Mooligai Corner – Herbs & Naturotherapy – Karuvelam (Arabica; Wild Mimosocea)
Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007
மூலிகை மூலை: கருத்தரிக்க கருவேலம்!
விஜயராஜன்
இரட்டைச் சிறகமைப்பு கூட்டு இலைகளை உடைய வெள்ளை நிறத்தில் முள்ளுள்ள உறுதியான மர இனமாகும் கருவேலம். மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் வெள்ளை நிறத்தில் பட்டை வடிவாக இருக்கும். விதைகள் வட்ட வடிவமாக இருக்கும். கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, பிசின், மருத்துவக் குணம் உடையது. இதனுடைய எல்லா பாகங்களும் துவர்ப்பு குணம் உடையவை. பிசின் சளியை அகற்றி தாதுக்களின் எரிச்சலைப் போக்கும். காமத்தை அதிகரிக்கும். கொழுந்து தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். சளியை அகற்றி சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது.
வேறு பெயர்கள்: மேதோரி, மேதச்சம், கிருட்டிணப் பரம்சோதி, தீமுறுவப்பூ, கருவிலம், வேல், புன்னாகக்க நீதம், சிலேத்தும பித்த ரசமணி.
ஆங்கிலத்தில்: Arabica; Wild; Mimosocea
இனி மருத்துவக் குணங்கள்.
கருவேல இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
கருவேலம் துளிர் இலைகளை 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோரில் கலந்து 2 வேளையாகக் குடித்துவர சீதக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பாசரண மருந்து வீறு குணமாகும்.
கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவர மூலம் குணமாகும். புண் மீது போட விரைவில் ஆறும். கருவேலம் பட்டையை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லியாக 2 வேளை குடித்து வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை குணமாகும்.
கருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல் ஆட்டம் குணமாகும்.
கருவேலம் பட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சம அளவாக எடுத்து பொடி செய்து பல்லில் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.
கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி 2 கிராம் 2 வேளை சாப்பிட்டு வர தாதுப் பலப்படும். இருமல் நீங்கும். வயிற்றுப் போக்கு நிற்கும்.
கருவேலம் பிசினுடன் அதேயளவு பாதாம் பருப்பு சேர்த்து பகலில் நீரில் ஊறவைத்து இரவில் படுக்கப் போகும் முன்னர் 1 டம்ளர் அளவு குடித்து வர, குழந்தை பெற வாய்ப்பாகும்.
கருவேலங்கொழுந்து 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வெள்ளை மாறும்.
கருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து குடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க பல், ஈறுகளில் இருந்து வரும் இரத்தம் நிற்கும். பல் உறுதிப்படும்.
CM said
Very useful to us…
Thank you sir…