Archive for ஒக்ரோபர் 1st, 2007
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007
வாரிசு மீன்கள்
லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.
Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007
அண்ணா 1967- ஆண்டு முதல்வராகப் பதவியேற்றவுடன் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அந்தச் சுற்றுப்பயணத்தின்போது பாளையங்கோட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது ஒரு முதிய பெண்மணி முதல்வரைப் பார்க்க வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் முதல்வரைப் பார்க்கவிடாமல் அந்தப் பெண்மணியை விரட்டினார்கள். இதை அந்த மாளிகையில் இருந்த முதல்வர் சன்னல் வழியாகப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பெண்மணியை அழைத்து வருமாறு காவலர்களிடம் கூறினார். வந்தவரிடம், “”என்ன விவரம். எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண்மணி, “”சுதந்திரப் போராட்டத்தில் வீர மரணமடைந்த வாஞ்சிநாதரின் மனைவிதான் நான். தியாகிகளுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம் ஐம்பது ரூபாய்தான் எனக்கும் வழங்குகிறது அரசு. தயவு செய்து இதை உயர்த்தித் தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்ட அண்ணா கண்ணீர்விட்டதுடன், வாஞ்சிநாதரின் மனைவியின் ஓய்வு ஊதியம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியாகிகளின் ஓய்வு ஊதியத்தையும் உயர்த்திக் கொடுத்தார்.
Posted in ammunition, Anna, Annadhurai, Annadurai, Annathurai, Approach, Arinjar Anna, Arms, Ash, dead, Extremism, Fighters, Freedom, Gesture, guns, History, Incidents, Independence, Kill, Leaders, Neta, Netha, pension, Reminiscences, Terrorism, terrorist, Vaanchinadhan, Vaanchinathan, Vaanjinadhan, Vaanjinathan, Vanchinadhan, Vanchinathan, Vanjinadhan, Vanjinathan, Violence, Weapons, Wife | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007
நினைவலைகள்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம். இவர் தொழிலாளர் நல ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது ஒரு மளிகைக் கடைக்காரர் விதிமுறைப்படி நடந்துகொள்ளவில்லை. பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. கடைசிமுறை எச்சரிக்கையாக, “”இனி விதிமுறைப்படி நடந்துகொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மளிகைக் கடைக்காரர் காவல்நிலையத்தில் வ.உ.சி.சுப்பிரமணியம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சுப்பிரமணியத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார் சுப்பிரமணியம். ஒருகட்டத்தில் சொந்தவூர் பற்றி பேசுகிறபோது, “”தூத்துக்குடியைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம்” என்று பதலளித்தார். அதைக்கேட்ட காவல் அதிகாரி, “”அது வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊராயிற்றே” என்றிருக்கிறார். அப்போதுதான் சுப்பிரமணியம், “”வ.உ.சியின் மகன்தான் நான்” என்று சொல்லியிருக்கிறார். பதறிப்போன அதிகாரி, சுப்பிரமணியத்திடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு “போலீஸ் சல்யூட்’ அடித்து அனுப்பிவைத்திருக்கிறார்.
Posted in Arrest, Chidhambaram, Dinamani, Famous, Freedom, History, Humbleness, Humility, Incidents, Independence, Influence, Police, Ship, Son, VOC | 4 Comments »