Mooligai Corner: Herbs & Naturotherapy – Sithagathi (Karunchembai)
Posted by Snapjudge மேல் மே 9, 2007
மூலிகை மூலை: விஜயராஜன்
சிறிய இலைகளையும் கருஞ்சிவப்பு மலர்களையும் உடையது. நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமர இனமாகும். இலை, பூ ஆகியவை மருத்துவக் குணமுடையவை. தமிழகமெங்கும் பயிரிடப்படுகின்றது. இலை- வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும், பூ- வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் தாய்ப்பாலைக் குறைக்கும் மருந்தாகவும், நாடி- நடையை அதிகரிக்கச் செய்யவும் பயன்படுகிறது.
வேறு பெயர்கள்: சித்தகத்தி, சிற்றகத்தி.
ஆங்கிலத்தில்: Sesbania Aegypfiaca, Pers; Fehaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:
கருஞ்செம்பை இலையை அரைத்துக் கட்டி வர எந்த வகையான கட்டிகளும் பழுத்து உடைந்து குணமாகும்.
கருஞ்செம்பை இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட, வாயு கட்டிகள் குணமாகும்.
கருஞ்செம்பை இலை, மற்றும் இதன் இலைச்சாறு ஆகியவற்றை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டிவர வெட்டுக் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்.
இலைச்சாறை 15 மில்லி காலையில் குடித்துவர இரத்தம் தூய்மையாகி, கரப்பான், கிருமிகள் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும். வெறும் வயிற்றில் குடித்துவர வாயுத் தொல்லையால் தடைபட்ட மாதவிலக்குப் பிரச்சினை நீங்கும்.
இந்த இலையுடன் குப்பைமேனி இலை சம அளவாக எடுத்துக் கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்துத் தடவி 3 மணிநேரம் கழித்துக் குளிக்க, தோல் வியாதிகளான சொறி, சிரங்கு, படை நீங்கும்.
கருஞ்செம்பை பூ 10, சிறிது கஸ்தூரி மஞ்சள், பால் சாம்பிராணி பொடி செய்து ஒரு கரண்டி நல்லெண்ணெயில் சிறு தீயில் காய்ச்சி இளம் சூட்டில் தலையில் வைத்து தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க தீராத தலைவலி, சன்னி, நீர்க்கோர்வை, கபாலகுத்து, குடைச்சல், பீனிசம், தலைபாரம், மண்டையில் நீர் ஏற்றம், கழுத்துப் பிடிப்பு, கண், மூக்கு ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறி நோய்கள் குணமாகும்.
கருஞ்செம்பை விதையை ஊற வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர ஒழுங்கில்லாத அல்லது விட்டு விட்டு வரும் மாதவிலக்குப் பிரச்சினை சரியாகும். பெரும்பாடு குணமாகும். (4 நாளைக்கு ஒருமுறை செய்யலாம்.)
கரும்செம்பை இலைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 1/2 லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து, அத்துடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் எடுத்து பாலில் அரைத்து சேர்த்துச் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர மூக்கடைப்பு, மண்டைக்குத்தல், தலைபாரம், தலையில் நீரேற்றம், காது மந்தம் குணமாகும்.
இலையின் சாறு நீக்கிய திப்பியை உச்சியில் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிடத் தலையில் நீரேற்றம் நீங்கும்.
கருஞ்செம்பைப் பூவை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நல்லெண்ணை விட்டுக் காய்ச்சி வடிகட்டி தலைமுழுகி வர தலைபாரம், தலைவலி, ஒற்றைத் தலைவலி, சீதளம் நீங்கும்.
Ganesh Kumar said
Hi,
Could you please let me know where can i find sithagathi tree or flowers ?
I am in need a finding it.
Thanks,
Ganesh
aprasad said
Sir,
Please inform me details of Sithahathi tree and its uses.
Also need its english name.
Kind Regards
A.Prasad
Akbar said
i want tosee the sithagathi tree