Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 28th, 2007

Chithra Lakshmanan series in Cinema Express – K Subramaniyam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – BBC Tamil

 

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை, பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழோசையில் ஒலிபரப்பாகும்.

இத் தொடரை பி பி சியின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 1

முதல் பகுதியில் தியாகபூமி, சேவாசதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான கே சுப்பிரமணியன் அவர்களின் திரையுலக சாதனைகள் குறித்து அவரின் மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.

————————————————————————————–

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

இயக்குனர்களின் முன்னோடி!

“பவளக் கொடி’யின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முருகன் டாக்கீஸ் என்ற நிறுவனத்திற்காக கே. சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய படம் “நவீன சாரங்கதாரா’. அப்போதெல்லாம் ஒரே கதையைப் பல தயாரிப்பாளர்கள் படமாக எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே போன்று “”சாரங்கதாரா’ கதையையும் லோட்டஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தினர் படமாக்கிக் கொண்டிருந்ததால் தனது படத்திற்கு “நவீன சாரங்கதாரா’ என்று பெயரிட்டார் கே. சுப்ரமணியம். “பவளக் கொடி’யில் ஜோடிகளாக இணைந்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்புலட்சுமியும் இந்த படத்திலும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான ஊதியத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு, அந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு “மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை கே. சுப்ரமணியம் அவர்களும், எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்களும் கூட்டாகத் தொடங்கினர். அந்த பட நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கதைகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர்.

“பவளக் கொடி’ படத்தில் பணியாற்றியபோதே ஒரு இயக்குனர் என்ற நிலையில் மட்டுமின்றி நற்குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக சுப்ரமணியம் அவர்கள் விளங்கியது சுப்புலட்சுமி அவர்களின் மனதைக் கவர்ந்தது. சுப்ரமணியம் அவர்களுடைய கலைத் திறனும், பெண்களை அவர் மதிக்கின்ற பாங்கும் அவர் மீது சுப்புலட்சுமி கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயத்தை உறுதி செய்தன.

ஆகவே தன்னை அறிமுகப்படுத்திய அந்த கலை மேதையையே மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தார் அவர். இருவரும் ஏற்கனவே கூட்டாக ஒரு பட நிறுவனத்தை நடத்தி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சுப்ரமணியம் அவர்களும் சுப்புலட்சுமி அவர்களின் விருப்பத்திற்கு தடையேதும் கூறாமல் அவரை மணந்து கொண்டார்.

“நவீன சாரங்கதாரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சுப்ரமணியம் – சுப்புலட்சுமி தம்பதியர் தாங்கள் துவங்கியிருந்த நிறுவனத்தின் மூலம் “சதாரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

அதே நேரத்தில் லோட்டஸ் நிறுவனத்தினர் தயாரித்த “சாரங்கதாரா’ படமும் படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியை பற்றி கவலைப்படாமல் “நவீன சாரங்கதாரா’வின் கதை முடிவில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கினார் கே. சுப்ரமணியம். படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து “உஷா கல்யாணம்’, “கிழட்டு மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு கதைகளை ஒரே திரைப்படமாக எடுத்து வெளியிட்ட கே. சுப்ரமணியம் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் “பக்த குசேலா’ படத்தை எடுத்தார். இப்படத்தில் கிருஷ்ண பகவானாகவும், குசேலரின் மனைவியாகவும் இரு வேடங்களில் நடித்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

ஆண், பெண் ஆகிய இரு வேடங்களில் படம் முழுவதிலும் நடித்த ஒரே பெண்மணி இன்றுவரை எஸ்.டி. சுப்புலட்சுமி ஒருவர் மட்டுமே. குசேலர் பாத்திரத்திற்கு அன்று நடித்துக் கொண்டிருந்த எந்த நடிகரும் பொருந்த மாட்டார்கள் என்று சுப்ரமணியம் அவர்கள் கருதியதால் தான் ஏற்கனவே பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்த பாபநாசம் சிவன் அவர்களையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் ஒல்லிய தோற்றம், இடுங்கிய கண்கள், ஒட்டிய வயிறு ஆகியவைகள் குசேலராகவே அவரை சுப்ரமணியம் அவர்களின் கேமரா கண்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. “”நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர்களோ, நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களோதான் சினிமாவில் நடிக்க தகுதியானவர்கள் என்றில்லை. கலை ஆர்வம் உள்ள எவராலும் நடிக்க முடியும்” என்ற கருத்தினைக் கொண்ட கே. சுப்ரமணியம் அவர்கள் திரை உலகின் எல்லா பிரிவுகளிலும் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

பின்னாளில் தொடர்ந்து பல புது முகங்களை கே. சுப்ரமணியம் அவர்களைப் போலவே பல துறைகளிலும் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு முன்னோடி என்றே அவரை குறிப்பிட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களின் பட்டியலை பின்னால் பார்ப்போம்.

“பக்த குசேலா’வைத் தொடர்ந்து அவர் தயாரித்த “பாலயோகினி’ திரைப்படம் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அந்தத் திரைப்படத்தில் பிராமண விதவைப் பாத்திரம் ஒன்றில் நிஜ வாழ்க்கையில் விதவையாக இருந்த ஒரு பிராமண பெண்மணியையே நடிக்கச் செய்தார் அவர்.

அதனால் பழைமையில் ஊறிய சிலர் கூடி அவரை பிராமண ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர். அதனாலெல்லாம் அவர் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மேலும் வேகமாகவும், அழுத்தமாகவும் சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அவரை ஒரு “பிராமணப் பெரியார்’ என்றே சொல்லலாம் என்று “தமிழ்ப்பட உலகின் தந்தை’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வலம்புரி சோமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உருவாகி வெளியான “பாலயோகினி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

திறமையான தொழில் நுணுக்கக் கலைஞர்கள், தரமான லாபரெட்டரி, படமெடுக்க எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ இப்படி எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்ததால் தனது முதல் படத்திற்குப் பிறகு ஆறு படங்களை கல்கத்தாவிலேயே தயாரித்த சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னையில் எல்லா வசதிகளும் அமையப் பெற்ற ஒரு ஸ்டூடியோவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள சுப்ரமணியம் சில தயாரிப்பாளர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு இப்போது ஜெமினி பார்சன் அப்பார்ட்மென்ட், பார்க் ஹோட்டல், பார்சன் காம்ப்ளெக்ஸ் ஆகியவை உள்ள இடத்தில் “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஸ்டூடியோவை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடம் “ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் பெரும் காடாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த ஸ்பிரிங் கார்டன்ஸ் என்ற இடத்தில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இந்தியாவில் அடிகோலிய ராபர்ட் கிளைவ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. ஸ்டூடியோவை நிறுவியதும் கல்கத்தாவிலிருந்து சைலன்போஸ், கமால்கோஷ் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், திரன்தாஸ் குப்தா என்ற லாபரெட்டரி நிபுணர், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளர், ஹரிபாபு என்ற ஒப்பனைக் கலைஞர் என்று பல திறமைசாலிகளை சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர்களில் பலர் அதற்குப் பிறகு சென்னை வாசிகளாகவே மாறி பல திரை படங்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தனது சொந்த ஸ்டூடியோவில் தனது அடுத்த படமான “சேவா சதனம்’ திரைப் படத்தைத் தயாரித்தார் சுப்ரமணியம் அவர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த “சேவா சதனம்’ கதையின் மூலக்கதை ஒரு ஹிந்தி நாவல்.

அந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டு “சேவா சதனம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இதை எந்த இடத்தில் கே. சுப்ரமணியம் அவர்கள் தயாரித்தாரோ அந்த “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பெனி’ என்ற ஸ்டூடியோவை பின்னாளில் வாங்கியவர் “ஆனந்தவிகடன்’ அதிபரான எஸ்.எஸ். வாசன் அவர்களே.

ஆகவே பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ ஸ்தாபிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதலில் படமாக்கப்பட்ட கதையும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான கதைதான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது காலம் போகும் சில விசித்திர முடிச்சுகள் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“சேவா சதனம்’ படத்தில் இந்தியாவின் இணையற்ற இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானதைப் பற்றி அவரது வாழ்க்கைக் குறிப்பில் விரிவாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் அதைத் தவிர்த்துவிட்டு பெரும் புரட்சியைத் தமிழ்ப் பட உலகில் உண்டு பண்ணிய “தியாக பூமி’யைப் பற்றி அடுத்து பார்ப்போம்.

அந்தப் படம் உருவான விதம் குறித்து கீழ்க்கண்டபடி தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியரான அறந்தை நாராயணன். “”டைரக்டர் கே. சுப்ரமணியமும், அப்போது “ஆனந்த விகடன்’ ஆசிரியராயிருந்த “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள்.

தமிழிப் பத்திரிகை உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உருவாக்க இந்த நண்பர்கள் திட்டமிட்டார்கள். பாக்யராஜின் “மெüன கீதங்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே படத்தின் ஃபோட்டோக்களுடன் “குமுதம்’ வார ஏட்டில் அதே கதை தொடர் கதையாக வெளி வந்ததே! நினைவிருக்கிறதா?

இந்தப் புதுமையைத் தமிழில் முதன் முறையாக செய்தவர்கள் டைரக்டர் கே. சுப்ரமண்யமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும்தான். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வரத் தொடங்கியபோதே அந்தக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வந்தது. திரைப்படத்தின் ஸ்டில் ஃபோட்டோக்களே தொடர் கதைக்கான படங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. சினிமாவுக்கென்றே அதுவும் எஸ்.டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் ஆகிய நடிகர்களை மனதில் வைத்தே கல்கி இந்தக் கதையை எழுதினாராம்.

அந்தத் தொடர் கதைதான் திரைப்படமாக வெளிவந்த “தியாக பூமி’.
மே மாதம் 20-ஆம் தேதியன்று வெளியான “தியாக பூமி’ படம் நல்ல வெற்றி பெற்றது. தியாகபூமி புடவை, தியாகபூமி வளையல் என்றெல்லாம் பார்டர்களும், புடவைகளும், வளையல்களும் தோன்றின. அது மட்டுமல்ல, படத்தின் நாயகியான உமாராணி பேரிலும் பொருள்கள் விற்பனைக்கு வந்தன. “உமாராணி பார்டர், உமாராணி ஹேர் ஸ்டைல்’ ஆகியவையும் தோன்றின. பட்டிக்காட்டு சாவித்திரியாகவும், உமாராணியாகவும் இரு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

“தியாக பூமி’ படத்தின் இறுதிக் காட்சிகளில் தேசியக் கொடியைக் கரங்களில் தாங்கியவாறு பெண்கள் ஊர்வலமாகப் போகிறார்கள்.

“”பந்தம் அகன்று நம் திருநாடு உயர்ந்திட வேண்டாமா?” என்று பாடியபடி அவர்கள் போகிறார்கள்.

சாவித்திரியின் இதயத்தில் இந்த ஊர்வலமும் இந்தப் பாடலும், புதிய உணர்ச்சியை, உத்வேகத்தை ஊட்டுகிறது.

தேசத்துக்காகப் பாடுபட புறப்படுகிறாள் சாவித்திரி.

“ஜெய ஜெய பாரதம்’ என்ற தேச பக்தர்கள் முழக்கத்துடன் போலீஸ்வேன் காராக்கிரகம் நோக்கிப் போகிறது.

“தியாக பூமி’ படத்தின் கதை இவ்வாறு முடிகிறது இந்தப் படம் ஓடலாமா? புகழ் பெறலாமா?

எனவே “தியாக பூமி’ படத்துக்கு தடையுத்தரவு தேடிவந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

பிரச்சினைகளை எதிர்கொண்டே பழக்கப்பட்ட கே. சுப்ரமணியம் வெள்ளையர் ஆட்சி தடை விதித்தால் அடங்கி விடுவாரா? “தியாக பூமி’ படம் மக்களைச் சென்றடைய வேகமாக திட்டங்கள் வகுத்தார்.

cinemaexpress.com

Posted in Bhagyaraj, Bhakyaraj, Chithra, Chitra, Cinema, Director, Express, Films, History, Incidents, Kalki, Lakshmanan, Lashmanan, Laxman, Life, MKT, Movies, Papanasam Sivan, Pavalakkodi, Sarangadhara, Sarangathara, SD Subbulakshmi, Seva sadhanam, Sevasadhanam, Sevasathanam, Subramaniam, Subramaniyam, Subramanyam, Thyaga Bhoomi, Thyaga Boomi | Leave a Comment »

Oldeulandir Vunbella – Mooligai Corner – Imbooral

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

மூலிகை மூலை: விஷ முறிவுக்கு இம்பூரல்

விஜயராஜன்

இதன் இலைகள் சற்று ஊசி போன்று நடுவில் தடித்து காணப்படும். வெள்ளை நிறப் பூக்கள் இருக்கும். இது அரை அடிவரை வளரக் கூடியது. தரையோடு தரையாகப் படரக் கூடிய பூண்டு ரகத்தைச் சேர்ந்தது. தமிழகம் எங்கும் ஈரப்பாங்கான இடங்களில் தானாகவே வளரக் கூடியது.

வேறு பெயர்கள்: இம்பூறல், இம்பூரா, இன்புளு, சிறுவேர்

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

இம்பூரல் இலையை உணவுடன் சமைத்து உண்டுவர நுரையீரலில் உள்ள கபத்தைப் போக்கும். பித்தக் கபத்தால் ஏற்படும் வாந்தி, இருமும்போது வருகின்ற ரத்த சளியை கட்டுப்படுத்தும்.

இம்பூரல் இலையும், அரிவாள்மனைப் பூண்டு இலையும் சம அளவாக எடுத்து அரைத்து வெட்டுப்பட்ட காயத்தில் வைத்துக் கட்ட இரத்த ஒழுக்கு நிற்கும். இம்பூரல் வேரிலுள்ள பட்டை 1 கிலோ, ஏலக்காய் 30 கிராம், மிளகு 30 கிராம், நிலப்பனைக் கிழங்கு 100 கிராம் எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பசும் பாலுடன் குடித்துவர காச நோய் குணமாகும். இம்பூரல் வேர் சிவப்பு சாயம் இறக்கப் பயன்படுகின்றது.

இம்பூரல் இலை, வேர், பூ வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி விஷம் தீண்டிய இடத்தில் வார்க்க விஷம் முறியும்.

இம்பூரல் வேரை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர இரத்த வாந்தி, சளியில் இரத்தம் வருவது குணமாகும்.

இம்பூரல் வேரைத் தட்டிப் பசுவின்பால் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு வெந்நீருடன் இரண்டு வேளை சாப்பிட விக்கல், வயிற்று இரைச்சல், பித்தம் நீங்கும்.

இம்பூரல் இலையைப் பொடி செய்து 2 பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட இரைப்பு, ஈளை குணமாகும். இம்பூரல் வேர் 10 கிராம் அதிமதுரம் 5 கிராம், எடுத்து இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லியளவாக 4 வேளை குடித்து வர இருமல், இரைப்பு, இருமல், சளி குணமாகும்.

இம்பூரல் இலைச்சாறு 1 கரண்டியளவுடன் 1 டம்ளர் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர மார்பு எரிச்சல் நீங்கும். இம்பூரல் இலையும் வேரும் வகைக்கு 100 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி நஞ்சுகடிகளினால் உண்டான புண்களைக் கழுவலாம். இந்த குடிநீர் 100 மில்லியளவு குடித்து வர இருமல், இரைப்பு, இளைப்பு நீங்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Embooral, Embural, Herbs, Imbooral, Imbural, Medicine, Mooligai, Moolikai, Natural, Nature | Leave a Comment »

Ayurvedha Corner – Pranayamam: Breathing Techniques

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவுக் கூர்மைக்குப் பிராணாயாமம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 32. சுமார் பத்து ஆண்டுகளாக ஓடும்போதும் சைக்கிள் மிதிக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சு வாங்குவதுடன் மார்புப் பகுதியில் கடுமையாக வலியும் ஏற்படுகிறது. மேலும் நடுமுதுகுப் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. அதிகமாக வியர்க்கிறது. குதிகால் வலி, பாத வெடிப்பு உள்ளது. தகுந்த மருந்து கூறவும்.

மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.

இந்த இருவாயுக்களும் தங்கள் விஷயத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன என்று தாங்கள் கூறும் அறிகுறிகள் மூலம் தெரிகிறது. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.

பிராண- உதான வாயுக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏதும் ஏற்படா வண்ணம் நீங்கள் தலை மற்றும் மார்புப் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய வழிகள்-

1. காலையில் பல் துலக்கியதும் வாயை வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்தவும், அணுதைலம் எனும் மூக்கில் விடும் மூலிகை எண்ணெய்யை இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளவும். அதன்பிறகு வாயினுள் வரும் இந்த எண்ணெயைத் துப்பிவிடவும். வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு காதுகளிலும் விட்டுக் கொண்டு பஞ்சால் காதை அடைத்து வைக்கவும். பிறகு காதினுள் உள்ள அழுக்கைத் துடைத்து விடவும். மூளைப் பகுதியை இணைக்கும் இந்த இரு துவாரங்களைச் சுத்தப்படுத்துவதன் விளைவாக பிராண வாயுவின் சஞ்சாரம் தங்கு தடையின்றி நடைபெறும்.

2. யோகாசனப் பயிற்சிகளை தகுந்த ஒரு குருவின் கீழ் கற்றுணர்ந்து, பிராணாயாமத்தை ஆசனப் பயிற்சிகளுக்குப் பிறகு செய்யவும். நுரையீரல் பகுதி வலுப்பட பிராணாயாமம் உதவுவதால் மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவின் ஓட்டமும் சீராக இருக்கும்.

தலை மற்றும் மார்புப் பகுதிகளை இணைக்கும் நரம்புகளும் தசைப் பகுதிகளும் வலுப்படுவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை நீங்க வழி உள்ளது. ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது ஸ்க்ராஸம் என்ற முறையாகும். க்ராஸôந்தரம் என்பது ஒரு பிடிச்சோற்றுக்கும் மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து அருந்தும் முறை. இந்த இருமுறைகளும் பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் காலை பலகாரம் சாப்பிடுவதற்குப் பதிலாகச் சூடான சாதத்துடன் ஹங்கு வசாதி எனும் சூரணம் 1/2 ஸ்பூன் அளவில் கலந்து 1 டீ ஸ்பூன் (5மிலி) இந்து காந்தம் கிருதம் எனும் நெய் மருந்தையும் கலந்து ஒவ்வொரு பிடியாகச் சிறிய அளவில் சாப்பிடவும். ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நடுவில் விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை 5 மிலி அளவில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடவும்.

உதான வாயுவின் செயல்திறன் மேம்பட மாலை உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட மிகவும் நல்லது. அந்த வகையில் நீங்கள் தசமூலாரிஷ்டம் 30 மிலி, தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரை இரண்டுடன் சாப்பிட உகந்தது.

இவ்விரு வாயுக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தும் வாயுப் பண்டங்களாகிய கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, மொச்சக் கொட்டை, அவரைக்காய், வேர்க்கடலை, கொத்தவரங்காய், காராமணி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டாம். குளிப்பானங்களைத் தவிர்க்கவும். தசமூலரஸôயனம் எனும் லேகியத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட தலை மற்றும் தசைப்பகுதிகள் நன்கு வலுப்படும். குதிகால் வலி, பாதவெடிப்பு நீங்க பிண்டதைலம் எனும் எண்ணெய்யை வெது வெதுப்பாகக் கால்களில் தடவிவிடவும்.


(பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771)

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Breath, Diet, Exercise, Food, Gayathri, Gayatri, Healing, Medicine, Morning, Natural, Nature, Pranayama, Pranayamam, Therapy, Walk, Yoga | Leave a Comment »

iscribe.co.in – Help for visibility Impaired

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

உதவும் கரம்… இணைக்கும் தளம்!

ஞாயிறு

கையையே கரும்பலகையாக்கிக் கொண்டு மொழிகளைக் கற்றவர் ஹெலன் கெல்லர். ஒருவித விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பிறந்த பத்தொன்பது மாதங்களிலேயே பார்க்கிற, கேட்கிற, பேசுகிற புலன்களை இழந்து தவித்தவருக்கு, அவரது அம்மாவைப் போலவே கிடைத்த ஆசிரியைத்தான் மிஸ்.சலிவன். மொழியின் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஹெலன் கெல்லருக்குப் புரிய வைப்பதற்கு சலிவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் சோம்பலில்லா உழைப்பின் அடையாளங்கள்.

தண்ணீர் என்கிற வார்த்தையை எப்படிப் புரிய வைத்தார் தெரியுமா? கொட்டுகிற தண்ணீரில் ஹெலனை நிறுத்தி வைத்து அவரது கைகளில் ‘ர-அ-ப-உ-த’ என்று எழுதிக் காட்டியுள்ளார்.

ஹெலன் பிற்காலத்தில் தனது ஊனத்தை ஊனப்படுத்திவிட்டு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்காக முழு மூச்சாகப் பாடுபட்டு உலகில் உள்ள எல்லோருக்கும் தன்னம்பிக்கையைப் பரிசளித்தார்.

“என் கதை’ என்கிற அவரது சுயசரிதையில் ஹெலன் தன் ஆசிரியையைப் பற்றிச் சொன்னார்:

“”என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லாச் சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோஷமோ என்னிடம் கிடையாது”

ஹெலனுக்குக் கிடைத்த ஆசிரியை போல் பல ஆசிரியர்கள் புலன்களை இழந்தவர்களுக்காக இப்போது வந்துவிட்டார்கள். புதியபுதிய கருவிகளும் அவர்களுக்காக வந்துகொண்டு இருக்கின்றன. எப்போதும் போல் இப்போதும் அவர்களுக்கு இருக்கிற குறைகளில் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது தேர்வு எழுத முடியாத நிலைதான். பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர் பிறர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அப்படி உதவி செய்ய வருகிறவர்களுக்குத்தான் பெரும் பற்றாக்குறை. சிலர் உதவுவதற்கு முன் வந்தாலும் யாரை? எப்படி அணுகுவது? என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்தக் குறையைப் போக்குகிற வகையில் வித்யாசாகர் ஊனமுற்றோருக்கான சட்ட மையமும், ராஷ்ட்ரிய லைஃப் சேவிங் சொûஸட்டியின் தமிழகச் செயலாளர் வாசவி சுந்தரும் சேர்ந்து ஓர் இணையதளம் தொடங்கி உள்ளனர். இந்த இணையதளத்தின் முகவரி: iscribe.co.in ் ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் வாசவி சுந்தரத்திடம் இணையதளம் குறித்துப் பேசினோம்:

“”இரண்டு வருடங்களாகப் பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதி வருகிறேன். கடந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கை, கால் ஊனமுற்ற ஒருவருக்காகத் தேர்வு எழுதுவதற்குப் போயிருந்தேன். அவர் பெயர் ராஜீவ் ராஜன். அப்போது இவரைப் போலவே இரண்டு மூன்று பேர் தேர்வு எழுதுவதற்கு யாரும் இல்லாததால் தவித்ததைப் பார்த்தேன். இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது தோழிகளிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, “என்னை அழைத்திருந்தால் வந்திருப்பேனே’ என்று பலர் சொன்னார்கள். தோழிகள் சொன்ன பிறகுதான், “உதவி தேவைப்படுகிற ஊனமுற்றோருக்கும், உதவி செய்யத் தயாராக இருக்கிறவர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன்.

இந்த இடைவெளியைப் போக்குவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தபோதுதான் இணையதளம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதனையடுத்து வித்யாசாகர் அமைப்போடு சேர்ந்து இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளேன்.

ண்என்பது கண்களைக் குறிக்கும் வகையிலும், நஸ்ரீழ்ண்க்ஷங் என்பது தேர்வு எழுதுவதற்கு உதவுகிறவர்களைக் குறிக்கிற வகையிலும் சேர்த்து iscribe.co.in ்என்று இணையதள முகவரிக்குப் பெயர் வைத்துள்ளோம்.

இணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பார்வையற்றோரும், அவர்களுக்கு உதவுவோரும் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இணையத்தில் பதிவு செய்வதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகத்தான் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ளவர்களும் பதிவு செய்துகொள்ளலாம்.

உதவி தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய முழு விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். பெயர், முகவரி, தொலைபேசி எண், தேர்வு எழுத வேண்டிய தேதி, நேரம் உட்பட அனைத்து விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதைப்போல உதவி செய்ய முன் வருபவர்களும் அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ.மெயில் முகவரி, கல்வி என்று தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவேண்டும்.

கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவைப்படுவோரும், உதவி செய்ய முன்வருவோரும் தாங்களாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்கிறார்கள். தொலைபேசி வசதியோ மற்ற வசதியோ இல்லாதவர்கள் வித்யாசாகர் அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினாலும், இருசாரரும் சந்தித்துப் பேசுவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்று எதுவும் இல்லை. கையெழுத்து அழகாக இருந்தால்தான் எழுதுவதற்கு வரவேண்டும், தேர்வு எழுத வருகிறவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதே துறையில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சொல்வதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான். எந்தக் கல்லூரியில் தேர்வு எழுதுகிறார்களோ, அந்தக் கல்லூரியில் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது. மற்றபடி வேறு தகுதி எதுவும் தேவையில்லை. இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு யாரும் கட்டணமும் வாங்க மாட்டார்கள். சேவை மனப்பான்மையுடன்தான் எல்லோரும் உதவிச் செய்வார்கள்.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையற்றோர்களாக இருக்கிறார்கள். கை, கால் ஊனமுற்று எழுதமுடியாமல் தவிப்போரையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்தோமானால் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இவர்களில் தேர்வு எழுதுவோருக்கு உதவி புரிய முன் வருவோர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருமே பார்வையற்றோருக்கு உதவிச் செய்ய முன் வரவேண்டும்” என்கிறார் ஹெலன் கெல்லர் ஆசிரியை மிஸ்.சலிவன் பார்வையுடன் மிஸ்.வாசவி சுந்தரம்.

Posted in Amitabh, Black, Blind, Dictate, Disabled, Exams, Helen, Help, Impaired, iscribe, Rani, scribe, visibility, Vision, Volunteer, Write | Leave a Comment »