Accident triggers riots, curfew in Taj Mahal city of Agra: Truck crushes four
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007
ஆக்ராவில் வன்முறை
![]() |
![]() |
வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர் |
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் புதன்கிழமை காலை, நான்கு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஷபே –பராத் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியபோது, நான்கு இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்புப் படை வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அத்துடன், போலீசார் மீது சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். சில தொழிற்சாலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில்தான் உள்ளது. அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
——————————————————————————————-
லாரி மோதி 4 இளைஞர்கள் இறந்ததால் ஆக்ராவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
ஆக்ரா, ஆக.30: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை லாரி மோதி இறந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 12 லாரிகள் உள்பட 22 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.
நகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் இறந்த 4 இளைஞர்கள்: சுபாஷ் பூங்கா பகுதி அருகே 4 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் இறந்தனர். சந்த், கம்ரான், வாஸிம், வாஹித் ஆகியோர் அந்த இளைஞர்கள். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் நடத்திய தாக்குதல் வன்முறையில் முடிந்தது.
வன்முறையாளர்கள் கடைகளுக்குத் தீ வைத்தனர். இரண்டு ஆலைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் போலீஸ், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும்.
5 அதிகாரிகள் உள்பட 50 போலீஸôர் காயம்: வன்முறையாளர்கள் தாக்குதலில் 50 போலீஸôர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் ஒன்றில் புகுந்த கும்பல் போலீஸôரை தாக்க முயன்றது.
வன்முறை கும்பலைக் கலைக்க வானை நோக்கி போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பட்டதில் ஒருவர் இறந்தார். போலீஸ் தடியடி பிரயோகம் செய்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
மதுரா, அலிகார், பெரோஸôபாத் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். ஆக்ராவில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அவதி: சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்கி யுள்ளனர். அந்தப் பகுதியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் வருகிறது. ஹோட்டலை விட்டு தாங்கள் குறிப்பிடும் வரை வெளியே வர வேண்டாம் என்று போலீஸôர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நஷ்டஈடு: வன்முறை சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
“விபத்தில் நான்கு இளைஞர்கள் இறந்த சம்பவத்துக்கு போக்குவரத்து நிர்வாக குறைபாடே காரணம். கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட லாரி வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்’ என்று உள்துறை உயரதிகாரி ஜே.என்.சேம்பர் லக்னௌவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நகர நிர்வாகம் மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அமைதி காக்குமாறு மதத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்