Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 21st, 2007

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »

Visually impaired Madurai student researches on Life sentenced inmates

Posted by Snapjudge மேல் மே 21, 2007

முகங்கள்: தந்தை காட்டிய வழியம்மா!

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை மத்தியச் சிறை. சிறையின் பெரிய கதவுகள் திறந்து அவர்களுக்கு வழி விடுகின்றன. அந்த இளம் பெண்ணும் அவருக்குத் துணையாக இன்னொரு பெண்ணும் உள்ளே நுழைகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளிடம் தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வினா நிரலைக் கொடுக்கிறார்கள். போய்விடுகிறார்கள். பின்னர் மீண்டும் வருகிறார்கள். கைதிகளோடு அன்போடு பேசு கிறார்கள்.

கேள்விகள்…பதில்கள்…கேள்விகள்…

அந்த இளம் பெண் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் எம்.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.பிரியா. ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்தது, தனது படிப்பிற்கான திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக. பிரியா எல்லாரையும் போல இருந்தால் தனியாகவே வந்து கூட ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்திருக்கலாம். சிறுவயதில் பார்வையை இழந்த அவருக்குத் துணையாக ஒருவர் வரவேண்டியிருக்கிறது. பிரியாவைச் சந்தித்துப் பேசினோம். சரளமாக எந்தவிதத் தடங்கலுமின்றி அவர் பேசுகிறார்.

”சிறுவயதில் நரம்பு பாதிப்பு காரணமாக கண் தெரியாமல் போச்சு. என் அப்பா எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் என்னால் எம்.ஏ. அளவுக்குப் படிக்க முடிந்தது. எங்க அப்பா 3 வது வரை படித்தவர்தான். டீக்கடை வச்சிருக்கார். ஆனால் என்னைப் படிக்க வச்சு கல்லூரிப் பேராசிரியராக்கிப் பாக்கணும்ங்கிறதுதான் அவுங்க லட்சியம். திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் டூ வரை படிச்சேன். அதற்குப் பின்பு பாத்திமா கல்லூரியில் பி.ஏ. இப்போது லேடி டோக் காலேஜில் எம்.ஏ. ஸ்கூல் படிக்கிறப்பவே ரொம்ப ஆக்டிவ்வா இருப்பேன். நிறையப் போட்டிகளில் கலந்துப்பேன். திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை லீவில் வீட்டுக்கு வரும்போது ஸ்கூலில் கொடுத்த நான்கைந்து பிரைஸ்களோடுதான் வீட்டுக்கு வருவேன்.

எங்க அப்பா எனக்குத் துணையாக இருக்கிறார் என்கிற தைரியம்தான் எம்.ஏ. திட்ட அறிக்கைக்காக ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசும் துணிச்சலைத் தந்தது. சாதாரணமாக நாலு புஸ்தகத்தைப் படிச்சிட்டுக் கூட ஆய்வறிக்கை தயார் பண்றவங்க இருக்காங்க. ஆனால் நான் ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு நெனைச்சேன். அதுவும் ஆயுள் தண்டனைக் கைதிங்க பாதிக்கப்பட்டவங்க. நான் பார்வையில்லாம பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்க லைஃப்ல நடந்த ஒரு இன்ஸிடென்ட்ல ஜெயிலுக்கு வந்திருக்காங்க. இந்த ஆயுள் தண்டனை வாழ்க்கையிலே அவுங்க நிறைய இழந்து பாதிக்கப்பட்டிருக்காங்க. எனவே அவுங்களைச் சந்தித்துப் பேசுறதுன்னு முடிவெடுத்தேன்.

மத்தியச் சிறைச்சாலைக்குள் சென்று ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசுறது ரொம்ப ஈஸின்னு நினைச்சேன். ஆனா அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லேன்னு போகப் போகத்தான் தெரிஞ்சது. டிஐஜி வரை பார்த்துப் பேசினேன். ஆனால் சென்னையில் ஐஜி அனுமதி தரணும்னு சொன்னாங்க. பெர்மிஸன் வாங்கவே 5 மாதம் ஆயிடுச்சி. பெர்மிஸன் தர்றதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. எங்க வீட்டுக்கு என்கொயரிக்கு வந்தாங்க. என் மேல் ஏதாவது போலீஸ் கேஸ் ஃபைலாகி இருக்கான்னு பார்த்தாங்க. கடைசில பெர்மிஸன் கொடுத்தாங்க.

பெர்மிஸன் கொடுத்தும் ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போய்ப் பார்க்க பயமா இருந்துச்சு. நான் ஒரு பெண். அதிலும் பார்வை இல்லாதவ. ஆயுள் தண்டனைக் கைதிங்க எப்படி இருப்பாங்களோ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில இருப்பாங்க. கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இருந்தும் தைரி

யத்தை வரவழைச்சிக்கிட்டு அமுதசாரதி என்கிற தோழியின் துணையோட நான் போனேன். ஆயுள்தண்டனைக் கைதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் தொகுத்து வினாநிரல் வடிவில் எடுத்துக்கிட்டுப் போனேன்.

அவுங்களோட பேசினவுடன்தான் நான் பயந்தது தப்புன்னு தெரிஞ்சது. அவுங்க கிட்ட பேசுறப்ப சொந்தக்காரங்க கிட்டப் பேசுறது மாதிரி உணர்ந்தேன். அவுங்க ப்ராப்ளம்ஸ் எல்லாம் சொன்னாங்க.

நான் சந்தித்த கைதிங்க மொத்தம் 80 பேர். 22 வயதிலேருந்து 72 வயது வரை உள்ளவங்க. பலர் கிராமப்புறத்தில் இருந்து வந்தவங்க. சிலர் படிச்சவங்க. நான் அவுங்களுக்குத் தகுந்த மாதிரி பேசினேன்.

அதிலே பல பேருக்கு இதுதான் முதல் குற்றம். ஏதோ ஒரு கோபத்துல உணர்ச்சி வசப்பட்டுத் தவறு செய்துவிட்டுச் செயிலுக்கு வந்தவங்க. இப்ப மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவுங்களிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை பேச ஆளில்லை. 14 வருஷம் ஆயுள் தண்டனைன்னாலும் நல்லபடியா நடந்துக்கிட்டா சீக்கிரம் வெளியே விட்டுடுவாங்க.

ஜெயிலுக்குள்ளே அவுங்களுக்கு வேலை தர்றாங்க. ஆனால் வருஷம் பூரா இல்லை. வருசத்திலே 3 மாதம் வேலையிருந்தா அதிகம். அதில் வர்ற வருமானத்தில் பாதியை அவுங்க சாப்பாட்டுக்கு எடுத்துக்குவாங்க. 20 சதவீதம் வருமானம் அவுங்க செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்விடும். மீதி முப்பது சதவீதம்தான் அவுங்க குடும்பத்துக்கு. இதனால் அவுங்க பிள்ளைங்களுக்கு படிப்புச் செலவுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க முடியலை. இதெல்லாம் அவுங்க சொன்னது.

சந்தர்ப்ப சூழ்நிலையினால தவறு செஞ்சிட்டு இப்ப அவுங்க படுற பாடு கஷ்டமாத்தான் இருக்கு. அவுங்களுக்கு வருஷம் பூரா வேலை கொடுத்தா நல்லது.

அரசாங்கம் ஸ்கூல் புக் பிரிண்ட் அடிக்கிறது, யூனிஃபார்ம் தைக்கிறது போன்ற வேலைகளை இவுங்களுக்குக் கொடுக்கலாம். இவுங்க தயாரிக்கிற பொருள்களை காதி கிராப்ட் மூலம் விற்க ஏற்பாடு பண்ணலாம். இப்படியெல்லாம் செஞ்சா ஓரளவுக்கு வருமானம் வரும். இவுங்க வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சி. இவுங்க பிள்ளைங்களாவது நல்லா படிச்சு முன்னுக்கு வர வேண்டாமா?”

பிரியா சரளமாகப் பேசுகிறார். பார்வைக் குறைபாடின்மை அவரது அறிவையும் திறமையையும் கடுகளவும் பாதித்ததாகத் தெரியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

” எனக்காக எங்க அப்பா படுற கஷ்டம்தாங்க முதல் காரணம். அவுங்க என்னைப் பெரிய ஆளா ஆக்கணும்னு நெனைக்கிறாங்க. அதுக்காக என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் போற இடங்களுக்கெல்லாம் துணைக்கு வர்றாங்க. பிளஸ் டூ வரைக்கும்தான் பார்வையற்றோர் பள்ளியில் படிச்சேன். அதுக்குப் பின்னால காலேஜில் நார்மலான ஸ்டூடன்ட்ஸ் கூடத்தான் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்க எனக்கு உதவி செய்றாங்க. பாடங்களையெல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொடுக்குறாங்க.

பார்வைக் குறைபாடு உள்ளவங்க பொது அறிவை வளர்த்துக்கிறதுக்காக மதுரை ரோட்டரி கிளப், விஸ்வநாதபுரத்தில் ஹெலன் ஹெல்லர் டாக்கிங் லைப்ரரின்னு ஒண்ணை நாலு வருஷத்துக்கு முன்ன திறந்தாங்க. எங்க அப்பா என்னை அங்க கூட்டிட்டுப் போயி மெம்பரா ஆக்கிட்டாங்க. அங்க எல்லா சப்ஜெக்ட்டுக்கும் ஆடியோ கேஸட் இருக்கு. அதை வாங்கிட்டுப் போயி டேப் ரெக்கார்டர்ல போட்டுக் கேக்க வேண்டியதுதான்.”

எம்.ஏ. முடித்ததும் எம்ஃபில் சேர்ந்து படித்து கல்லூரி ஆசிரியையாவதுதான் பிரியாவின் லட்சியம். அவருடைய அப்பாவின் விருப்பமும் கூட. ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்து ஆய்வு செய்வதை சாதாரணமாக இளம் பெண்கள் விரும்பமாட்டார்கள். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பிரியாவிற்கு கல்லூரி ஆசிரியை ஆவதா பெரிய விஷயம்?

Posted in Blind, Correctional, Faces, Female, inmates, Jail, Lady, Life sentence, Paper, people, Ph.d, Prison, Prisoner, Research, Rotary, sightless, Talent, Visibility Impaired, visually impaired, Women | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Common Cold

Posted by Snapjudge மேல் மே 21, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சளி பிடிக்காமல் இருக்க வழி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் தருணத்தில் நீர்கோர்த்தல், தும்மல், மூக்கடைப்பு, மார்புச் சளி என்று வந்து படிப்படியாக இறுதியில் இருமலால் பாதிக்கப்படுகிறேன். எனக்கு வயது 80. இந்நோய் வருமுன் காக்க, ஆயுர் வேத மருத்துவம் கூறவும்.

வை.கார்த்திகேயன், புதுச்சேரி.

கோடைக்காலத்தில் சூரியனின் உஷ்ணத்தால் சூழ நிற்கும் காற்றுமண்டலமும் கொதிப்படையும். பூமியிலுள்ள தண்ணீர் வற்றும். நீர் வறட்சியால் காய்ந்த உணவுப் பொருள்களில் இனிமை குறைந்து கசப்பும் துவர்ப்பும் காரமும் மிகுந்து காணப்படும். இவற்றைச் சாப்பிடுவதால் மனித உடல் வறட்சியும் சூடும் மிகுந்து இளைத்துவிடும். கோடையில் ஏற்படும் நாவறட்சியைப் போக்க அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பதும், குளிர்பானங்களைக் குடிப்பதாலும் அளவுக்கு மிஞ்சி வயிற்றில் தண்ணீர் சேரும். இதனால் உணவை ஜீரணம் செய்வதற்காக குடலிலும், இரைப்பையிலும் சுரந்துள்ள புளித்த திரவங்கள் நீர்த்து சக்தியற்றுவிடும். உண்ட உணவின் ஜீரணம் தடைபடுவதுடன் குடித்த குளிர்ந்த நீரும் ஜீரணமாகாமல் ஸ்தம்பித்து வயிற்றிலேயே நின்று வயிறு உப்பக் காரணமாகும். வயிற்றில் இதுபோன்ற நிலையில் தங்கும் தண்ணீர் உடலைக் கனக்கச் செய்து அசதி, தலையில் நீர்க்குத்தல், மார்புச் சளி, இருமல் முதலியவற்றை உண்டாக்கும்.

இந்த ஜல அஜீரணத்தை வளரவிட்டால் அது ஏற்படுத்தும் உபாதை அடுத்த பருவ காலங்களிலும் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளால் தொல்லையைத் தரும்.

கடும் கோடையில் அதிகமாகத் தண்ணீரைக் குடிக்காமல் வாய் வறட்சி நீங்க குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளிப்பது, முகம், கை, கால்களைக் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்வது நல்லது. நீர்க்கோர்வை, மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவற்றைத் தவிர்க்க,

*சுக்கு, கொத்தமல்லி விதை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பது,

*சூடான பாலுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது,

*மோரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்லது.

நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்பட மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். அவை வருமாறு:

*தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது. அண்ழ் ஸ்ரீர்ர்ப்ங்ழ் காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல்.

*நல்ல காற்றடக்கமுள்ள சூடான அறையில் வென்னீரில் குளித்துவிட்டு, உடனே குளிர்ந்த காற்றுள்ள அறையில் வந்து நிற்பது.

*உடலில் நல்ல வியர்வை இருக்கும் போது அது அடங்கும் முன்னரே குளிர்ந்த பானத்தைப் பருகுவது.

*குளித்த பிறகு ஈரமுள்ள தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளுதல்.

நீங்கள் சீதோஷ்ண சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீர்க்கோர்வை வராமல் பார்த்துக் கொள்ளலாம். கோடையின் இறுதியில் ஆயுர் வேத மூலிகைத் தைலங்களாகிய அஸனபில்வாதி தைலம், அஸன மஞ்சிஷ்டாதி தைலம், அஸன ஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வாரமிருமுறையோ அல்லது தினமுமோ தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு கொதித்து ஆறிய தண்ணீரில் குளிக்கவும். அதன்பிறகு ராஸ்னாதி சூரணத்தை உச்சந் தலையிலும், பிடரியிலும் தேய்த்துவிட்டுக் கொள்ளவும். ஜலதோஷம் ஏற்படாமலிருக்க இந்தச் சூரணம் உதவி செய்யும்.

உங்களுக்கு வயது 80-ஐ நெருங்கிவிட்டதால் உடலின் சகிப்புத் தன்மைக் குறைவால் ஏற்படும் இந்த உபாதையைத் தடுக்கவும் உடலுக்குப் பலம் தரக் கூடிய மருந்துகளையும் சாப்பிட வேண்டும். தாளீசபத்ராதி சூரணம் 5 கிராம், மஹாலக்ஷ்மி விலாஸரஸம் மாத்திரை, கற்பூராதிசூரணம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Blocked Nose, Cold, Disease, Doctor, Fever, Health, Healthcare, Homeopathy, Medicines, Natural, Prevention, Sneeze, Water | Leave a Comment »

Chennai Rotary & Worth Foundation – Initiatives for the Physically Disabled

Posted by Snapjudge மேல் மே 21, 2007

சேவை: வாழ நினைத்தால் வாழலாம்!

ரவிக்குமார்

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒüவையார். இப்படி அரிதான பிறப்பான மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக உடல் உறுப்பில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருப்பவர்களே கல்வியைப் பெறுவதில், வேலை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், உடல் ஊனமுற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தானே இருக்கும்? ஆனால் இப்படி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் மையமாக சென்னை, அசோக்நகர், உதயம் திரையரங்கம் அருகே செயல்பட்டு வருகிறது, ஆர்.சி.எம்.சி.டி. -வொர்த் அறக்கட்டளை. சென்னை ரோட்டரி சங்கத்தோடு சென்னையில் இயங்கும் வொர்த் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாளர் என். வெங்கட்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

”வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரமே. 1963-ல் சுவீடன் நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் புனர் வாழ்வுக்காக, காட்பாடியில் ‘சுவீடிஷ் ரெட் கிராஸ்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினர். நாளடைவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயின் தாக்கம் குறைந்த நிலையில், ‘வொர்த் அறக்கட்டளை’ என்னும் பெயரில் தமிழகத்தில் இருப்பவர்களைக் கொண்டே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுதான் ‘வொர்த் அறக்கட்டளை’யின் ஆரம்பகால வரலாறு.

உடல் ஊனமுற்றவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சியை காட்பாடி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் வழங்குகிறது எங்களின் அறக்கட்டளை. உடல் ஊனமுற்றிருந்து பத்தாவது தேறியிருக்கும் எவரும் இந்தத் தொழிற்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வோராண்டும் ஜுன், ஜூலை மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தங்கும் வசதியுடன் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகளைத் தகுந்த முறையில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படும்.

டர்னர் பயிற்சி மூன்று மையங்களிலும், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பயிற்சிகள் காட்பாடியிலும், வெல்டர் பயிற்சி திருச்சியிலும், பிரத்யேகமாக எங்களால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் மற்றும் செக்ரட்டரி கோர்ஸ்கள் காட்பாடி, பாண்டிச்சேரி மையங்களிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.

சென்னையில் செயல்படும் மையத்தில் பிளஸ் டூ வரை படித்த மாணவர்களுக்கு எம்.எஸ்-ஆபிஸ், டேலி போன்ற கணிப்பொறிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணிப்பொறி பயிற்சிகள் அடங்கிய செயலருக்கான பயிற்சிகள், தையல் பயிற்சிகள், பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறோம்.

எங்கள் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் ஒன்று, பாண்டிச்சேரியில் ஒன்று, காட்பாடியில் மூன்று என ஐந்து புரொடக்ஷன் யூனிட்கள் இயங்குகின்றன. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரே இங்கு (ஏறக்குறைய 200 பேர்) பணியிலிருக்கின்றனர். டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ், ஈ.ஐ.டி.பாரி போன்ற தொழிற்சாலைகளிலிருந்து எங்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்குப் பயன்படும் சில உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். பிளாஸ்டிக் மோல்டிங்கைப் பயன்படுத்தி செய்யும் பல வேலைகளையும் பல தொழிற்சாலைகளுக்காகச் செய்து வருகிறோம்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பிளைன்ட் ஸ்கூல் தயாரிக்கும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி டைப்ரைட்டர் உலகம் முழுவதும் பிரசித்தம். பெர்கின்ஸ் டைப்ரைட்டருக்கான உதிரி பாகங்களை எங்களுக்குக் கப்பலில் அனுப்பிவிடுவார்கள். அந்தப் பாகங்களை ஒன்றிணைத்து டைப்ரட்டராக நாங்கள் அவர்களுக்கு ரீ-எக்ஸ்போர்ட் செய்வோம். மாதத்திற்குச் சராசரியாக 2000 டைப்ரைட்டர்களை இப்படி உருவாக்குகிறோம். இங்கு உருவாகும் இத்தகைய பிரெய்லி டைப்ரைட்டர்களை இறுதிக்கட்ட பரிசோதனை செய்வது இங்கிருக்கும் பார்வையற்றவர்கள்தான். இங்கு உருவாகும் பிரெய்லி டைப்ரைட்டர்களை 9500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எலக்ட்ரிக் மீட்டர்களைத் தயாரித்துத் தருவது பெங்களூரிலிருக்கும் ‘பெல்’ நிறுவனம். இப்படி தயாரித்துத் தரும் மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பெல் நிறுவனத்துக்காக நாங்கள் சரிபார்த்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். எங்களிடம் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றவர்களே இந்தப் பணியைச் செய்கின்றனர்.

இதைத் தவிர, உலக அளவில் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியாமட்ரி பாக்ஸ்… உள்ளிட்ட 13 பொருட்களைக் கொண்ட ‘யூனிவர்ஸல் பிரெய்ல் கிட்’ ஒன்றையும் 350 ரூபாய் விலைக்குத் தருகிறோம்.

காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ‘டிரான்ஸிஷனல் ஸ்கூல்’ ஒன்றை இலவசமாகக் காட்பாடியில் இயக்குகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அறிவையும் தொழில்பயிற்சிகளையும் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரெய்லி முறையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழிலேயே படிப்பதால், வேலை வாய்ப்புகளில் ஆங்கிலம் தெரியாததால் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கும் தகுந்த பயிற்சிகளை அளிக்கிறோம். உடல் ஊனத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்களை உங்களை விட மன ரீதியாக உறுதியானவர்களாக மாற்றிக் காட்டுகிறோம்!” என்றார் என். வெங்கட்ராமன்.

ஒவ்வொரு யூனிட்டாகச் சுற்றிப்பார்த்தோம். கம்ப்யூட்டர் யூனிட்டை கடக்க இருந்த நம்மை… மறுபடியும் யூனிட்டை உற்றுப்பார்க்க வைத்தார் ஓர் இளம்பெண். காரணம்… அவர் கம்ப்யூட்டரின் ‘மெüசை’க் ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தது கைகளால் அல்ல… கால்களால்!

”எகனாமிக்ஸில் எம்.ஃபில், வரை முடித்துவிட்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம். லட்சியத்திற்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே வந்து கம்ப்யூட்டரும் தெரிஞ்சிக்கிட்டேன்… டெய்லரிங்கும் தெரிஞ்சிக்கிட்டேன். எது எப்ப கை.. ஸôரி, கால் கொடுக்கும்னு யாருக்குத் தெரியும்?” என்றார் பளிச்சென்று உமா மகேஸ்வரி.

– ‘வொர்த்’ அறக்கட்டளைக்கு இந்த ஓர் உதாரணம் போதுமே!

Posted in Blind, Chennai, deaf, Disabled, Dumb, Education, Handicapped, Madras, Mentally Challenged, NGO, Non-profit, Nonprofit, Physcially Challenged, RCMCD, RCMCT, Red Cross, Rotary, Training, Worth | Leave a Comment »

AVM & Shankar’s ‘Sivaji The Boss’ – Rajni’s 100th Movie

Posted by Snapjudge மேல் மே 21, 2007

திரைக்கதிர்: ரஜினியின் 100 வது படம்!

மனோஜ் கிருஷ்ணா

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல விஷயங்களைப் பயன்படுத்துவார்கள். ரஜினி படத்துக்கு அது தேவையே இல்லை. அவர் நடிக்கிறார் என்றவுடன் அதுவே செய்தியாகி, விளம்பரமாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடும். விளம்பரமே தேவைப்படாத ‘சிவாஜி’ படத்தின் விளம்பரத்துக்கும் ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது.

அது…

ரஜினிகாந்த் நடிக்கும் 100 வது தமிழ்ப் படம் என்பதுதான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் என இதுவரை ரஜினி 173 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ‘சிவாஜி’ படம் ரஜினியின் 100 வது தமிழ்ப் படம் என்பது அவருடைய ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும்.

பிலிம் நியூஸ் ஆனந்தன், இந்தத் தகவலைப் புள்ளி விவரத்தோடு ரஜினியிடம் கூறியபோது அவருக்கே இது புதிய விஷயமாகத் தோன்றியதாம். அதனால் ‘சிவாஜி’ பட விளம்பரத்தின்போது இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறது ஏவி.எம்.நிறுவனம்.

Posted in 100, AVM, Cinema, Film News, Movie, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sankar, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss | 1 Comment »

Saidapet REC Book Bank – Educational Lending Library

Posted by Snapjudge மேல் மே 21, 2007

கல்வி: மூணு லட்சம் புத்தகங்கள்! முன்னூறு ரூபாய்!

பி.முரளிதரன்

சாதனை படைத்த மேதைகளின் பள்ளி, கல்லூரி பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அவர்களின் வறுமைப் பக்கங்கள் நம்மை வருத்தும். பாடப் புத்தகங்கள் வாங்க முடியாமலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டிருப்பர். இந்தக் கஷ்டத்தை வளரும் இன்றைய தலைமுறையினர் எவ்விதத்திலும் படக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருபவர் கணேசன்.

இதற்காக சென்னை சைதாப்பேட்டையில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற பெயரில் புத்தக வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவ்வங்கி மூலம் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக கணேசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

”தஞ்சாவூர் அருகில் உள்ள கோபாலபுரம் என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த எனக்கு, இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் அதிகம். அந்தக் கிராமத்தில் பத்தாவது வரை படித்த முதல் ஆள் நான்தான். அதன் பிறகு, சென்னையில் உள்ள விவசாயப் பொறியியல் துறையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் வந்து நிரந்தரமாகத் தங்கினேன்.

கணிதம் பாடத்தில் எனக்கு ஆர்வம் இருந்ததால், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தேன். முதலில் சிறு வகுப்புகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்த நான், நாளடைவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன். குறிப்பாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.

அப்போது, என்னிடம் படிக்க வந்த மாணவர்கள் சிலர் புத்தகம் வாங்க மிகவும் சிரமப்பட்டனர். என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை மிகவும் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். இப்படிப்புகளுக்கான ஒரு புத்தகத்தின் மிகக் குறைந்தபட்ச விலையே ரூ.300-க்கு மேல் தான் உள்ளது.

இவ்வாறு சிரமப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தக வங்கியைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன்படி, 2000-ம் ஆண்டில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற புத்தக வங்கியைத் துவங்கினேன். என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற பாடப் பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்கள் இந்த வங்கியில் உள்ளன.

துவக்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 500 பேர் இந்த வங்கியின் மூலம் பயனடைந்தனர். தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர். இந்தப் புத்தக வங்கியில் தற்போது ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்தப் புத்தக வங்கியில் உறுப்பினர்களாகச் சேர, மாணவ, மாணவியர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக (இஹன்ற்ண்ர்ய் ஈங்ல்ர்ள்ண்ற்) ரூ.1,800 வசூலிக்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் தொகையை நான்கு ஆண்டு படிப்பை முடித்த பிறகு, அவர்களிடம் 50 சதவீதத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம். அத்துடன், ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 300 கட்டணமாக வசூலிக்கிறோம்.

இவ்வாறு வசூலிக்கப்படும் தொகைக்கு, ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 ரூபாய் மதிப்புள்ள பாடப் புத்தகங்களை வழங்குகிறோம். இந்தப் புத்தகங்களை தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும். இடையில் தரத் தேவையில்லை. அத்துடன், நான்கு ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க முடியாமல், அரியர்ஸ் வைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அத்தாள்களை மீண்டும் எழுதி பாஸôகும் வரையிலான காலத்திற்கும் இப்புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, நாங்கள் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

மேலும், காப்பீட்டுத் தொகை கட்ட முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளுக்கு காப்பீட்டுத் தொகை இல்லாமலும் புத்தகங்களை படிப்பதற்கு அளிக்கிறோம். இதுதவிர, மாணவர்கள் தங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அவர்கள் படித்த பாடப் புத்தகங்களை எதிர்காலத் தேவைகளுக்காக தங்களிடமே வைத்துக் கொள்ள விரும்பினால், குறைந்த விலைக்கு அப்புத்தகங்களை அவர்களுக்கே விற்று விடுகிறோம்.

தமிழ்நாடு புக் ஹவுஸ் மற்றும் டெக்னிக்கல் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து என்ஜினீயரிங் பாடங்களுக்கான புத்தகங்களை வாங்குகிறோம். இதைத் தவிர, பிரபல புத்தக நிறுவனங்களிடமிருந்தும் புத்தகங்களை கொள்முதல் செய்கிறோம். நடப்பு செமஸ்டர் வகுப்புகளுக்காக இதுவரை எங்களிடமிருந்து ஏழாயிரம் பேர் என்ஜினீயரிங் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மேலும், ஆண்டு தோறும் என்ஜினீயரிங் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் தலா பத்து பேருக்கு இலவசமாக பாடபுத்தகங்களை வழங்குகிறோம். இதுதவிர, கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவிகளையும் அளிக்கிறோம். இதற்காக, எங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50,000 செலவாகிறது.

தற்போதுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களுக்கு வேண்டிய பாடப் புத்தகங்கள் அவர்களுடைய கல்லூரி நூலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை மாணவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே அவர்களிடம் உள்ளது. ஆனால், எங்களிடம் ஏராளமான புத்தகங்கள் இருப்பதால், அதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம்.

இதுதவிர, என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புத்தகங்கள் அனைத்தும் ஒரே கடையில் கிடைக்காது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டி உள்ளது. ஆனால், எங்களுடைய புத்தக வங்கியில் அனைத்துப் பாடங்களுக்கான புத்தகங்களும் கிடைக்கின்றன. இதனால், மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அலைச்சல் மிச்சமாகிறது.

அத்துடன், மாணவர்கள் கேட்கும் சில புத்தகங்கள் எங்களிடம் இல்லையென்றால், உடனடியாக அவற்றை சம்மந்தப்பட்ட பதிப்பகத்திடமிருந்து வரவழைத்து தருகிறோம். இவற்றிற்கு எல்லாம் மேலாக, எங்கள் வங்கியில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறோம். இதற்காக, அனைத்துப் பாடங்களிலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்க் குழுவும் எங்களிடம் உள்ளது.

வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தற்போது, நாங்கள் திருச்சியில் எங்களுடைய புத்தக வங்கியின் கிளையை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையிலும் ஒரு கிளையைத் துவக்க உள்ளோம். மேலும், வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தபால் மூலமாகவும் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல், மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வங்கியை நடத்தி வருகிறேன்” என்றார்.

Posted in Books, Chennai, College, Education, Library, Madras, Technical, University | Leave a Comment »

Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements

Posted by Snapjudge மேல் மே 21, 2007

மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!

நீரஜா சௌத்ரி

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.

பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!

ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!

மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.

குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!

மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.

சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.

இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.

பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.

சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.

பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.

===================================================

மன்மோகன் அரசின் சாதனைகள்-2

நீரஜா சௌத்ரி

உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.

“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.

திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.

ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.

வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.

இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.

அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.

கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.

தமிழில்: சாரி
———————————————————————————————–

எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.

புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.

கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.

அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.

நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.

பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–

07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்

சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.

மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.

என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.

ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.

விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.

செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.

வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.

ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.

மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.

குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?

கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.

இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.

ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.

தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.

பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.

ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.

எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.

அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.

விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.

பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.

அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.

இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.

—————————————————————————-

துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்

வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?

‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.

மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள்  லாலு பிரஸாத் யாதவ் உட்பட  அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.

தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு  என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ  என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.

நன்றி : துக்ளக்
—————————————————————————-

Posted in Achievements, Agriculture, Analysis, Anniversary, Baba, Backgrounder, Banks, BJP, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Deflation, dera, Deve Gowda, DMK, Economy, Education, Elections, Evaluation, Execution, Finance, Goals, Govt, IMF, Inflation, Islam, IT, Madani, Madhani, Manmohan, Manmohan Singh, Maran, Millionaire, Muslim, Naxal, NDA, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Opposition, Party, Planning, Politics, Polls, POTA, Principles, Process, Radhika Selvi, RadhikaSelvi, Recession, Report, Rich, Sachar, Sonia, TADA, Terrorism, UDA, WB | 1 Comment »