Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 19th, 2007

Paramapatha gates for Vaikunda Ekadasi Special – Vaishnavism, Hinduism, Religion, God, Lord Narayana

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2007

Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீநம்பெருமாள் பிரவேசிக்கும் பரமபதவாசல்
Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (டிச.20) அதிகாலை ஸ்ரீநம்பெருமாள்பிரவேசிக்கவுள்ள பரமபதவாசல்.

முத்து அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள்…
Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் ஸ்ரீநம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு

Host unlimited photos at slide.com for FREE!

திருச்சி, டிச. 20: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்க நாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வில், வியாழக்கிழமை அதி காலை பரமபதவாசல் திறக்கப் பட்டது. பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசித் திருவி ழாவில் பரமபதவாசல் திறப் புக்காக ஸ்ரீநம்பெருமாள் பச் சைப் பட்டு, ரத்தின அங்கி, பச் சைக்கிளிமாலை, பாண்டியன் கொண்டையுடன் வியாழக்கி ழமை அதிகாலை 4.15 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்டு, ஜயவிஜயா வாசல் வழியாக சந்தனு மண்டபத் தைக் கடந்தார்.
அங்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், ஸ்தலத்தார், மணியக்காரர்க ளுக்கு மரியாதை செய்யப் பட்ட பின்னர் மேலப்படி வழி யாக நீலக்கண்ணாடி பகுதிக் குச் சென்று பின்னர் ராஜம கேந்திரன் திருச்சுற்றை ஸ்ரீநம் பெருமாள் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இச் சுற்று வழியாக பிரதட்சணம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் என்றழைக்கப்படும் குலசேக ரன் சுற்று வந்தார். பின்னர், தங்கக்கொடி மரம், துரைப்பி ரதட்சணம் வழியாக விரஜா நதி மண்டபத்தை நம்பெரு மாள் சென்றடைந்தார்.
விரஜாநதி மண்டபத்தில் அரைமணி நேரம் சந்தியா வந்தனம் செய்த பிறகு, காலை 5.25 மணிக்கு திறக் கப்பட்ட பரமபதவாசலில் பிரவேசித்தார். அங்கிருந்து சந்திரபுஷ்கரணி, மணல் வெளி, தவுட்ரவாசல் வழியா கத் திருக்கொட்டகையை அடைந்தார் ஸ்ரீநம்பெரு மாள்.

திருக்கொட்டகையில் மரி யாதை அளித்த பின்னர் ஆஸ்தான மண்டபம் என்ற ழைக்கப்படும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி னார். பக்தர்களுக்கு ரத்தின அங்கியுடன் நம்பெருமாள் இரவு வரை பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
ஸ்ரீநம்பெருமாள் கருவ றையிலிருந்து புறப்பட்ட பிறகு, பெரியபெருமாளுக்கு முத்தங்கி சாத்தப்பட்டு பக்தர் கள் சேவை செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

Posted in Ekadasi, Ekadhasi, Ekathasi, Hindu, Paramapadha, Paramapadham, Paramapatha, Paramapatham | Leave a Comment »

Dec 18 – Eezham refugees & Internally Displaced People from East Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2007

மழையால் பாதிப்புக்கு உள்ளான கிழக்கிலங்கை அகதிகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெய்கின்ற கடுமையான மழை காரணமாக அம்பாறை, மட்டக்க்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான யுத்த அகதிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

தமது இருப்பிடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், தாம் மிகவும் மோசமான சுகாதார நிலையை எதிர்நோக்குவதுடன், தமது அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தாம் மும்முரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Eelam, Eezham, IDP, LTTE, Refugees, SL, Sri lanka, Srilanka, War | Leave a Comment »