Test for Democracy in East Timor
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 10, 2007
கிழக்கு திமோர் நாட்டில் ஜனாதிபதி தேர்தல்
![]() |
![]() |
வாக்குப் பெட்டிகள் |
இந்தோனீசியா நாட்டிடமிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்த கிழக்குத் திமோர் நாட்டில், முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலின் போது மிகச்சிறிய அளவிலேயே பிரச்சினைகள் ஏற்பட்டன என்றும், அஞ்சப்பட்டது போல் வன்முறைகள் ஏதும் நடக்கவில்லை எனவும், வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கிழக்கு திமோரின் தற்போதைய அதிபரான சனானா குஸ்மோவ் அவர்கள் பதவிக் காலம் முடிவதையொட்டி, அவர் பதவி விலகுகிறார்.
அவரை அடுத்து, தற்போது பிரதமராக இருக்கும் ஜோஸ் ராமோஸ் ஹோட்டா, அதிபராக தேர்ந்தெடுக்கப்படலாம என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, எட்டு வேட்பாளர்களில் எவரும் ஐம்பது விழுக்காடு வாக்குகளை பெறத் தவறினால், மீண்டும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும்.
இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kannabiran Ravi Shankar (krs) said
Not to publish
வரும் ஏப்ரல் 28 (சனிக்கிழமை) நியூ ஜெர்ஸியில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு நடத்த இருக்கிறோம். நீங்களும் வர வேண்டும் என்பது எங்கள் ஆசை. மேல் விபரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்.