Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 19th, 2007

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to stregthen the Legs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…

என் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன?

தலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.

கால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.

கால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப்பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.

உடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.

Posted in Aches, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Calf, diabetes, Head, Heart, heart attack, insulin, Knee, legs, medical, Medicines, Muscles, Natural, oil, Pain, Spasm, Strain, Sugar, Swaminathan | Leave a Comment »

Thulir Foundation – AIDS awareness message among Transgenders

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

சடங்கு: சுகன்யாவாகிய நான்…

திரு

சென்னை, ஜி.எஸ்.டி. சாலையிலிருக்கும் அந்த சுமாரான திருமண மண்டபத்திற்குள், கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர் அரவாணிகள். அவர்கள் மட்டுமல்ல ஆண்களும், பெண்களும் கூட பெருமளவில் திரண்டிருந்தனர் அந்த மண்டபத்திற்குள். யார் வீட்டில் என்ன விசேஷம்? என்று கூட்டத்திலிருப்பவர்களிடம் கேட்டோம். “”சந்தோஷிமாதாவுக்குப் பால் ஊத்துற விழா நடக்குது” என்றனர் கோரஸôக. “”விழாவின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே…” என்றோம். “”எதுக்கு இந்த விழான்னு தெரிஞ்சா இன்னமும் வித்தியாசமா இருக்கும்?” என்ற சிலர் நம்மை, அந்தப் பகுதியிலிருக்கும் அரவாணிகளின் தலைவியிடம் அழைத்துச் சென்றனர். ராஜேஸ்வரி என்னும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…

“”துளிர்’ அறக்கட்டளையின் மூலமாக எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை மிகவும் பின்தங்கிய மக்களின் இடங்களுக்கே சென்று செய்து வருகிறோம். சமூகத்தில் எங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதேவேளையில், எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கருணையோடு அணுகவேண்டியதின் அவசியத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

இந்த விழா எதற்காக என்பதைச் சொல்லுகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா, ஹேமா, சத்யா, சிவகாமி ஆகியோர் தங்களை முழுமையாகப் பெண்ணாக மாற்றிக் கொள்வதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் தான் செய்துகொண்டிருக்கிறோம். அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளும் வசதி இனிமேல் வரும் என்கிறார்கள். இந்த அறுவைச் சிகிச்சை எங்களைப் பொறுத்தவரை ஜீவமரணப் போராட்டம். இதில் நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்து, 40 நாட்களுக்குப் பிறகு எங்கள் சமூகத்தில் செய்யப்படும் சடங்கு நிகழ்ச்சிதான் இந்த “பால் ஊத்துற விழா’. சந்தோஷிமாதா தெய்வத்திற்கு 21 இனிப்புகளைக் கொண்டு படையல் போடுவோம். பெண்ணாக மாறியவர்கள், மூத்த அரவாணிகளிலிருந்து தங்களின் மாமியாரைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் மருமகள்களுக்கு புதுத் துணி, நகைகள், அணிந்து சீர் செய்வார்கள். காலம்காலமாக நடக்கும் இந்த பாலூத்தற விழாவை எங்கள் சமூகத்திற்குள்தான் நடத்திக் கொள்வோம். இந்த விழாவிற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கூட வந்திருந்தனர். சமூகத்தோடு எங்களின் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த விழாவை நான் பார்க்கிறேன்” என்றார் ராஜேஸ்வரி.

“”இந்த விழா எங்களின் குலக் கடவுளான சந்தோஷிமாதாவுக்கு நன்றி செலுத்தும் விழா. இருபத்திரண்டு வயதில் நான் மீண்டும் பிறந்ததைப் போல் உணர்கிறேன். என்ன பாக்கறீங்க? சுகன்யாவாகிய நான் பிறந்து 40 நாள்தான் ஆகிறது!” என்றார் பெண்ணுக்கேயுரிய நாணத்துடன் சுகன்யா.

Posted in AIDS, Ali, Aravaani, Aravani, Awareness, Bisex, Bisexual, Community, Foundation, GLBT, Health, HIV, NGO, Thirunangai, Thulir, Transgender, Transgenders | Leave a Comment »

Mooligai Corner – Herbs & Naturotherapy: Parangikkai

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

மூலிகை மூலை: பறங்கி விதையால் பறக்கும் நோய்கள்!

அகன்ற தடிமனான இலைகளைக் கொண்டது. பற்றுக் கம்பிகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப் பற்றுள்ள மஞ்சள் நிறக் கனிகளையும் உடைய படர் கொடி இனமாகும். விதையும், காயின் தோலுமே மருத்துவப் பயனுடையது. காய், பழம் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. விதை காமம் பெருக்கவும், உடல் வெப்பு நீக்கவும் பயன்படும். தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றன.

வேறு பெயர்கள்: சர்க்கரைப் பறங்கி, பூசணை, பூசணி, சர்க்கரைப் பூசணை, சர்க்கரைப் பறங்கி, பூழிய பலம்.

வகைகள்: கோடைப் பூசணை (குழிப் பறங்கி)

மருத்துவக் குணங்கள்: பறங்கி விதையை 30 கிராம் எடுத்து அதேயளவு சர்க்கரைச் சேர்த்து இரவில் உண்டு காலையில் விளக்கெண்ணெய் சிறிது குடிக்கப் பேதியாகி தட்டைப் புழு, மலப் புழுக்கள் வெளியேறும்.

பறங்கி விதையைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 2 சிட்டிகையளவு எடுத்து அத்துடன் சீரகப் பொடி 1/4 சிட்டிகை கலந்து சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டு வர இரத்த வாந்தி, இரத்தப் பித்தம் குணமாகும்.

பறங்கி விதை 30கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக் காலி விதை 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவரச் சிறுநீர்க் கோளாறுகள் குணமாகும்.

பறங்கிப் பட்டையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்துவர சொற்ப வாய்வு, சூளை கரப்பான், குட்டம், கிராந்தி குணமாகும்.

பறங்கி உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட, துர்நாற்றம் நீங்கிச் சதை வளர்ச்சி உண்டாகும்.

பறங்கியின் உற்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்து லேகியமாக்கிக் கொடுக்க இரத்த வாந்தி, கோழையை அகற்றும்.

பறங்கியின் பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க நஞ்சுகள் நீங்கும்.

பறங்கியின் சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உண்ண வேனிற்காலத்தில் வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.

பறங்கியின் விதை 10 கிராம் எடுத்து வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்குப் போகும் முன் தின்று மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப் புழு செத்துவிடும்.

பறங்கி விதையை 15 கிராம் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வெள்ளை நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Fruits, Herbal, Herbs, Medicinal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy, Parangi, Parangikkai, Paranki, Poosani, Poosanikkai, Pumpkin, Pusani, Squash, Sweet Pumpkin, Vegetables | Leave a Comment »

Achutanandan, Pinarayi Vijayan, CPM politburo, Canadian firm SNC Lavalin & Kerala Marxists Corruption

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

மார்க்சிஸ்ட்டின் போபர்ஸ் இது!

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.

பினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.

பினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்!

“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.

Posted in Achudhanandan, Achuthanandhan, Achuthananthan, Assets, Bofors, Bribery, Bribes, CBI, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corruption, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dada, Desabhimani, Desabimani, Don, encroachments, Headquarters, HQ, Investigation, KC(S), Kerala, Kerala State Electricity Board, kickbacks, KSEB, Land, lavalin, Levelin, lottery, mafia, Malayalam, Mallu, Mathrubhoomi, Mathruboomi, Matrubhoomi, Matruboomi, Moonaar, Moonar, Moonaru, Moonnaar, Moonnaaru, Munnaar, Munnaaru, Munnar, Munnaru, Pinarayee, Pinarayi, Politburo, Politics, Santiago, SNC Lavalin, Tehelka, Thalasserry, Thesabhimani, Thesabimani, Vigilance, Vijaian, Vijaiyan, Vijayan | Leave a Comment »