அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்பட்டது.
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய அமைச்சரவையும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டபிறகு, தலை வெட்டப்பட்ட கோழிகளைப் போல அங்கும் இங்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் தெரிவித்த கருத்துக்களுக்களுக்கு ரோனன் சென் மன்னிப்புக் கேட்டிருப்பதாக அவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவையில் அறிக்கை அளித்தார். ஆனால், உறுப்பினர்கள் அந்த அறிக்கையால் சமாதானம் அடையவில்லை.
ரோனன் சென்னை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அவரைக் கூண்டில் நிறுத்தி கண்டிக்க வேண்டும் என்றும் இடதுசாரி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையடுத்து ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.