Madurai CM Mu Ka Alagiri & Mathurai West By-polls – Kalki Analysis
Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007
மதுரையில் ஒரு சி.எம். :: இடைத்தேர்தல் ட்ரெயிலர் (கல்கி)
Kalki 24.06.2007
– ப்ரியன்
வேண்டுமென்பதை மாநில அரசு கட்டாயமாக்கியது. சென்னையிலும், திருச்சியிலும் போலீஸ் மிகவும் தீவிரமாக இதை அமல்படுத்துவதைப் பார்த்த நிருபர், மதுரையில் ஜங்ஷனுக்கு எதிரே, ஹெல்மெட் இல்லாமல் சென்ற ஒருவரிடம் “இங்க ஹெல்மெட் கட்டாயம் இல்லையா?” என்று அப்பாவித்தனமாக கேட்க, வாகனத்தில் இருந்தவர் சொன்னார்: “எங்க சி.எம். இதைப் பற்றி ஒண்ணும் சொல்லல.”
நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. “சி.எம்மா” என்று இழுக்க, “அட
புரியலையா? அழகிரி அண்ணன்தான் எங்க சி.எம்.” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்திருக்கிறார் அந்த நண்பர்.
மதுரையில் மட்டுமல்ல, மதுரையை ஒட்டிய சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தேனி மாவட்டங்களின் ஆளுங்கட்சி வட்டாரங்களிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும், உச்சநிலை அதிகார மையமாகத் தெரிபவர் மு.க.அழகிரிதான். டிரான்ஸ்· பர், போஸ்டிங், காண்ட்ராக்ட் என்று எதையெடுத்தாலும், ‘அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்’ என்று நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள் கேட்பது சகஜம். இதுபோன்ற பேச்சுக்கள் கீழ்மட்ட அளவில் பரவ, பாமரர்கள் மத்தியிலும் ஒரு சி.எம்.முக்குரிய இமேஜுடன் வலம் வருகிறார்
அழகிரி.
அழகிரியின் இருபது வருட மதுரை வாசம், அவரை பல விதங்களில் மாற்றியிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார மையமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்படும் சசிகலாவுக்கும்,
அழகிரிக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. இருவரும் வீடியோ கேஸட் கடை வைத்திருந்தவர்கள்தான்.
“1985 – 86 காலகட்டத்தில் முரசொலி மதுரை பதிப்பை பார்த்துக்கொள்வதற்காக வந்தவர். ஒரு ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருப்பார். பின்னர் முரசொலி நின்று போனது. அப்போதுதான் வீடியோ கடை துவங்கினார்” என்று சொல்கிறார் அவருடன் அந்த நாளில் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர்.
கிட்டத்தட்ட 1992 வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் அழகிரி. வைகோ பிரிந்தபோது பொன். முத்து ராமலிங்கம் உடன் சென்று விட, மதுரையில் கட்சி கலகலத்தது. களத்தில் குதித்த அழகிரி, வீடு வீடாகச் சென்று கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து
கட்சியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். 1996-ல் கலைஞர் அரசு வந்தது அவருக்குச் சரியான ஏற்றத்தைக் கொடுத்தது. அதன்பின் மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அழகிரிக்கு என்று கட்சி ¡£தியாக ஒரு பின்பலம் உருவாயிற்று.
கலைஞர் ஆட்சி நடந்த 1996 – 2001-ல் தாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஓர் அதிகார மையமாக இருப்பதை உணர்த்தியவர் அழகிரி.
2000-ம் ஆண்டு நெருக்கத்தில் தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காவிரி மணியத்தை, தான் சிபாரிசு செய்ததாகவும், ஆனால், தி.மு.க. தலைமை கேட்கவில்லை என்றும் சொன்னார்
அழகிரி. இதன் விளைவாக மதுரையில் கலவரச் சூழல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. “அழகிரி கட்சி உறுப்பினரே இல்லை” என்று அறிக்கை விட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன். இந்தக் காலகட்டத்தில் மறைந்த பழனிவேல் ராஜனுக்கும்
அழகிரிக்கும் உரசல்கள் ஏற்பட, கசப்புணர்வு வளர்ந்தது. கடுப்பில் இருந்த அழகிரி, பழனிவேல்ராஜன் உட்பட மூன்று தி.மு.க. வினர் 2001 தேர்தலில் தோற்கக் காரணமாக இருந்தார்” என்கிறார் ஒரு மூத்த உடன் பிறப்பு.
ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம், கட்சி மட்டத்தில் அழகிரியின் இமேஜை உயர்த்திவிட்டது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மேயர் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க, துணை மேயரைத் தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி இல்லை. ஆனால் அழகிரி, எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் வளைத்துப் போட்டு, துணை மேயர் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார். அதே போல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பாக முழு மூச்சாக அச்சப்படாமல் பணியாற்றினார் அழகிரி.
இதற்கிடையே, அழகிரிக்கும் சிவகங்கை தா.கிருஷ்ணனுக்கும் இடையே மோதல் துவங்கியது. அழகிரி சிவகங்கை சிவராமனை உயர்த்தப் பார்த்தார். தா.கி.க்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், டெண்டர், வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள்… அதிகாலை வாக்கிங்கில் தா.கி. கொலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அழகிரி ஒரு மாதம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் இருக்கிறார்.
2004-ல் தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் அழகிரியின் செல்வாக்கு உயர்ந்தது. 2006 தேர்தலில் தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும். அடித் தளத்தை நன்கு உருவாக்கியிருந்த அழகிரி வசம் சட்ட அங்கீகாரமில்லாத, அதிகார மையம் முழுமையாக வந்து சேர்ந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் என்று போஸ்டிங்கில் வர வேண்டுமென்றால், வந்து நீடிக்க வேண்டுமென்றால் அவரது தயவு தேவையாக இருந்தது.
திருச்சிக்கு அந்தப் பக்கம் உள்ள விவகாரம் என்றால் ‘அழகிரியை ஒரு வார்த்தை கேட்கவும்’ என்கிற எழுதப்படாத விதி உருவாயிற்று.
அழகிரி – ஸ்டாலின் மோதல் வரும் என்ற கிசுகிசுக்கள் உலவி வந்த சமயத்தில், தினகரன் விவகாரம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திவிட்டது. கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு ‘முழுப் பாதுகாப்புடன்’ அவர் வந்து சென்ற விதம், ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், கட்சியின் அரவணைப்பையும் உணர்த்தியிருக்கிறது.
தினகரன் விவகாரம் இல்லையென்றால் தி.மு.க.வே இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும். இப்போது காங்கிரஸ் நின்றாலும்
அழகிரிக்கு இது கௌரவப் பிரச்னை. பிரசாரத்தில் கதர் சட்டைகளைவிட தி.மு.க. படையே முக்கிய இடம் வகிக்கிறது.
அதிகார பலம், பணபலம், ப்ளஸ் ‘தொண்டர்’ பலம் ஆகியவற்றோடு இடைத்தேர்தல் களத்தில் சுற்றி வருகிறார் அழகிரி. காங்கிரசுக்கு
விழும் வோட்டுக்கள் உண்மையில் அழகிரிக்கு விழும் வோட்டுகளே!
– ப்ரியன்
இலவசங்கள் வேண்டாம்… விலைவாசியை குறைத்தால் போதும்!
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
இடைத்தேர்தலால் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகம் மறைவால் நடக்கும் இத்தேர்தலில், தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க.வும், இது அழகிரியின் மானப் பிரச்னை என காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க.வும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில்
குதித்திருக்கின்றன. யார் கை ஓங்கும்? மதுரையை ஒரு ரவுண்ட் வந்தோம்.
மதுரையில் நிஜமான போட்டி என்பது மூன்று வேட்பாளர்களுக்கு இடையே. தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், மு.க.அழகிரிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே. ராஜு மற்றும் தே.மு. தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன். இவர்கள் மூவருமே தொகுதிக்காரர்கள்.
தொகுதிக்குள் பெரும்பான்மையாக வசித்து வரும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.
“மதுரை மேற்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இத்தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் 24,000 வாக்குகள் பெற்றோம். அது போல இருமடங்குகளுக்கு மேலான வாக்குகளை இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பெற்றுவிட்டால், தே.மு.தி.க. வெற்றி பெற்றுவிடும். அதற்கு கேப்டனின் பத்து நாள் மதுரை கேம்ப், வாக்காளர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டு பண்ணிவிடும்!” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன்.
தற்போது இடைத்தேர்தல் நடக்கும் 20 வார்டுகளில், கடந்த மாநகராட்சித் தேர்தலில் தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு கவுன்சிலர் தி.மு.க. பக்கம் போய்விட்டார். தற்போது நான்கு வார்டுகள் தே.மு.தி.க. வசம். “நாங்கள் வசிப்பது
22-வது வார்டில். தே.மு.தி.க. வெற்றி பெற்ற வார்டு இது. தி.மு.க.-அ.தி.மு.க. ரெண்டையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டோம். புதுசா ஒருத்தர் வந்து வித்தியாசமா நல்லபடியா ஆட்சி பண்ணட்டும்னு தான் விஜயகாந்த் கட்சிக்கு வோட்டு போட்டு வர்றோம் என்று ஆர்வமுடன் பேசுகிறார் பொன்னகரம் பிராட்வே பகுதியில் வசித்து வரும் லாரி மெக்கானிக் காமாட்சி.
“அம்மாவாகப் பார்த்து எனக்கு அளித்திருக்கும் நல்வாய்ப்பு இது. பொது மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு என்று செல்வாக்குள்ள தொகுதி. ஆளுங்கட்சி செயல்பாடுகள் மீதான அதிருப்தி, விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக வெற்றி உறுதி!” என்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு.
சுயராஜ்யாபுரம் பகுதியில் நெசவாளக் குடும்பங்களில் பலரையும்
சந்தித்தோம். “நெசவாளிகளுக்கென்று நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கறதாச் சொல்றாங்க. அறுவது வயசுக்கு மேற்பட்ட நெசவாளிகளுக்கு மாத பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துட்டா இன்னும் நல்லா இருக்கும். எங்க ஓட்டு தி.மு.க.வுக்கு தான் என்று இணைந்து குரல் தருகின்றனர் ஜானகி (58), ஞானசுந்தர் (32).
ஆனால், செல்லூர் நெசவுக் கூடமொன்றில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி ஒருவர், பட்டிமன்ற ரேஞ்சுக்குப் பொரிந்து
தள்ளிவிட்டார். “ரேஷன் அரிசி தவிர மத்த எல்லா சாமானும் விலை ஏறிப் போச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு கிலோ மிளகாய் முப்பது ரூபா. இப்போ ஒரு கிலோ ஐம்பத்தைஞ்சு ரூபாய் விக்குது. இலவசங்களை நிறுத்தி வைச்சுட்டு, எல்லாப் பொருள்களின்
விலையேற்றத்தையும் குறைச்சாலே போதும்” என்று ‘லெக்சர்’
அடிக்கிறார் சாதாரண கூலித் தொழிலாளியான அங்காள ஈஸ்வரி.
தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட சம்பவத்தை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த அ.தி.மு.க. முனையலாம். அதனை முறியடிக்க துருப்புச் சீட்டு ஒன்றினைத் தன் கைவசம் வைத்துள்ளது தி.மு.க. மூன்றரை வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. வட்டச் செயலாளர் பால்பாண்டி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செல்லூர் ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டது. தினகரன் சம்பவத்தை அ.தி.மு.க. பிரசாரத்துக்குப் பயன்படுத்தினால், அ.தி.மு.க. வட்டச் செயலாளர் கொலைக் குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் ஊதி விடலாம் என அழகிரி தரப்பு வியூகம் அமைத்திருக்கிறது!
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
bsubra said
காசிப்ஸ்: Car for Azhagiri in Govt money by a State Minister – Thangam Thennarasu uses his Education portfolio for political donations: “அழகிரிக்கு அமைச்சர் கொடுத்த கார்”