் ரயில்வே லெவல் கிராசிங்கில் நுழைந்து செல்ல முயன்ற மினிபஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 18 பேர் பலி.

டிச. 16: சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 110 நக்சலைட் உட்பட 299 பேர் தப்பி ஓட்டம்.

டிச. 18: பிரமோத் மகாஜன் சுடப்பட்ட வழக்கில், அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஜகதீஷ் டைட்லரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு.

டிச. 21: பெங்களூரு டாக்டர் முகமது அனீப்பின் விசாவை புதுப்பிக்க ஆஸ்திரேலிய கோர்ட் அனுமதி.

டிச. 23: குஜராத் தேர்தலில் பா.ஜ., 117 சீட்களை கைப்பற்றி மீண்டும் வெற்றி.

டிச. 25: குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.

* கிரன் பேடியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை அரசு ஏற்றது.

டிச. 26: நந்திகிராம் சென்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

உலகம்

டிச. 3: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட நவாஸ்ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி.

* ரஷ்ய தேர்தலில் புடினின் “யுனைட்டெட் ரஷ்யா’ கட்சி வெற்றி.

டிச. 9: மலேசியாவில் நடந்த மனித உரிமை பேரணி தடை செய்யப்பட்டது. நான்கு பேர் கைது.

டிச. 13: அல்ஜீரியாவின் அல்ஜயர்ஸ் நகரில் அகதிகளுக்கான ஐ.நா., அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்ததில் 52 பேர் பலி.

டிச. 13: மலேசியாவில் ஆள்துõக்கி சட்டம் அமல்.

டிச. 14: அமெரிக்காவில் லுõசியானா பல்கலைகழகத்தில் படித்த இரண்டு இந்திய மாணவர்கள் சுட்டுக்கொலை.

டிச. 15: பாகிஸ்தானில் எமர்ஜென்சி வாபஸ்.

டிச. 19: பாகிஸ்தானில் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து. 54 பேர் பலி.

டிச. 21: பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் மசூதி வளாகத்தில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 54 பேர் பலி.

டிச. 25: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திலிருந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

டிச. 26: மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. உரிமை போர்

மலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்துõக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.

2. பிரமாண்ட மாநாடு

தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்

3. போராடிய டாக்டர்கள்

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

4. கடற்படை வாண வேடிக்கை

கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: