ஜெய கிருஷ்ணா, முகுந்தா, முராரே…
பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைகள்.
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
ஜெய கிருஷ்ணா, முகுந்தா, முராரே…
பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைகள்.
Posted in Dolls, Hindu, Hinduism, Religion | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
இந்திய ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு
புதுதில்லி, செப். 4: கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.50493.57 கோடி மதிப்புள்ள பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. டாலர் மதிப்பில் இது, கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட 18 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ரூ.191824.22 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு ரூ.181139.67 மட்டுமே. மேலும், ஏப்ரல் முதல் ஜூலை வரை ரூ.253545.49 கோடி மதிப்புள்ள சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Posted in Commerce, Dollar, Economy, Exchange, Exim, Exports, Imports, India, Rupees, Spot | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி, மருத்துவ வசதி
தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் இணைய தள வசதி மற்றும் மருத்துவத் திட்டங்களுக்கு இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரையக் ஆர்.பேர்ரைட்டு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி. உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
சென்னை, செப். 4:தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத் தலைவர் கிரெய்க் ஆர் பாரெட் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் இணையதளம் மூலமான கல்வி வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதோடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் மேம்படும்.
முதல் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு நகரங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கு இணையதள வசதியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்டெல் நிறுவனம் 500 கம்ப்யூட்டர்களை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக அளிக்கவும் முன்வந்துள்ளது என்றார் கிரெய்க்.
முதல்வருடனான சந்திப்பு குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசும், இன்டெல் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்டர்நெட் மூலமான இணைப்பை விரிவுபடுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்டெல் நிறுவனம் பயிற்சியளிக்கும். அத்துடன் டிடிஇஎஸ் திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
டெலிமெடிசின் திட்டத்தின் ஒரு கட்டமாக இன்டெல் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் உருவாக்கி குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த உள்ளது. இருதய சிகிச்சை மற்றும் பார்வை சார்ந்த நோய்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் 2.85 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவர்.
முதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
Posted in content, HS Schools, Intel, Internet, Net, School, sites, Students, Technology, Web, Website, Websites, www | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
தமிழுக்கு இனி பொற்காலம்!
தமிழினியன்
தமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.
சிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்!
தமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.
தமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை! என்பது அவரது ஆதங்கம்.
அந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.
ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.
பிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.
தமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.
ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.
தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன்? சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது? வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.
தமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.
தாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.
குழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.
அதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.
புத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.
இத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.
அரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.
அந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.
(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).
————————————————————————————————-
தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்
வி.என். ராகவன்
திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.
ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.
இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.
ஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
சில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.
ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.
தமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.
தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.
இந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.
குழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:
“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.
Posted in CBSE, Colleges, Education, HSC, ISC, KG, Language, LKG, Matric, Matriculation, Metric, Metriculation, Primary, Schools, Students, Tamil, Thamizh, UKG, univ, University, Youth | 4 Comments »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
பூடான்: தேவை மக்களாட்சி
எம். மணிகண்டன்
இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துமே சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கியவையே. இந்த நாடுகள் பின்தங்கியிருப்பதற்கு முழுமையான மக்களாட்சிக் கொள்கையும், உயர்வான அரசியல் சட்டமும் இல்லாததே காரணம் எனலாம்.
இதற்கு அண்மைக்கால உதாரணமாக பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் ஆட்சியாளர்களால் அரசியல் சட்டம் முடக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். இலங்கையில் மோசமான பிரதிநிதித்துவக் கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. நேபாளத்தில் மக்களாட்சிக்கான அடிப்படை மாற்றங்கள் 1990-களிலேயே நடக்க ஆரம்பித்து விட்டாலும்கூட இன்றைக்கும் அங்கு அரசியல்சட்ட குளறுபடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மியான்மரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்களாட்சியே தெரியவில்லை. மாலத்தீவு மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தச் சூழலுக்கு அப்பாற்பட்டவை.
ஒவ்வொரு நாடும் இந்தியாவைப் பார்த்து அப்படியே பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயம், இந்தியாவின் அரசியல் சட்டம்தான். நாடாளுமன்ற நடைமுறைகள், மத்திய மாநில உறவுகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் நெகிழ்வுத் தன்மையுடன் வரையறுத்ததுபோல் வேறு எந்த நாட்டுச் சட்டமும் வரையறுக்கவில்லை. அவசரநிலைக் காலம் தவிர, மற்ற காலங்களில் இந்திய அரசியல் சட்டம் மக்களாட்சியைத் தாங்கிப் பிடித்துள்ளது.
இந்தியாவின் பேச்சை அப்படியே கேட்கும் அண்டை நாடுகள் நேபாளமும், பூடானும்; இந்த இரண்டு நாடுகளும் அருகே அமைந்திருப்பதால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன என்பது அயலுறவுக் கொள்கைகளை வகுப்பவர்கள் மத்தியில் நிலவும் கருத்து. இதில் நேபாளம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், நிதியுதவிகளைப் பெறுவதும் என இந்தியாவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவின் அன்புக் “கட்டுப்பாட்டில்’ இருப்பது பூடான் மட்டுமே. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தாலும், இன்றும் பண்பாட்டை விட்டுக் கொடுக்காத நாடு. 90-களின் இறுதியில்தான் பூடானில் தொலைக்காட்சி மற்றும் இணைய சேவைக்கே அனுமதி கிடைத்தது. பூடான் மன்னர் கடவுளாகப் போற்றப்படுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகிய 4-வது மன்னர் ஜிக்மே சியாங் வாங்சுக் மக்களாட்சிக்கான வழித்தடங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். பதவிக் காலம் முடியும்வரை மன்னரை யாரும் கேள்வியே கேட்க முடியாது என்ற நிலையை மாற்றும் வகையில் நாடாளுமன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான முன்னுரையை எழுதினார்.
நாடாளுமன்றம் நினைத்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் மன்னரையே நீக்க முடியும் என்பதுதான் ஜிக்மே சியாங் செய்த அதிரடி நடவடிக்கை.
அவருக்குப் பின் மன்னராகப் பதவியேற்ற அவரது மகன் ஜிக்மே கேசர் வாங்சுக்கும் தந்தையின் வழியிலேயே மக்களாட்சிக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். அதன் ஒருகட்டமாக கடந்த மே மாத இறுதியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு இடைக்கால அரசின் பிரதமர் கூடப் பொறுப்பேற்று விட்டார்.
இங்கு வேடிக்கை என்னவெனில் இங்குள்ள மக்களுக்கு மக்களாட்சி, தேர்தல் பற்றி கொஞ்சமும் தெரியாமல் இருப்பதுதான். தேர்தல் நடைமுறைகள் பற்றி அரசே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாதிரித் தேர்தலில்கூட மக்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் நடத்துவதற்குள் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
உங்களுக்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், சமூக மாற்றங்களும் தேவையா என்று பூடானில் யாரையாவது கேட்டால், மன்னராட்சியில் எங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். மக்களாட்சியை மக்களே விரும்பவில்லை என்பது இந்த நாட்டைப் பொருத்தவரை உண்மைதான் என்றாலும், இது அறியாமைதான்.
சுமார் 23 லட்சம் மக்கள்தொகை கொண்ட பூடானில் வெளியுறவுக் கொள்கை ஒன்றும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவே கையாண்டு வருவதாகக் குற்றச்சாட்டு வேறு. சீனா திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, பாதுகாப்புக்காக இந்தியாவிடம் ஒட்டிக் கொண்டது பூடான். அந்நாட்டுக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை என்பதும் நிஜம்தான்.
அமெரிக்க-பூடான் உறவைக் கண்காணிக்கும் பணியைக் கூட இந்தியாதான் செய்துவருகிறது. பூடான்-இந்தியா இடையே பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்பது வேறு விஷயம். மக்களாட்சி மலர்ந்தால் இந்நிலை நிச்சயம் மாறிவிடும்.
கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்தற்காக மக்களாட்சியை மறுப்பது நியாயமில்லை. எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மேற்கத்திய நாகரிகம் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் எந்த ஆசிய நாடும் இதுவரை வெற்றி பெறவில்லை. மக்களாட்சியை உருவாக்கி அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவது ஒன்றே, இந்தக் காலகட்டத்தில் அறிவுபூர்வமான செயலாக இருக்கும்.
Posted in Bhutan, Democracy, Elections, Freedom, Military, Monarchy, Polls, Republic, Rule, SAARC | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007
இஸ்லாமியர்களே! இணைந்து குரல் கொடுங்கள்!
ஹைதராபாத்தில் நடந்த அதிகோர குண்டு வெடிப்பைத் தவிர்த்திருக்க முடியும் – மத்திய உளவுத்துறை அளித்த ரகசிய எச்சா¢க்கை அறிக்கை மீது ஆந்திர அரசு உ¡¢ய நடவடிக்கை எடுத்திருந்தால்!
எச்சா¢க்கை செய்யப்பட்டும் கடமையில் தவறிய ஆந்திர அரசின் தயக்கமும் அலட்சியமும் கடுமையான கண்டனத்துக்கு உ¡¢யவை.
இஸ்லாமியர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினால் அதன் மூலம் மதவாதப் பிரச்னையைக் கிளப்ப நேருமே என்று ஆந்திர அரசு தயங்கியதாகச் செய்திகள் வருகின்றன!
தங்க ஊசி என்பதற்காக அதைக்கொண்டு கண்ணைக் குத்திக் கொண்ட கதைதான் இது!
இந்தியாவில் இஸ்லாமியர்களைச் சிறுபான்மை இனத்தினர் என்று பாகுபடுத்தி ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறோம். ஆனால்,
இந்த தேசத்துக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடூரமான சேதங்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் விளைந்தவையே! ‘ஜிஹாதி’ என்ற பெயா¢ல், திட்டமிட்ட கொலை வெறியாட்டம்
நிகழ்த்தி வருகின்றன இவ்வமைப்புகள்! கடந்த ஆறு மாதங்களாக
பாகிஸ்தான் ஜிஹாதி பத்தி¡¢கைகளில், ‘ஹிந்துக்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும்’ என்று பகிரங்க பிரசாரம் நடந்து வந்திருக்கிறது.
இந்தியாவை முஸ்லிம் தேசமாக்க வேண்டும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது! இச் செய்திகளை ஆதார பூர்வமாக இந்தியப் பத்தி¡¢கைகள் வெளியிட்டிருக்கின்றன.
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இந்த எழுத்துக்கள் பற்றி
அறியாதிருக்கக்கூடும். ஆனால், இங்கு நடக்கும் குண்டு வெடிப்பு கோரங்களைக்கூட இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்யவில்லை; தங்கள் மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பாதகத்தை நிறுத்த வேண்டும் என்று தார்மிகக் கோ¡¢க்கை விடுக்கவும் முன்வரவில்லை.
நமது அரசியல்வாதிகளும் (பா.ஜ.க. நீங்கலாக) இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலை வெறியை நேரடியாகக் கண்டனம் செய்யத் தயங்கி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது பழி சுமத்துவதுடன்
நிறுத்திக்கொள்கிறார்கள்! இந்தப் பிரச்னையை இவ்வாறு கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் வளரும். இன்னொரு பக்கத்தில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு
எதிரான உணர்வுகள் கொழுந்துவிட்டு எ¡¢ய ஆரம்பிக்கும். அவ்வாறு உணர்வுகள் பெருக்கெடுக்கிற கட்டத்தில் ஹிந்துத்வா சித்தாந்தத் துக்கே ஆதரவு பெருகும் (ஏற்கெனவே இந்தப் போக்கு
ஆரம்பித்துவிட்டது); காங்கிரஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது துர்லபம் ஆகும்.
இந்தியா இன்று மதச்சார்பற்ற நாடாகத் திகழ்கிறது; நாளை பா.ஜ.க. மற்றும் அதன் ஆதிக்க அமைப்புகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால்
ஹிந்துத்வா கோட்பாடுகள் வலுப் பெறும். எத்தனை ஜிஹாதி அக்கிரமங்கள் நடந்தாலும் இந்தியா முஸ்லிம் நாடாக மாறவே முடியாது. ஆனால், முஸ்லிம் பயங்கரவாதிகளுடைய நடவடிக்கைகளின்
எதிர்விளைவாக அது ஹிந்து நாடாக மாறுவது வெகு எளிது. அப்போது இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்புக்கும் இப்போது அவர்கள் அனுபவிக்கும் உ¡¢மைகளுக்கும் கடுமையான சவால்கள் ஏற்படும்.
தார்மிக உணர்வுத் தூண்டலால் இல்லாவிட்டாலும் இந்தத் தொலைநோக்கின் அடிப் படையிலாவது இந்திய முஸ்லிம் சகோதரர்கள் விழிப்புகொள்ள வேண்டும். தங்கள் மதத்தின் பெயரால்
இங்கே இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்தும்படி அழுத்தம்
திருத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். “எங்கள் தேசத்தைச்
சிதைத்து, எங்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறி ஆக்காதீர்கள்!” என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அவர்கள் விடுக்கும்
எச்சா¢க்கை மட்டுமே பயன்தர வல்லது.
Posted in Andhra, AP, BJP, Blasts, Bomb, Center, Congress, Editorial, Govt, Hindu, Hyderabad, Islam, Jihad, Kalki, Muslim, Naidu, Op-Ed, Religion, TDP, YSR | Leave a Comment »