Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

எஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..!

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.

அப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது! மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.

கோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.

“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.

முதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரையும்.

அப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.

தலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.

இன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா? அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.

பெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.

சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.

கர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.

ஸ்டாலின்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: