Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 9th, 2007

Chennai Conflicts: Attorneys vs Police Force

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

தவறுகளும் வரம்புமீறல்களும்!

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னையிலுள்ள நீதிமன்றங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது வழக்கறிஞர்கள் சங்கம்.

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒரு வழக்கறிஞர், காலதாமதமாவது ஏன் என்று கேள்வி கேட்க, அதுவே வாக்குவாதமாகி, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டார் என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம். “”காலதாமதத்தையோ, நிர்வாக முறையீடுகளையோ கேள்வி கேட்டதே தவறா? ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன? காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர் என்றும் பாராமல் அவரைத் தாக்கியது என்ன நியாயம்?” – இவையெல்லாம் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.

இணை ஆணையர் ரவியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையோ, வழக்கறிஞர் சங்கத் தலைவரையோ விசாரிக்காமலேயே காவல்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்பது வழக்கறிஞர்களின் அடுத்த ஆதங்கம். நீதிமன்ற விசாரணை தேவை என்பது அவர்கள் கோரிக்கை.

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எப்போதுமே பனிப்போர் நிகழ்ந்தவண்ணம் இருப்பது உலகளாவிய ஒன்று. காவல்துறையினரிடம் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் பலரையும் சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டி விடுவித்துவிடுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்பது காவல்துறையினரின் வருத்தம். மேலும், கிரிமினல் வழக்குகளில் தங்களைச் சாட்சிக் கூண்டுகளில் ஏற்றி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு கேலிப்பொருள்களாக்கிவிடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் ஆதங்கம்.

வழக்கறிஞர்கள் தரப்பும் சரி, காவல்துறையினர் தங்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்கிறது. வழக்கறிஞர்கள் காவல்நிலையங்களில் தகுந்த மரியாதையுடன் காவல்துறையினரால் நடத்தப்படுவதில்லை என்பதும் குற்றவாளிகளை முறையாக ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் முடிந்தவரை அனுமதிப்பதில்லை என்பதும் நீண்டகாலமாகவே இருந்துவரும் குற்றச்சாட்டுகள்தான்.

எழுபதுகளில் திருப்பரங்குன்றத்தில் வழக்கறிஞர் அய்யாத்துரை என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் தொடரும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிரி மனப்பான்மையும் குறைந்தபாடில்லை. காலம் தரும் பாடம் இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் அவர்களிடம் நல்லுறவையும் வளர்த்திருக்க வேண்டும். சொல்லப்போனால், காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர்களும் சரி நவீன உலகத்தின் நாகரிகக் கோட்பாடுகள் தெரிந்த தலைமுறையினராக இருந்தும், இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி.

இவர்களுடைய கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2006ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 4,06,958. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் இருப்பதாகக் கடந்த மார்ச் மாதப் புள்ளிவிவரம் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் வழக்குகள் சுமார் எட்டரை லட்சம்.

இப்படியொரு நிலையில், பலருடைய ஜீவாதாரப் பிரச்னைகள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. காக்கிச் சட்டை போட்டவரானாலும், கருப்புக் கோட்டு அணிந்தவரானாலும், சிவப்பு விளக்கு எரியும் வாகனங்களில் பயணிப்பவர்களானாலும், பேனா பிடித்து எழுதுபவரானாலும் அனைவரும் பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். வரம்பு மீறுவது யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. சக பணியாளர் என்பதற்காக அவர்களது தவறுகளும் வரம்புமீறல்களும் அனுமதிக்கப்படலாகாது.

நீதி கேட்டு நெடும்பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்களை மேலும் அவதிப்பட வைப்பது தவறு. கைகுலுக்கிச் செயல்பட வேண்டிய காக்கிச் சட்டைகளும் கருப்புக் கோட்டுகளும் கைகலப்பில் ஈடுபடலாமா?

Posted in abuse, Attorneys, Bandh, Chennai, Conflicts, Cooperation, Correctional, Corrections, Doc, doctors, Force, Hardhal, Hospital, Jobs, Justice, Law, Lawyers, medical, Medicine, Order, Police, Power, Protest, Treatment, Work | 2 Comments »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

State of public transit – Chennai Metro: Electric Trains

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

காற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி

சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.

சென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.
இதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.
“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.
வில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.
பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.
“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.
வீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.
ரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.
“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.
மாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.
பயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.
ஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.
“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.
இதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.
அலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.
இதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.

சென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .

Posted in Anna Nagar, Annanagar, Annangar, Beach, Chennai, City, Commute, Commuter, Electric, Express, Fast, Madras, Metro, Paadi, Padi, Public, Railways, Rapid, Station, Suburban, Trains, transit, Transport, Transportation, Work, Worker | Leave a Comment »