Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 16th, 2007

Gossips: ADMK Internal Politics – Sasikala Natarajan vs Ilavarasi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2007

ஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…

நடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.

நடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

நடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்

. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.

“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Posted in ADMK, AIADMK, Elavarasi, Gossips, Ilavarasi, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Natarajan, Sasikala | Leave a Comment »

Dec 15 – LTTE, Eezham Updates

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2007

திருகோணமலையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன: மாவட்ட அரசாங்க அதிபர்

எஹெட் கரித்தாஸ் நிறுவனம் கோணேசபுரியில் கட்டித்தந்துள்ள வீடுகள்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் சுனாமிப் பேரலைகளின் விளைவாக 6000 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 3668 வீடுகள் மட்டுமே இதுவரை கடடிமுடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் நடராசா தெரிவித்திருக்கின்றார்.

சுனாமிப் பேரலைகள் தாக்கியதற்கு பிந்தைய மூன்று வருட காலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 180க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோதும், 80 நிறுவனங்களே தொடர்ந்தும் செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதன் காரணமாகவே வீடுகளை அமைக்கும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று வருட காலமாகியும் இந்தப் பணிகள் முடிவடையாத போதும். எஹெட் கரித்ததாஸ் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 90 விழுக்காட்டிலான தமது பணிகளை செவ்வனே நிறைவேற்றிவருவதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.

எஹெட் கரித்தாஸ் நிறுவனம் திருகோணமலை நகரை அடுத்துள்ள கோணேசபுரி பகுதியில் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் செலவில் அமைத்துள்ள 93 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் தங்கிவருவதாகத் தெரிவித்த மேலதிக அரச அதிபர், இந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை தற்போது அரசு மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.


இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்

சர் ஆர்தர் சி.கிளார்க்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த “செய்மதி தொழினுட்பத்தின் தந்தை” என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார்.

செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார்.

1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான “சாஹித்ய ரத்னா”, “வித்யா ஜோதி”, மற்றும் “லங்கா அபிமான்ய” போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.

கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.


Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »