Share Markets: How to invest in Stocks and make returns
Posted by Snapjudge மேல் மே 9, 2007
பங்குச் சந்தை: பங்குச் சந்தையில் பலன் பெற வேண்டுமா?
ந. ஜீவா
பணத்தைச் சேமிப்பது, முதலீடு செய்வது என்பதெல்லாம் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்குத்தான் என்பது பழங்கதை. தெருவில் உள்ள நபரிடம் சீட்டுப் போடுவது, அஞ்சலகச் சேமிப்பு, நகை வாங்கி வைப்பது, மனை வாங்கிப் போடுவது என நிறைய வடிவங்களில் சாதாரண மக்களும் தங்களால் முடிந்தவரை சேமிக்கத்தான் செய்கின்றனர். இந்தச் சேமிப்புகளுக்கு அப்பால் சுயமாக ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் ஷேர் மார்க்கெட். “இந்தப் பங்குச் சந்தை ஆளை ஒரே தூக்குத் தூக்கினாலும் தூக்கிவிடும்; அதலபாதாளத்தில் தள்ளினாலும் தள்ளிவிடும்’ என்பது பரவலான நம்பிக்கை.
பங்குச் சந்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்திவருபவர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சுப்ரிதா. ப்ரக்னாசிஸ் கன்சல்டன்ஸி சர்வீஸஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அவரிடம் பங்குச் சந்தையின் அடிப்படையான விஷயங்களைப் பற்றியும் அதிலுள்ள ரிஸ்க் பற்றியும் பேசினோம். அதிலிருந்து…
“”பெரிய பெரிய நிறுவனங்களாகட்டும் அல்லது சிறிய கம்பெனிகளாகட்டும் அவர்களுக்கு முதலீடு எப்போதுமே தேவையாக இருக்கிறது. அந்த முதலீட்டுக்காகப் பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுகிறார்கள். இதை ஷேர் என்பார்கள். ஒரு ஷேரின் குறைந்த மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஷேர்களை வாங்குவார்கள். ஷேர் வாங்கிய ஒருவர் இப்போது கம்பெனியின் பங்குதாரர் ஆகிவிடுவார். அந்த கம்பெனி நல்ல லாபத்துடன் ஓடினால் ஷேர் வாங்கியவருக்கு கம்பெனி லாபத்தில் பங்கு கொடுக்கும். அப்படிக் கொடுக்கும் பணத்துக்கு டிவிடென்ட் என்று பெயர். இந்த டிவிடென்ட் 25 சதமாகவோ அல்லது 30 சதமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் ஒரு ஷேரை ரூ.90 கொடுத்து வாங்கியிருப்பீர்கள். ஆனால் டிவிடென்ட் தரும் போது அந்த ஷேரின் அடிப்படை மதிப்பான ரூ.10க்குத்தான் கணக்கிட்டுக் கொடுப்பார்கள். சில கம்பெனிகள் இந்த அடிப்படை மதிப்பை ரூ.100 என்று வைத்திருப்பார்கள். பங்குச் சந்தையில் இது ஒரு முறை.
ஒரு நிறுவனம் மிகவும் லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் ஷேர் வாங்குபவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் ஷேரையே வாங்க விரும்புவார்கள். இருக்கிற ஷேர்களின் எண்ணிக்கை ஒரே அளவாக இருக்கும் போது அந்த ஷேர் எல்லாருக்கும் கிடைக்காது. அப்போது அந்த ஷேரை அதிக விலை கொடுத்தாவது வாங்க நினைப்பார்கள். ஒரு ஷேரின் அடிப்படை மதிப்பை அந்த நிறுவனம் ரூ.10 ஆக நிர்ணயித்திருந்தாலும் அந்த ஷேர் ரூ.200க்கும் கூட போகலாம். அப்போது ரூ.10க்கு 100 ஷேர் வாங்கி வைத்திருந்தவர் இப்போது அதை ஒரு ஷேர் ரூ.200 என்று விற்றுவிட்டால் அவருக்கு லாபம். 100 ஷேரை ரூ.1000க்கு வாங்கியிருந்த அவர் இப்போது அவற்றை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார். இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு. ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கிய ஷேரின் மதிப்பு நிறுவனம் நஷ்டத்தில் ஓடினால் வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறையும் வாய்ப்பும் உண்டு. இந்த ரிஸ்க்கிற்குப் பயந்துதான் பலர் பங்குச் சந்தைப் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறார்கள்.
ஆனால் இந்தப் பங்குச் சந்தையில் வெற்றிகரமாகச் செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள். எந்தப் பங்குகளை எப்போது வாங்க வேண்டும்? எப்போது விற்க வேண்டும்? என்பதில் தவறில்லாமல் முடிவெடுக்கத் தெரிய வேண்டும். ஒரு நிறுவனம் லாபகரமாக ஓடுவதற்கும் நஷ்டத்தில் மூழ்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக சில நிறுவனங்கள் வளரலாம். சில நிறுவனங்கள் விழலாம். பணவீக்கம், புதிய தொழில் நுட்பம், இயற்கைப் பேரழிவுகள், ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்களால் சில தொழில்கள் வளர்வதும் சில தொழில்கள் நலிவதும் தவிர்க்க முடியாதவை.
பங்குச் சந்தையில் ஈடுபடுபவர் இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு ஈடுபட வேண்டும். இப்போது நிறைய மீடியாக்களில் இது தொடர்பான செய்திகள் வருகின்றன. நிறைய டிவி சேனல்கள் இதற்கென நேரம் ஒதுக்கியுள்ளார்கள். எந்த நிறுவன ஷேர்கள் உயர்கின்றன? எவை சரிகின்றன? என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் கவனித்துச் சரியானபடி முதலீடு செய்தால் ஷேர்மார்க்கெட்டில் வெற்றிகரமாகச் சாதிக்கலாம். இதில் முக்கியமானது அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று ஒருபோதும் ஷேரை வாங்கவோ, விற்கவோ கூடாது. சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.
முதலில் எல்லாம் ஷேர் வாங்குவது, விற்பது எல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரும் அப்ளிகேஷனை நேரடியாக வாங்கி பூர்த்தி செய்து ஷேர் புரோக்கர் மூலமாக ஷேர் வாங்கி, ஷேர் சர்டிபிகேட்டைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ளும் முறை இருந்தது. இப்போது அப்படியில்லை. இந்த ஷேர் மார்க்கெட்டை ஒழுங்குபடுத்துவதற்கென மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் நஉஆஐ என்ற நிறுவனம் உள்ளது. இப்போது அதற்கென வங்கிகளில் டீ மேட் அக்கவுண்ட் (ஈங்ம்ஹற் ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) எனத் தனியான அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஷேர் புரோக்கரைத் தொடர்பு கொண்டு எந்த நிறுவன ஷேர் வாங்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். அவரிடம் அதற்கான செக்கைக் கொடுத்துவிட்டால் மூன்று நாட்களில் உங்களுக்கு ஷேர் கிடைத்துவிடும். இதற்குப் புரோக்கர் கமிஷனாக மிகக் குறைந்த அளவு பணம் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் ஷேர் வாங்குவது, விற்பது எல்லாம் புரோக்கர் அலுவலகத்திற்கு போன் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ தெரிவித்துவிட்டால் எல்லாமே தானாகவே நடந்துவிடும். நீங்கள் விற்ற ஷேரால் உங்களுக்குக் கிடைத்த லாபம் உங்கள் அக்கவுண்டில் ஏறிவிடும். நேரடியான தொடர்புகள் எதுவுமின்றி ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட முடியும்.
நீங்கள் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிய ஷேரை ஒரு வருடத்திற்குள் ரூ.20 ஆயிரத்திற்கு விற்றுவிட்டீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் வரியாக அரசுக்குக் கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால் வரி கட்டத் தேவையில்லை.
ஷேர் மார்க்கெட்டில் தனிநபராக ஈடுபடுவது என்பது தவிர வேறு ஒரு வழியும் உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று அதை ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறார்கள். இதை மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். எந்த ஷேரை வாங்குவது, விற்பது என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதில் சில திட்டங்கள் இருக்கின்றன. அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களும், அதிக ரிஸ்க் இல்லாத திட்டங்களும் உள்ளன. அதிக ரிஸ்க் இல்லாத திட்டங்களில் லாபம் குறைவாக இருக்கும்.
மும்பை ஸ்டாக் எக்úஸஞ்ச், நேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் என்று உள்ளன. அவை சில நிறுவனங்களின் ஷேர் விலை உயர்வது, குறைவது என்பதை வைத்துக் கொண்டு ஷேர் மார்க்கெட் புள்ளிகளை வெளியிட்டு வருகின்றன. நேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் 50 கம்பெனிகளையும் மும்பை ஸ்டாக் எக்úஸஞ்ச் 30 நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பங்கு மார்க்கெட் புள்ளிகளை வெளியிடுகின்றன.
நேஷனல் ஸ்டாக் எக்úஸஞ்ச் நிறுவனம், பங்கு மார்க்கெட்டில் செயல்பட விரும்புகிறவர்கள் – அதாவது புரோக்கராக விரும்புகிறவர்கள் முதற்கொண்டு அத்துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் வரை அனைவருக்கும் சஇஊங சர்டிபிகேட் கொடுக்கிறது. அந்தத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நாங்கள் நடத்துகிறோம்.
பொதுமக்களுக்கு ஷேர் வாங்க, விற்க பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். இலவச பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம். எங்களுக்கு நிறைய பங்குச் சந்தை புரோக்கர்களைத் தெரியும் என்பதால் ஷேர் வாங்க விரும்புபவர்களுக்கு புரோக்கருடன் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறோம். ஷேர் மார்க்கெட் தொடர்பான ஒரு செய்திக் கடித இதழையும் நடத்துகிறோம்.
ஷேர் வாங்குவதிலோ விற்பதிலோ முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு.
கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் இறங்கவே கூடாது. சேமிக்கும் பணத்தில்தான் ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும். அதிலும் உங்களுடைய முழுச் சேமிப்பையும் ஷேர்மார்க்கெட்டில் விடக் கூடாது. எல்லாச் சேமிப்பும் போக உபரியாக ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர்மார்க்கெட்டில் இறங்க வேண்டும்” என்றார் சுப்ரிதா.
Arulraj S said
I like to know more about Share Market Business
guna said
ஷேர் மார்க்கெட் தொடர்பான ஒரு செய்திக் கடித இதழையும் நடத்துகிறோம்.
please details my email id manoharganapathy@rediffmail.com