Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

President polls: Shekawat contest as independent – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

ஷெகாவத்தின் வாழ்க்கை வரலாறு: போலீஸ்காரராக இருந்து புகழேணியின் உச்சிக்கு…

புது தில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் (84) கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்.

ஏழைக் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டத்தில் உள்ள கச்ரியாவாஸ் என்ற இடத்தில் ஏழை ராஜபுத்திர விவசாயக் குடும்பத்தில் ஷெகாவத் பிறந்தார்.

இளவயதிலேயே தந்தையை இழந்தார். எனவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தார், ஆனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் மாநில காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.

3 முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மொத்தம் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்தியோதயா, வேலைக்கு உணவு போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்தார்.

அரசியல் பிரவேசம்: 1952-ல் பாரதீய ஜனசங்கக் கட்சியில் சேர்ந்தார். அது முதல் 1972 வரை ராஜஸ்தான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1974 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். குடியரசு துணைத் தலைவராக 2002 ஆகஸ்டில் பதவியேற்றார்.

  • 1977 முதல் 1980 வரை,
  • 1990 முதல் 1992 வரை,
  • 1993 முதல் 1998 வரை என்று மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கலைத்தார். அப்போது ஒரு முறையும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ஷெகாவத்தின் அரசை மத்திய அரசு கலைத்தது.

ஷிண்டேவைத் தோற்கடித்தார்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ்காரரான சுசீல் குமார் ஷிண்டே, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை ஷெகாவத் தோற்கடித்தார். ஆனால் அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருந்த வாக்குகளைவிட 40 வாக்குகள் அதிகமாக அவருக்கு விழுந்தன. அவை மாற்றுக் கட்சிகளிலிருந்து அவர் மீது உள்ள அன்பு, மரியாதையால் போடப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனக்குக் கிடைக்கும் என்று ஷெகாவத் நம்புகிறார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்திச் செல்ல முற்பட்டார் ஷெகாவத். அப்போது காங்கிரஸýம் அதன் தோழமைக் கட்சிகளும் அங்கே பெரும்பான்மை பலத்துடன் இருந்தன. ஆனால் ஷெகாவத் தனது பொறுமை, திறமை காரணமாக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடத்திக்காட்டினார். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் ரகளை செய்தாலும் கடுமையாகக் கண்டித்து திருத்தினார். கேள்வி நேரம் முக்கியம் என்று கருதியதால் அதற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

கிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை நன்கு அறிந்தவர். மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.

ராஜஸ்தானில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலன்களை அளித்தவர்.

எல்லா கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். ஜாதி, மத வித்தியாசம் பாராது பழகுகிறவர்.
——————————————————————————————–
ஷெகாவத் வேட்பு மனு தாக்கல்: பாஜக அணி தலைவர்களுடன் நட்வர் சிங்கும் வருகை

புதுதில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக உயர் தலைவர்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கும் இருந்தார்.

மக்களவைச் செயலரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.டி.டி. ஆச்சாரியின் அறைக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் 7 மாநில முதல்வர்கள் புடைசூழ ஷெகாவத் காலை 11.30 மணிக்கு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு 11.12 மணிக்கே வந்திருந்தார். தனித்தனியாக இரு வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியிடம் ஷெகாவத் அளித்தார். அவற்றில் 128 எம்.பி.க்கள், 138 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 266 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.

வேட்புமனு தாக்கலின்போது

  1. எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி,
  2. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,
  3. பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,
  4. ஜஸ்வந்த் சிங்,
  5. முரளி மனோகர் ஜோஷி,
  6. கூட்டணித் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
  7. சரத் யாதவ்,
  8. பி.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

7 முதல்வர்கள்:

  1. நரேந்திர மோடி (குஜராத்)
  2. வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்),
  3. நவீன் பட்நாயக் (ஒரிசா),
  4. பி.சி.கந்தூரி (உத்தரகண்ட்),
  5. ரமண் சிங் (சத்தீஸ்கர்),
  6. சிவராஜ் சிங் சௌஹான் (மத்தியப் பிரதேசம்),
  7. பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகிய மாநில முதல்வர்களும் வேட்புமனு தாக்கலின் போது இருந்தனர்.

பாந்தர் கட்சி ஆதரவு: ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காங்கிரஸýடன் உறவை முறித்துக் கொண்ட பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங்கும் வந்திருந்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான தலைவர் ஷெகாவத் என்று அவர் சொன்னார்.

ஆதரவு கோஷம்: ராஜஸ்தானிலிருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தில்லி வந்திருந்தனர். அவர்கள் ஷெகாவத், தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்த போதும், அவர் மனு தாக்கல் செய்து விட்ட போதும் “ராஜஸ்தானின் ஒரே சிங்கம் பைரோன் சிங்’ என்று முழக்கமிட்டனர். “ஹிந்துஸ்தானத்துக்கு ஒரே சிங், அவர் பைரோன் சிங், பைரோன் சிங்’ “ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் சிலர் கோஷமிட்டனர்.

திரிணமூல், சிவசேனை ஆப்சென்ட்: ஷெகாவத் வேட்புமனு தாக்கலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் மற்றும் சிவசேனை கட்சியினர் வரவில்லை.

“திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பெயரும் ஷெகாவதுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. திரிவேதி தில்லி வரும் விமானம் தாமதம் காரணமாக அவரது கையொப்பத்தைப் பெற முடியவில்லை. மற்றொரு வேட்புமனு ஷெகாவத்துக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் திரிவேதி உள்ளிட்டோர் கையொப்பம் இடம்பெறும்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“வேட்புமனு தாக்கலின்போது நட்வர் சிங் வந்துள்ளதும் அவர் முன்மொழிந்து கையொப்பம் இட்டுள்ளதும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைக்க வழிவகுக்கும்.

“குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்- சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும். வெற்றியாளராக ஷெகாவத்தே இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

“மனசாட்சிப்படி வாக்குகளிக்குமாறு கேட்டுக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸின் அதிகாரப் பூர்வ வேட்பாளாரைத் தோற்கடிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அதற்கு இழிவான பெயரை தேடிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வாக்களிக்கும்போது கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஷெகாவத் தவிர்த்து விட்டார். ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு “தேர்தல் களத்தில் இப்போதுதான் குதித்துள்ளோம்’ என்றார் வாஜ்பாய்.

—————————————————————————————

தன்மீதான குற்றச் சாட்டுகளுக்காக
ஷெகாவத் போட்டியிலிருந்து விலகிவிடுவாரா?
`அவுட்-லுக்’ இதழ் அம்பலப்படுத்துகிறது

சென்னை, ஜூலை 5- “பிரதிபா பாட்டில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை யில் அவரை காங்கிர° கட்சி வாப° பெறவேண்டும்; அல் லது பிரதிபா பாட்டிலே போட் டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் ஜெயலலிதா!

“இது ஒரு வெட்கக்கேடான சூழ்நிலை” என்றும் அங்க லாய்த்திருக்கிறார் அவர்!
பிரதிபா பாட்டில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை – ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றமே தள்ளு படி செய்த அதே தினத்தில் தான் ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் செய்தியாளர் களிடம். இதனை அறியாமை என்பதா? அகம்பாவம் என் பதா?

பிரதிபா பாட்டிலை வெல்ல முடியாது; பா.ஜ.க.,வின் ‘சுயேச்சை வேட்பாளர்’ தோற் பது உறுதி என்ற நிலையில் விரக்தி, ஏமாற்றம் எரிச்சலுக் காளான பா.ஜ.க.,வினர் யார் யாரையோ கிளப்பிவிட்டு பிர திபா பாட்டிலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் என்ற பெய ரில் சேற்றை வாரி இறைத்த படியே இருக்கிறார்கள்.

பா.ஜ.க.,வினரால் பகிரங்க மாக ஆதரிக்கப்படுபவரும், ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு பெற்றவருமான ஷெகா வத் மீது இந்த மாதிரி குற்றச் சாட்டுகள் கூறப்பட்டால் – அவரை போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வைத்து விடு வார்களா இவர்கள்? அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா? இரண் டுமே நடக்காது; நடக்கவே நடக்காது.

ஷெகாவத் மீது குற்றச் சாட்டு எதுவுமில்லையா? அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற் பட்டவரா?

9-7-2007 தேதியிட்ட ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு – ஷெகாவத் மீதும் பல ஊழல் -லஞ்சம் – முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

1947-இல் ஷெகாவத் ஒரு சாதாரணப் போலீ°காரராக இருந்தார். அப்போதே அவர் லஞ்சம் வாங்கினார் – நடத்தை கெட்டவர் என்று குற்றஞ்சாட் டப்பட்டு பணியிலிருந்து ச° பெண்ட் செய்யப்பட்டார்.

1990-இல் அவர் ராஜ°தான் முதல்வராக இருந்தார். அப் போது அவர் தனது மருமகன் செய்த நில மோசடிக்கு முட் டுக்கொடுத்து – மருமகனைப் பாதுகாக்க அதிகார துஷ்பிர யோகம் செய்தார் என்று பத் திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டது.

ஷெகாவத்தின் மாப் பிள்ளை நர்வத்சிங் ரஜ்பி. (இவர் இப்போது ராஜ°தான் பா.ஜ.க., அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி யில் இருக்கிறார்).
ஷெகாவத் முதல்வராவதற்கு முந்தைய காங்கிர° ஆட்சியில் பிகானீர் மாவட்டத்தில் இந் திரா காந்தி பெயரால் பாசனம் – குடிநீருக்காக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது “கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் 650 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது.

ஆகவே அதற்குரிய நஷ்டஈடு தர வேண்டும்” என்று கோரினார் ஷெகாவத்தின் மாப்பிள்ளை.

அது அவருக்குச் சொந்த மான நிலமல்ல; போலி ஆவ ணங்கள் – மோசடியான ஆதா ரங்களைக் காட்டி நிலம் தன் னுடையது என்று தில்லு முல்லு செய்கிறார் அவர் என்று அப்போது அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன – சட்ட மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. சுரேந் திர வியா° என்ற காங்கிர° உறுப்பினரின் இடைவிடாத முயற்சி காரணமாக – இந்த விவகாரத்தை விசாரிக்க – வருவாய்த்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ஷெகாவத் தின் மாப்பிள்ளை சொல்வது உண்மைக்கு மாறானது; அவ ருக்குச் சொந்தமல்ல அந்த நிலங்கள்.

அப்போது, ஷெகாவத்தின் சம்பந்தியும், மாப்பிள்ளையின் தகப்பனாருமானவர் தாசில் தாராக உத்தியோகத்திலிருந் தார். அவர் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு – போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களை மகன் ரஜ்பி பெய ரில் பதிவு செய்து விட்டார். இதிலே அவரையும் அறியாமல் அவர் செய்துவிட்ட தவறு – ரஜ்பி பிறப்பதற்கு முன் தேதி யிட்டு பதிவு செய்திருந்ததினால் – இது முழுக்க முழுக்க மோசடி என்பது அம்பலமாகி விட்டது.

அதே காலகட்டத்தில் முதல் வர் ஷெகாவத்துக்கு மிகவும் நெருக்கமானவரான ஷாலினி சர்மா – மாநில சமூகநல வாரி யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்! சில காலத் துக்குப் பிறகு விபசாரத் தொழி லில் ஈடுபட்டதாக ஷாலினியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்கள் – இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியது!

அப்போது அவர் ஏற்கெ னவே பா.ஜ.க., அமைச்சரவை யிலுள்ள முக்கிய அமைச்சர் களுக்கு இந்த மாதிரி விஷயங் களுக்கு சப்ளையர் ஆக இருந் தவர் என்ற திடுக்கிடும் தகவ லும் வெளிவந்தது. ஷெகாவத் – அவரது மருமகன் ரஜ்பி ஆகிய இரண்டு பேருமே ஷாலினியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்கள் என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின!

1992-இல் ஷெகாவத் அரசு குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. “இந்த மசோதா ஷெகாவத்தின் உற வினர்கள் சிலரை நில மோசடிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுவ தற்கென்றே கொண்டு வரப் பட்ட மசோதா” என்று அப் போதே சுரேந்திர வியா°-மத்திய உள்துறை அமைச்சர் எ°.பி.சவானுக்குக் கடிதம் எழுதி – ஷெகாவத்தின் உறவி னர்கள் அரசு ஆவணங்களில் செய்த நில மோசடியைப் பாது காக்கும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

2002-2003-இல் ஷெகாவத் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே – 16 முறை டில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான ராஜ°தானுக்கு அரசாங்க செலவில் விமானத் தில் பறந்தார். எதற்காக?

அது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்ய – பரிந்துரை செய்ய இப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து 16 முறை விமானப் பயணம் செய் தார் ஷெகாவத்.

ஷெகாவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பெண் கள் மீதான பாலின பலாத் காரம் தொடர்பான அக்கிர மங்கள் முந்தைய காலகட் டத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்தன. இதுபற்றிக் கருத் துக் கூறிய ஷெகாவத், “அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடைபெறும் கற்பழிப்புச் சம்பவங்களை பெரிதுபடுத்து வதா?

இதற்குப் போய் இவ் வளவு ஆர்ப்பாட்டங்களை பெண்கள் நடத்துவது ஏன்” என்றார்!

இவர் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் எல்லாம் ராஜ°தானை ஒரு இந்துத்வா கோட்டையாக மாற்றிட அரும்பாடு பட்டார். “உங்கள் ஆட்சியில் மு°லிம்கள் கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகி றார்களே; சிறுபான்மை மக் கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படுகிறார்களே” என்ற கேள்வி எழுந்தபோது, “தொடர்ந்து காங்கிர° கட்சி மு°லிம்களைத் திருப்திப்படுத்த முயன்று கொண்டே இருக்கு மானால் – ராஜ°தானும் இன் னொரு குஜராத் ஆகிவிடும்” என்று கொக்கரித்தார் ஷெகா வத்!

இப்படி `அவுட்-லுக்’ வார ஏடு ஷெகாவத் மீதான லஞ்சம் – மோசடி -மதத் துவேஷம்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக் காகப் பட்டியலிட்டு இருக் கிறது!
இப்படி பா.ஜ.க.,வினர் நிறுத் தியுள்ள வேட்பாளரின் ‘யோக் கியத்தன்மை’ வெட்ட வெளிச் சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரதிபா பாட்டிலைப் பற்றி குற்றச்சாட்டுகளைக் கூற இவர் களுக்கு என்ன அருகதை இருக் கிறது? குறிப்பாக ஜெயலலிதா இதுபற்றி வாய் கிழியப் பேச என்ன யோக்கியதை இருக் கிறது?

(நன்றி: `முரசொலி’ 5-7-2007)

——————————————————————————————-

சொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்

13 ஜூலை 2007 – 19:39 IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் தனது சொத்து விவரங்களை இன்று வெளியிட்டார்.

இதன்படி ஷெகாவத்தின் வங்கி கணக்கில் ரூ. 25.60 லட்சமும், கையிருப்பாக ரூ. 1 லட்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வாரின் வங்கிக் கணக்கில் ரூ. 25.86 லட்சமும், கையிருப்பாக ரூ. 1.25 லட்சமும் உள்ளது. இதுதவிர சூரஜ் சேமிப்புக் கணக்கில் ரூ.5,849 ரொக்கம் உள்ளது.

பைரோன்சிங் ஷெகாவத்துக்கு என ரூ. 1 லட்சம் மதிப்புடைய நகைகள் உள்ளன. இதிலும் ஷெகாவத்தை மிஞ்சியுள்ளார் அவரது மனைவி சூரஜ். அவரிடம் ரூ. 5.25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருக்கின்றன.

இதுதவிர ரூ. 3.90 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும் அவர் வைத்துள்ளதாக சொத்துக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மூதாதையர் சொத்தாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் ஷெகாவத்துக்கு சொந்தமாக உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ஜெய்பூர் மாவட்டத்தில் 6.28 ஹெக்டேர் நிலம் உள்ளது.

கணவன் மனைவி இருவர் பெயரிலும் எந்த வங்கியிலோ அல்லது அரசு துறைகளிலோ எவ்வித தொகையும் நிலுவையில் இல்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் ஐமுகூ வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வலியுறுத்தின.

இந்நிலையில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக தேஜகூ ஆதரவு பெற்ற ஷெகாவத் தனது சொத்து விவரங்களை வெளிட்டுள்ளார்.

———————————————————————————————————–

வருவாய்த் துறை ஊழல் வழக்கிலிருந்து மருமகனைக் காப்பாற்றிய ஷெகாவத்: காங்கிரஸ் தாக்கு

லக்னெü, ஜூலை 16: வருவாய்த் துறை ஊழல் வழக்கில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றியவர்தான் ஷெகாவத் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மேலும் அவர் கூறியது:

பிரதிபா மீதான பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஷெகாவத்தை நிறுத்துவது தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது அவர்களுக்கிடையேயான பிரிவைக் காட்டுகிறது.

இன்னொரு வகையில், கட்சிக்குள் ராஜ்நாத் சிங்குக்கும், அத்வானிக்கும் இடையே நிலவும் பனிப்போர் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் அவர்கள் பிரதிபா மீதான குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளனர்.

பாஜக தலைவர்களான அருண்ஜேட்லியும், ரவிஷங்கரும் பிரதிபா மீது குற்றம்சாட்டினர். இதற்கு ஷெகாவத்தின் தூண்டுதலே காரணம். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை, விமர்சனங்களையும் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஷெகாவத் தெரிவித்தார்.

ஆனால், அவரது தூண்டுதலின் பேரில்தான் தற்போதும் பாஜக தலைவர்கள் பிரதிபா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.

ஷெகாவத் தோல்வியுற்றவர்: தனது இதுவரையிலான அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வி என்பதே கிடையாது என்று ஷெகாவத் சமீபத்தில் கூறியிருந்தார். இதை நான் மறுக்கிறேன். குஜராத் காந்திநகர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும், ராஜஸ்தான் கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும் ஷெகாவத் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தற்போது மதச்சார்பின்மையை குறித்து பேசிவரும் ஷெகாவத், குஜராத் இனக் கலவரத்துக்கு பிறகு, ராஜஸ்தானையும் குஜராத் போல மாற்றுவோம் என்று கூறியவர்தான்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பிரதிபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். அதுபோல, ஷெகாவத்தும் துணைக் குடியரத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து தனது துணிச்சலை நிருபிக்க வேண்டும்.

பிரதிபா தனது நீண்டகால அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்றார் கெலாட்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக மூன்றாவது அணி எடுத்துள்ள முடிவு குறித்து கேட்டபோது, வாக்களிப்பை புறக்கணிப்பதைவிட நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் ஒரு பெண்மணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்றார் கெலாட்.

————————————————————————————–

தினமலரில் வந்த தகவல்.

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

உதாரணம்:

ஆந்திர மாநிலம்

மொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148

மிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்

உத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7

ஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?

* மாநில சட்டசபையில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெருக்கி கொள்ள வேண்டும்.

*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணிக்கை:

* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.

* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.

* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.

* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

மொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு

வேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட

வேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.

பதவிக்காலம்

* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

ஓட்டுச் சீட்டு

* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.

* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.

* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக “1′ என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக “2′ என குறிப்பிட வேண்டும்.

ஒரு பதில் -க்கு “President polls: Shekawat contest as independent – Biosketch”

  1. bsubra said

    ஷெகாவத்துக்கு காங்கிரஸ் முதல் “பதிலடி’!

    புதுதில்லி, ஜூலை 7: “”1942-ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கீழ் ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் பிரிட்டிஷ் போலீஸில் வேலைக்குச் சேர்ந்தவர்தான் பைரோன் சிங் ஷெகாவத்” என்று கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார் பைரோன் சிங் ஷெகாவத். அவரை ஆதரிக்கும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் முதல் முறையாக, வெளிப்படையாக ஷெகாவத் மீது குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ்.

    குடியரசு துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஷெகாவத் மீது குற்றம் சாட்டுவதன் மூலம், குடியரசுத் தலைவர் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தரம்தாழ்த்துகிறது என்ற குற்றச்சாட்டையும் அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி மறுத்துள்ளார்.

    ஷெகாவத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் தான் எழுப்பவில்லை என்று குறிப்பிட்ட சிங்வி, உண்மையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்கெனவே அம்பலத்துக்கு வந்தவைதான் என்றார். இந்தியா சுதந்திரம் பெற்ற ஓராண்டு கழித்து போலீஸ் துறையில் இருந்து ஷெகாவத் விலகியதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

    ஷெகாவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவர் மீது நேரடியாக சுமத்தப்படுபவை. ஆனால், பிரதிபாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் அவருடைய நேரடிப் பங்கு பற்றியவை அல்ல. அவரோடு சம்பந்தப்பட்டவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

    ஷெகாவத் தொடர்பாக பொது அரங்கில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அவருடைய தேர்தல் பிரசார மேலாளர்களாக செயல்படுபவர்கள் பதிலளிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: