Madurai Bye-elections – June 26 Polls: Congress, DMK, ADMK, Vijaikanth, Azhagiri
Posted by Snapjudge மேல் மே 26, 2007
மதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்!
வீர. ஜீவா பிரபாகரன்
மதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.
அதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.
தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
அரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.
எனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.
திமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.
அதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
தினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.
காங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.
தேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை
- கம்யூனிஸ்ட் 2 முறையும்,
- அதிமுக 4 முறையும்,
- திமுக,
- காங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
———————————————————————————————————————————
ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்
புதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.
தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.
வாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.
இடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
——————————————————————————————————————-
மதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு?
பா. ஜெகதீசன்
சென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.
எனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.
தி.மு.க. பின் வாங்கியது ஏன்?
அதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.
பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.
காங். நிலை:
இந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
அதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.
அ.தி.மு.க.வின் பிரச்னை:
இந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.
தேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.
கடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.
இந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.
2006 தேர்தலில்…:
2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.
சண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த தேர்தல்களில்…:
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):
1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.
1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.
1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.
1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.
1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.
1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.
1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.
1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.
2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.
அ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
—————————————————————————————————
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்
மதுரை, மே. 30-
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.
இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனாலும்
- மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்,
- மாவட்ட செயலாளர் ராஜாங்கம்,
- தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன்,
- அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,
- ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,
- கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை
- காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,
- மாணவரணி செயலாளர் உதய குமார்,
- முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,
- முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம்,
- முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,
- எம்.எஸ்.பாண்டியன்,
- தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்
- கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,
- விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
- மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.
கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.
ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.
எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.
————————————————————————————-
இடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா?
மதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.
சென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
விலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
உண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.
இதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
————————————————————————————-
மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜ×ன். 4-
மதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.
முதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
செல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.
செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.
2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
—————————————————————————————————–
மதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்
மதுரை, ஜுன். 9-
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.
இதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.
1. கோரிப்பாளையம்,
2. தல்லா குளம்,
3. கரும்பாலை,
4. தத்தனேரி,
5. பந்தல்குடி,
6. சின்னகீழத்தோப்பு,
7. மீனாம்பாள்புரம்,
8. ஜம்புரோ புரம்,
9. நரிமேடு,
10. செல்லூர்,
11. 50 அடிச்சாலை,
12. 60 அடி சாலை,
13. பி.டி.புரம்,
14. அருள்தாஸ்புரம்,
15. பெத்தானியாபுரம்,
16. அழகரடி,
17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.
இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.
பதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
bsubra said
காங்கிரஸ் வேட்பாளர் ஞானதேசிகன்
புதுதில்லி, ஜூன் 3: தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளராக பி.எஸ்.ஞானதேசிகனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இந் நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்புக் கொடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய இருப்பதாக ஞானதேசிகன் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனின் கடும் போட்டியையும் மீறி, ஞானதேசிகனுக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அதற்கு முதல் காரணம், கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவு இவருக்கு இருப்பது.
காங்கிரஸýடன் தமாக இணைந்தபோது, அதில் இருந்த எம்எல்ஏக்களுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்புத் தரப்பட்டது. அந்த அடிப்படையில், தமாகா மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸில் இணைந்த ஞானதேசிகனுக்கும் அந்த வாய்ப்புத் தரப்படுகிறது.
மேலும், மாநிலங்களவையில் அவரது செயல்பாடு மற்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவர் என்ற பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவருக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதில் வாசன் உறுதியாக இருந்தார்.
ஏற்கெனவே மூன்று முறை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருப்பவர் ஜெயந்தி நடராஜன். அமைப்பு ரீதியான எந்த பக்கபலமும் இல்லாத அவருக்கு வாய்ப்புத் தரப்படுவதைவிட, அந்த பலத்தைப் பெற்றுள்ள ஞானதேசிகனுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்றும் மேலிடத்திடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வந்தவாசி கிருஷ்ணசாமியும் வாய்ப்புக் கேட்டு கடுமையாக போராடி வந்தார். தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வந்திருந்தபோது, அவரிடமும் தனது பெயரை காங்கிரஸ் தலைமையிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஏற்கெனவே மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அவர், தலைவர் என்ற முறையிலும் செயல்படத் தவறிவிட்டதாக மேலிடம் கருதுகிறது. அதனால், அவருக்கு இன்னொரு முக்கியப் பொறுப்பை வழங்கத் தயாராக இல்லை.
ஞானதேசிகன் பின்னணி
கடந்த 1967-ல் காங்கிரஸில் இணைந்த ஞானதேசிகன், மாணவர் காங்கிரஸில் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். 1984-ல் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தலைவராக இவரை நியமித்தார் ராஜீவ் காந்தி.
திருப்பதி அகில இந்திய காங்கிரஸ் மாநாடு, மறைமலை நகர் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு, நேரு நூற்றாண்டு விழாவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.
ஜி.கே.மூப்பனார் தலைமையில் 1996-ல் தமாகா உதயமானபோது அவருடன் சென்றார். அப்போது, பொதுச் செயலராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இரண்டு முறை கட்சியின் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2001-ல் மூப்பனார் இவரை எம்.பி.யாக்கினார். 2002-ல் காங்கிரஸýடன் தமாகா இணைந்தபோது அதற்கு முக்கியப் பணியாற்றினார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த ஞானதேசிகன் (58), சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். இவரது தந்தை சிவகுருநாதன், ஓய்வு பெற்ற நீதிபதி.
bsubra said
மதுரை மேற்கு அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு
மதுரை, ஜூன் 5:இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக செல்லூர் கே. ராஜு (55) அறிவிக்கப்பட்டுள்ளார்.
பட்டதாரி: இவர் பி.எஸ்சி., பட்டதாரி. முக்குலத்தோரில் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இளம் வயதிலேயே அதிமுகவில் சேர்ந்த அவர் முதலில் மதுரை 16-வது வட்ட அதிமுக செயலராக இருந்தார். 1996-2001-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி கவுன்சிலராகவும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
2001-ம் ஆண்டில் நடைபெற்ற மேயர் தேர்தலில் செ. ராமச்சந்திரனை (திமுக) எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதிமுக நகர் மாவட்டச் செயலராக இருமுறை பதவி வகித்தார். அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர்.
கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போதும் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், எஸ்.வி. சண்முகத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அத் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.வி.சண்முகம் (அதிமுக) அரசு விழாவில் பங்கேற்றுப் பேசும்போது, திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும். அதற்கான முயற்சியை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார். இதனால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார்.
அறிமுகமானவர்: செல்லூர் கே. ராஜு இத்தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தொகுதி சார்பான பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” மதுரை மேற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நெசவாளர்கள் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வேன். வெள்ள நீர் பாதிப்பு இப்பகுதியில் இனி ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்’ என்றார்.
இவரது தந்தை காமாட்சித் தேவர். தாயார் ஒச்சம்மாள். மனைவி ஜெயந்தி. இவருக்கு ரம்யா, சௌமியா என்ற இரண்டு மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள்ளனர்.
கடந்த தேர்தல் வாக்கு விவரம்: எஸ்.வி. சண்முகம் (அதிமுக) 57,208. பெருமாள் (காங்கிரஸ்) 53,741, மணிமாறன் (தேமுதிக) 14,527.
bsubra said
இடைத்தேர்தல் பிரசாரத்தில் சிங்கம்?
மதுரை, ஜூன் 5: மதுரை மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் உயிருள்ள சிங்கத்தைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அகில இந்திய பார்வர்டு பிளாக் (தினகரன் பிரிவு) கட்சி வேட்பாளர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் சார்பில் தினகரன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது பிரசாரத்துக்கு தங்களது கட்சி சின்னமான சிங்கத்தை நிஜமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநகர் போலீஸ் ஆணையர், மாவட்ட வனத்துறை, மாநில தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மேலும், கொச்சியிலுள்ள சர்க்கஸ் நிறுவனத்தினரிடம் நிஜ சிங்கத்தை பிரசாரத்துக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுள்ளார்.
வேட்பாளரின் கோரிக்கை குறித்து மாநகர் போலீஸôரிடம் கேட்டதற்கு, தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் முடிவெடுக்க இயலும். போலீஸ் தரப்பில் இதுகுறித்து அனுமதிக்க விதியில்லை என்றனர்.
மாவட்ட வனத்துறையினரிடம் கேட்டதற்கு, விலங்குகளைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த அனுமதிப்பது எளிதானதல்ல. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, உயிருள்ள சிங்கத்தைப் பிரசாரத்துக்கு அனுமதிக்க இயலாது என்றனர்.
இதுகுறித்து வேட்பாளர் தினகரனிடம் கேட்டதற்கு, “அனுமதித்தால் உண்மைச் சிங்கத்தைப் பிரசாரத்தில் பயன்படுத்துவேன். இல்லாவிட்டால் 10 அடி நீளம், 4 அடி உயரத்தில் ரூ.10 ஆயிரம் செலவில் தயாரிக்கப்படும் பொம்மைச் சிங்கத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வேன்’ என்றார்.
bsubra said
சிங்கத்துடன் பிரசாரம் செய்யலாம்: நரேஷ்குப்தா
சென்னை: மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பார்வர்ட் பிளாக் (தினகரன் பிரிவு) கட்சித் தலைவர் தினகரன், நிஜமான சிங்கத்துடன் தேர்தல் பிரசாரம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என காவல்துறை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்காக ஒரு சிங்கத்தை கேரளாவிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து மதுரை பக்கம் ஒரு கிராமத்தில் வைத்து பராமரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து நரேஷ்குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சிங்கத்தை தேர்தல் பிரசாரத்திற்குக் கொண்டு செல்ல சட்டப்படியான தடை எதுவும் இல்லை. ஆனால் இது மக்களை அச்சுறுத்தும் வகையில் அமையக் கூடும்.
தேமுதிகவுக்கு தனியான, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஏதும் கிடையாது. எனவே அவர்களுக்கு சுயேச்சை சின்னம்தான் ஒதுக்கப்படும். தங்களுக்குத் தேவையான சின்னத்தைக் கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார் குப்தா.
bsubra said
மதுரை மேற்குத் தொகுதி : தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு
புதன்கிழமை, 6 ஜூன் 2007
மதுரை மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமார் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட முதுகலைப் பட்டதாரியான சிவமுத்துக்குமார், மதுரை மாநகரின் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆவார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.வி.சண்முகம் மரணமடைந்ததை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும், ஜூன் 1-ல் துவங்கிய இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், வரும் 8-ம் தேதியுடன் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் – வெப்துனியா)
bsubra said
மதுரை மேற்கில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன்
மதுரை, ஜூன் 8: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.எஸ்.கே. ராஜேந்திரன் (48) அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதன்முதலாக தேர்தல்களம் காணவுள்ள இவர் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
வேட்பாளர் விவரம்: இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். முக்குலத்தோரில் பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இளம் வயதிலேயே 1980-ம் ஆண்டு மாணவர் காங்கிரஸில் சேர்ந்த இவர், 1982-ம் ஆண்டு வரை மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலராக இருந்தார்.
பின்னர் 1996-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1998-ம் ஆண்டு முதல் கட்சியின் நகர் மாவட்ட துணைத் தலைவர்.
இவரது தந்தை உசிலம்பட்டி அருகே ஆரியப்பட்டியைச் சேர்ந்த கே.எஸ். கல்யாணித் தேவர், தாயார் வனத்தாய் அம்மாள். இவரது மனைவி ஆர். சந்தனம், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இவரது மகள், அதிமுக மதுரை நகர் மாவட்டச் செயலர் ராஜன் செல்லப்பாவின் மருமகள் ஆவார்.
bsubra said
மதுரை மேற்கு: வாசன் ஆதரவாளர் காங். வேட்பாளர்
புதுதில்லி, ஜூன் 8: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நகர் மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்திருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் ஆதரவாளரான இவர், பிரமலை கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன்,
காந்தி
உள்பட வாசனின் வேறு பல ஆதரவாளர்கள் களத்தில் இருந்தாலும், ராஜேந்திரனுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறார் சோனியா காந்தி.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் சில பெயர்களை, மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியிடம் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
bsubra said
மதுரை மேற்கு தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் வெ. சிற்றரசு
மதுரை, ஜூன் 8: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக மகாலிங்கம் என்ற வெ. சிற்றரசு (46) போட்டியிடுகிறார். அந்தக் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மதுரையில் வியாழக்கிழமை இதை அறிவித்தார்.
வேட்பாளர் விவரம்: வேட்பாளர் மகாலிங்கம் என்ற வெ. சிற்றரசு, மதுரை அவனியாபுரத்தில் வசித்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரி.
இவர் விவசாயி. தேநீர் கடையும் வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியிலும் தேவேந்திர குலவேளாளர் கூட்டமைப்பிலும் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்டச் செயலராக உள்ளார்.
2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருக்கு மனைவி உமாதேவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
bsubra said
மதுரை மேற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ரூ.2.30 கோடி சொத்து
மதுரை, ஜூன் 9: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களைத் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்:
காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்: சுமார் ரூ.2.30 கோடி மதிப்புக்கு இவரது பெயரிலும் மனைவி சந்தனம் பெயரிலும் சொத்துகள், பணம் உள்ளன. மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மனைவி சந்தனம் மற்றும் இவரது பெயரில் ரூ.41 லட்சத்தில் வீடு, ரூ.60 லட்சத்துக்கு வர்த்தகக் கட்டடம், கல்யாண மகாலில் ரூ.4,54,000-க்கு பங்கு முதலீடு, விநாயகர் நகரில் ரூ.31 லட்சத்துக்கு வீடு, அகிம்சாபுரத்தில் ரூ.3.60 லட்சத்துக்கு வீடு, மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் ரூ.15 லட்சம் மதிப்பு பங்கு, மனைவிக்கு ரூ.11.25 லட்சம் பங்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்.
கரடிப்பட்டியில் ரூ.6 லட்சத்துக்கு நிலம், கல்யாண மண்டபத்தில் மற்றவர்களின் பங்குத்தொகை ரூ.27 லட்சம்.
பணம் கையிருப்பு ரூ.4.30 லட்சம், நகை ரூ.90,530. வங்கியில் டெபாசிட் ரூ.3,64,491. மனைவியிடம் பணம் ரூ.2.90 லட்சம். நகை ரூ.7,24,240, வங்கியில் டெபாசிட் ரூ.1,08,418.
பாஜக வேட்பாளர் சசிராமனின் சொத்து விவரம்: ரூ.5.75 லட்சம் மதிப்பில் சுமோ கார் மற்றும் மோட்டார் சைக்கிள். வங்கி இருப்பு ரூ.1,000, மனைவி கீதா பெயரில் 20 பவுன் நகைகள்.
bsubra said
மதுரை மேற்கு தொகுதியில் கருணாநிதி- ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் விஜயகாந்த் 7 நாள் முற்றுகை
மதுரை, ஜுன் 10-
கே.எஸ்.கே.ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல் லூர் ராஜ× (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய ஜனதா), சிற்றரசு (புதிய தமிழகம்) உள்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். நாளை மாலையே வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படுகின்றன.
தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளதால் வேட்பாளர்களும் காலையில் இருந்து மாலை வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வருகிற 23-ந்தேதி மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசு கிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கூட்டணி கட்சி தலை வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக வருகிற 17-ந் தேதி நெல்லையில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் முதல்-அமைச்சர் கருணா நிதி அன்று இரவு மதுரை வருகிறார்.
இடைத்தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்தி விட்டு சென்னை செல்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜ×வை ஆத ரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 21-ந்தேதி மேற்கு தொகுதி முழுவதும் வேனில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். அன்று மாலை செல்லூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தே.முதி.க. தலைவர் விஜய காந்த் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 7 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொகுதி முழுவதும் வீதி, வீதி யாக சென்றுதே.மு.தி.க. வேட் பாளர் சிவமுத்துக்குமரனுக்கு ஆதரவு திரட்டுகிறார். விஜய காந்த் மனைவி பிரேமலதாவும் ஒரு வாரம் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரு கிறது.
பாரதீய ஜனதா மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகி யோரும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட அடுத்த வாரம் மதுரை வருகிறார்கள்.
புதிய தமிழகம் கட்சி தலை வர் கிருஷ்ணசாமி வரு கிற 24-ந்தேதி வரை மதுரை யில் தங்கி இருந்து அக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
bsubra said
தேர்தல் விதிமுறைகளை மீறும் அழகிரி: அதிமுக புகார்
மதுரை, ஜூன் 12: மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மாநகராட்சி ஆணையர், காவல்துறை உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகளை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும்.
முதல்வரின் மகன் மு.க.அழகிரி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பிரசாரத்துக்கு போலீஸôர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளரான அஜய்தியாகியிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் வே.ராஜன்செல்லப்பா அளித்த புகார் மனு விவரம்:
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டனர்.
அப்போது நாங்கள் கூறிய புகாரின் பேரில் சில போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தற்போதும் ஆளும் கட்சியுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள காவல்துறை அதிகாரிகள் பலர் மதுரையில் பணிபுரிகின்றனர்.
மாநகராட்சி கமிஷனரை மாற்ற வேண்டும்: மதுரை மாநகராட்சி ஆணையரான டி.ஜே.தினகரன் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போதே குளறுபடிகள் நடைபெறக் காரணமாக இருந்தார். அப்போது புகார் கூறப்பட்டதை அடுத்து தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் பணியிட மாறுதல் செய்யப்படவில்லை. தற்போது தேர்தல் நடைபெறும் தொகுதியின் ஏராளமான வாக்குச் சாவடிகள் மாநகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. எனவே இவரையும் வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும்.
தேர்தல் பணியில் சுயஉதவிக் குழுக்கள்: மதுரை மாநகராட்சி மற்றும் அரசு உதவியுடன் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. மதுரையிலுள்ள பல நவீன கழிப்பறைகள் சுயஉதவிக் குழுக்களால் பராமரித்து இயக்கப்படுகின்றன.
தற்போது இக் குழுக்களை ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில், மேயர் தேன்மொழி பயன்படுத்தி வருகிறார். இதற்கு ஆதாரமாக, பத்திரிகையில் வெளியான செய்திகளையும் இணைத்துள்ளேன்.
இதேபோல புகாருக்கு ஆளான குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் ராஜாராமன் மதுரையிலே பணியாற்றி வருகிறார்.
தேர்தலில் அழகிரி: மு.க.அழகிரியின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்தத் தேர்தல் பணியே பாதிக்கப்படலாம். ஏற்கெனவே அவரும், துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட சிலரும் ஒரு கொலை வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜு வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்வதே பெரும் சிரமமாக உள்ளது. மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற, நாங்கள் புகார் கூறியுள்ள அதிகாரிகளை வேறு மாவட்டத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
bsubra said
மதுரை ஆட்சியர், ஆணையர் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
புதுதில்லி, ஜூன் 14: மதுரை மேற்குத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதாக
* மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர்,
* கோட்டாட்சியரும் மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் அதிகாரியுமான அ. நாராயணமூர்த்தி,
* மதுரை மாநகர காவல் ஆணையர் ஏ. சுப்ரமணியன்,
* துணை ஆணையர் ஆர். ராமராஜன்,
* தல்லாகுளம் சரக (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன்,
* தல்லாகுளம் டி-1 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (சட்டம்- ஒழுங்கு) எம். ராஜேந்திரன்
ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கடந்த 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரியின் அறைக்குள் சுமார் 35 ஆதரவாளர்கள் முட்டி மோதிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு நேரத்தில் உடன் வர வேண்டும்.
அதேபோல், கடந்த 5-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கே. ராஜுவும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்ததாக ஆணையம் கூறியுள்ளது.
“”தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று கேட்டு இரு வேட்பாளர்களுக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மாற்றப்பட்ட 6 அதிகாரிகளுக்குப் பதிலாக, வேறு அதிகாரிகளை நியமிக்க, ஒவ்வொரு பதவிக்கும் தலா மூன்று பேர் கொண்ட பட்டியலை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
bsubra said
மதுரை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 3 ஆட்சியர்கள் இடமாற்றம்
மதுரை, ஜூன் 14 மதுரை மாவட்டத்தில், ஒரே ஆண்டில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாறுதல் அடைந்துள்ளனர்.
திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 2006 மே 25-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவியேற்றார்.
உள்ளூர் அரசியல் சார்ந்த பிரச்னைகளால் அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து 21.2.2007-ல் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற டாக்டர் கார்த்திகேயன் மூன்று தினங்கள் மட்டுமே ஆட்சியராகப் பணியாற்றினார்.
இந் நிலையில், செயலர் அந்தஸ்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய எஸ்.எஸ். ஜவஹர் மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த மார்ச் 7-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.