Dalit Conference – Congress is sold to other parties for MLA, MP Seats: Cong(I) MLA speech
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007
காங்கிரஸை அடகு வைத்துவிட்டார்கள்: தலித் மாநாட்டில் எம்.எல்.ஏ. பேச்சு
சென்னை, ஆக. 26: பதவி ஆசைக்காக, காங்கிரஸ் கட்சியை, வேறொரு கட்சியிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் போளூர் வரதன் புகார் தெரிவித்தார்.
சென்னையில் தேசிய ஜனநாயக தலித் இயக்க மண்டல மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில்
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி,
- மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,
- டி. சுதர்சனம் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
அனைவரது முன்னிலையிலும் போளூர் வரதன் பேசியது:
4 பேர் மத்திய அமைச்சர் ஆவதற்கும் சிலர் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்காகவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வேறொரு கட்சியிடம் சிலர் அடகு வைத்துவிட்டார்கள்.
சொரணை இருந்தால் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். மக்களுக்கு பணியாற்றி கட்சியை நிலை நிறுத்த வேண்டும்.
தலித் மக்கள் தான் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம். இவர்களின் நலனுக்காக போராடினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குக் கிடைக்கும்.
எனவே, பதவிக்காக அலைவதை விட்டுவிட்டு தலித் மக்களுக்காக போராடுங்கள் என்றார் போளூர் வரதன்.
கிருஷ்ணசாமி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி பேசியது:
போளூர் வரதன் எற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு வருவதை சிலர் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அப்படித் தான். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக போராடுவது அவர்களுக்கு பிடிக்காது என்றார்.
2 ஆயுள் தண்டனை தேவையா? இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் டி. யசோதா பேசியது:
தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 40 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் அளிக்காமல் புறக்கணித்துவிட்டனர்.
இது 2 ஆயுள் தண்டனைக்குச் சமம். இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம்.
தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிக்காக போராடிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த அளவுக்கு தண்டனை தேவையா என தமிழக மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் யசோதா.
மறுமொழியொன்றை இடுங்கள்