Cuddalore – PMK vs Dalit Panthers party squabbles
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007
பாமக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்: விடுதலைச் சிறுத்தைகள் மூவர் கைது
கடலூர், ஆக. 26: கடலூரில் பாமக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடந்த 17-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன் பிறந்ததின விழா, தமிழர் எழுச்சி மாநாடாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.
மாநாட்டுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாமக அலுவலகம் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பேனர் கிழிக்கப்பட்டது.
இதுகுறித்து பாமக மாவட்ட அலுவலக செயலர் போஸ்ராமச்சந்திரன், கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக, கடலூர் செல்லங்குப்பம் விடுதலைச் சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர் சேதுராமன் (27), தோட்டப்பட்டு வெங்கடேசன் (27), குண்டு உப்பளவாடி முத்து (25) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் பலரை போலீஸôர் தேடி வருகிறார்கள்
மறுமொழியொன்றை இடுங்கள்