Nov. 22 – Eezham, Sri lanka, LTTE updates
Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007
தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி
![]() |
![]() |
மோதல்கள் தொடருகின்றன |
இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
யாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
இதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்