Makkal Tholaikkatchi in Second Year – ‘No compromise TV’: PMK’s Ramadoss
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 2, 2007
2-ம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள்; இதில் சமரசம் இல்லை: ராமதாஸ்
சென்னை, செப். 2: மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி ராமதாஸ் கூறியதாவது: தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி.
தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.
மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
வீரப்பன் தொடர்: இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் “வெங்காயம்’ வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக “ஏலேலங்கடி… ஏலேலோ.’ வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் “கைமணம்’ இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி “கோக்’ “பெப்சி’ போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம்.
தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.
——————————————————————————————
தமிழ் மொழி மூலம் டி.வி. சேனல் வெற்றி பெற முடியும்
சென்னை, செப். 7: ஆங்கிலக் கலப்பின்றி தமிழ் மொழி மூலம் நடத்தப்படும் தொலைக்காட்சியும் வெற்றி பெற முடியும் என்பதை மக் கள் தொலைக்காட்சி நிரூபித்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னை காமராஜர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மக் கள் தொலைக்காட்சியின் இரண் டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசியது: ஒரு காலத்தில் ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் நாம் இருந் தோம். ஆனால் இன்று ஆங்கில மொழி கலப்பின்றி தமிழ் பேச முடி யுமா என்ற சூழல் எழுந்து, இது ஆங்கிலத்தை எதிர்க்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
இயல்பு தமிழில் பேச்சு மொழி யில் தொலைக்காட்சி நிகழ்ச்சி களை மட்டுமே நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கப் பட்டது மக்கள் தொலைக்காட்சி.
இது வணிக ரீதியில் வெற்றி பெறுமா? என்பது ஆதரவாளர்க ளின் ஏக்கம். வெற்றி பெறாது என் பது போட்டியாளர்களின் கருத்து.
ஆனால் இன்று வணிக ரீதியிலும் வெற்றி பெற முடியும் என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.
சினிமாத் தனம் இல்லாமல், மெகா டி.வி. தொடர் நிகழ்ச்சிகள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்த முடியும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தற்போது உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வித ஆபாசமும் இன்றி வெளி யாகும் ஒரே சேனல் மக்கள் தொலைக்காட்சி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. அரைகுறை, ஆபாச விளம்பரங்கள் தவிர்க்கப்படுகின் றன. பன்னாட்டு நிறுவனங்களான கோக், பெப்சி விளம்பரங்களை ஏற் பதில்லை. அதேசமயம் உள்ளூர் பானங்களின் விளம்பரங்களை ஏற் கிறோம்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இப்போது தமிழ் மொழிக்காக நடத்தப்படும் இந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தோடு, தங்களது குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். விரைவிலேயே மலே சியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுக ளில் வாழும் தமிழ் மக்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வகை செய்யப்பட்டு வருகி றது.
விளம்பரங்களை வெளியிடுவ தில் நாங்கள் மேற்கொண்ட நடவ டிக்கைகள் இதை நெறிப்படுத்து கின்றன. ஆபாச விளம்பரம் வேண் டாம், மதம், சாதி சார்ந்த பூசல்க ளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் வேண்டாம், அறிவியல் ரீதியில் நிரூ பிக்கப்படாத மருத்துவ நிகழ்ச்சி களை ஒளிபரப்பக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்து அதன் படி செயலாற்றுகிறோம். இந்த கொள்கைகளிலிருந்து ஒரு போதும் நாங்கள் மாற மாட் டோம், தொடர்ந்து வெற்றி பெறு வோம் என்றார் ராமதாஸ்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்களிடையே பொது அறிவை வளர்க்க, விழிப்பு ணர்வை ஏற்படுத்த உதவும் ஒரு ஊடகமாக டி.வி. விளங்குகிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இதுவரை 16,36,853 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் மேலும் 30 லட் சம் டிவிக்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள் ளது. கடந்த 20 ஆண்டுகளில் டி.வி.
வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள் ளது.
சமுதாயத்துக்கு பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும், வழிகாட் டும் மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்து கள் என்றார்.
விழாவில் “அழகின் சிரிப்பு’ என்ற குறுந்தகடை மத்திய அமைச்சர் அன்புமணி வெளி யிட அதை விடுதலை சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவர் எம்.
கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொலைக்காட்சியின் 2-ம் ஆண்டு விழாவில்
“அழகின் சிரிப்பு’ என்ற சி.டியை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வெளியிட, அதை
பெறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன். உடன்
(இடமிருந்து) பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி, மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ்,
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய
நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்.
Jayakumar said
இக்கட்டுரை மக்கள் தொலைக்காட்சியின் 2ம் ஆண்டு விழாவினை கண் முன்னே கொன்டு வந்து நிறுத்தும்படியாக உள்ளது.
s.rajarajan said
i amashed that makkal tholai katchi only gives the good programmes to tamil people.. it is not for money minded.. only for tamilens only for tamil tamil tamil tamil…. i wish aal the best..
s.elavarasi said
i wish all the best to makkal tholaikkatchi……….. other tv channels all are ruined our youths… makkaltholaikkatchi only gives good way to all……………
sundaramoorthy sis said
vannakkam…………… really i amashed about maruthuvar iyya his thinking always help to tamilnadu peoples,,, i wish all success to makkaltholaikkatchi………. other networks are only sexual and money minded,,,,,,,,,,, valga tamil valarga iyyavin tamil thondu
peremakumari kumbakonam said
vanakkam
unamil nan viyanthu pokindren tholaikathikal panukindra tamil kolaikalum kama kali attankalum tamilarkalai siralikkum pothu unamaiyana tamil arvathudan tamilarkalugaka tamil mannukaga ulaikkum oru utthama thalaivarin makkal tholakkatchiyai kandu…………..
ranjan thanjai said
vannakkam
tamil kolaikal panukindra tholai katchikalukku naduvey agaya suriyanai,thuruva natchathiramaga minivathu makkaltholaikkatchi mattumey…….. tamil ena thalaivan endru solkiravan elam nadathum tholaikatchikal neela niramaka katchi alikkum pothu unmaiyana tamil pattrodu pavani varum makkal tholaikkatchiku 1000000000000000000000000 nandrikal