Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 27th, 2007

46 trafficked boys to go home in Ivory Coast

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

கடத்தப்பட்ட ஐவரி கோஸ்ட் சிறார்கள் மீட்கப்பட்டனர்

ஐவரி கோஸ்ட் சிறார்கள்
ஐவரி கோஸ்ட் சிறார்கள்

ஐரோப்பாவில் அதிக பணம் ஈட்டக் கூடிய கால்பந்து ஒப்பந்தங்களை பெற்று தருவதாகக் கூறி ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 சிறுவர்களை புலம் பெயந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தமது வீடுகளுக்கு திருப்பியனுப்பியுள்ளது .

அந்தச் சிறார்கள் ஐரோப்பாவில் ரோம், மட்ரிட் அல்லது லண்டனுக்கு அழைத்து செல்லப்படுவதாகக் கூறப்பட்டு அவர்களை, அண்டை நாடான மாலிக்கு கொண்டு சென்று, அங்கு அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களை மீண்டும் ஒப்படைக்க, பயணச் செலவுகளுக்காக நூற்றுக் கணக்கான டாலர்களை போலி முகவர்கள் அவர்களின் பெற்றோரிடம் கேட்டதாக புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

இந்தச் சம்பவம், தொழில் ரீதியல்லாத வகையில் ஆப்ரிக்க முழுவதும் செயல்படும் கால்பந்து கழகங்களுக்கு, பரிச்சயமில்லாத முகவர்களை நம்பி ஏமாறாமல் இருக்க ஒரு எச்சரிக்க்கை எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in abuse, africa, Agents, Children, Exploit, Exploitation, FIFA, Football, Ivory Coast, Kids, Poor, Sport, traffickers, Trafficking | Leave a Comment »

DMK vs DMDK – Karunanidhi vs Vijayganth

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

திமுக தொடக்க விழாவில் நான் இல்லையா?: விஜயகாந்துக்கு கருணாநிதி காட்டமான பதில்

சென்னை, மார்ச் 27: திமுக தொடக்க விழாவில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

திமுக தொடக்க விழா குறித்து மறைந்த டி.எம். பார்த்தசாரதி எழுதிய “தி.மு.க. வரலாறு’ ஏட்டில் கழகம் தொடங்கிய வரலாறு குறித்து எழுதி இருப்பது:

17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் கூட்டத்தில், கழகத்தின் பெயர், கொடி பற்றிய அறிவிப்புகளும் செய்யப்பட்டு கழகப் பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது.

அந்த புத்தகத்தில் பக்கம் 109-ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பொதுக்குழுவில்: சி.என். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம். பார்த்தசாரதி… என்று பட்டியல் தொடருகிறது.

இது மாத்திரமல்ல, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய புத்தகத்தில் 177-வது பக்கத்தில் கூறி இருப்பது:

“அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்ட முக்கிய முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மிக முக்கியமானவர்களின் பெயர்கள் வருமாறு: அறிஞர் அண்ணா, நான், கே.ஏ. மதியழகன், கலைஞர் கருணாநிதி, சம்பத், என்.வி. நடராசன்’ என நாவலர் பட்டியலிடுகிறார்.

இந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள் கூறிய தகவல்களை தெரிவித்து வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல. கழகத்தை பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தையே அழித்துவிட படை திரட்டுகிறார்கள்.

பதுங்கிப் பாய்கிறார்கள், பச்சைப் பொய்களைத் தங்கள் போர்க்கணைகளாக ஆக்குகிறார்கள் என்பதையெல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கட்சியினர் மக்களிடம் விளக்க வேண்டும்.

Posted in DMDK, DMK, History, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Politics, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Hyundai exports 4000 Getz Prime to Germany from Chennai plant

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

சென்னை துறைமுகத்தில் ரூ.100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடம் ஓராண்டில் அமைக்கத் திட்டம்: துறைமுகத் தலைவர் தகவல்

சென்னை, மார்ச் 27: ஏற்றுமதிக்கு முன்பாக கார்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, சென்னை துறைமுகத்தில் ரூ. 100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50 கோடி செலவிடப்பட உள்ளது.

மேலும், வணிக வளாகமும், உணவகமும் துறைமுகத்தில் திறக்கப்படும் என்று துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் தெரிவித்தார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் “நியூ கெட்ஸ்’ வகைக் கார், சென்னை துறைமுகத்தில் இருந்து ஜெர்மனிக்கு திங்கள்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. மொத்தம், 4,000 கார்கள் கப்பல் மூலம் செல்ல உள்ளன.

இதற்கான நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் கூறியது:

சென்னை துறைமுகத்தில் இருந்து, பன்னாட்டு கம்பெனிகளின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஏற்றுமதி செய்வது தொடர்பாக, ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் தொடர்கிறது.

ஏற்றுமதிக்கு முன்பாக, கார்களை நிறுத்த துறைமுகத்தில் இடம் உள்ளது. அந்த இடத்தில் 6,000 கார்கள் வரை நிறுத்தலாம். ஆனால், அந்த இடம் போதாது எனக் கூறுகின்றனர். இதனால், துறைமுகத்தில் பல அடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் இரண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு ரூ. 100 கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது. உரிய நிறுவனங்களை அழைத்துப் பேசி, ஓராண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், உயர்தர உணவகமும், வணிக வளாகமும் அமைக்கப்படும் என்றார் கே.சுரேஷ்

நிகழ்ச்சியில், தொழில்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச்.எஸ்.ஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
==================================================================
திமுக ஆட்சியில் ரூ.10,750 கோடி அன்னிய முதலீடு: ஸ்டாலின்

ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.75 கோடி முதலீட்டில் ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகன உற்பத்தி ஆலையை புதன்கிழமை துவக்கி வைத்தார்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் (இடமிருந்து) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், கொமாட்சு தலைவர் எம்.சகானே, ஜப்பான் துணைத் தூதர் ஓய், கோடாகி, தொழில் துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், டி.யசோதா எம்.எல்.ஏ.

காஞ்சிபுரம், மார்ச் 29: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆலையை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

தமிழகம் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளதால், 10 மாதங்களில் 10 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு பெறப்பட்டதுடன், 39 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 65 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் மேன்மேலும் வளர்ந்து வருகிறது.

ஒரகடம் தொழிற்பூங்காவில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம், நிசான் மோட்டார் ஆலை உள்பட பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை இங்கு அமைக்கவுள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி தொழிலுக்கு ஏற்ற இடமாக ஒரகடம் மாறி உள்ளது.

முதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்றார் ஸ்டாலின்.

கொமாட்சு இந்தியா ஆலை மேலாண் இயக்குநர் எஸ்.யுயுனோ வரவேற்றார். தலைவர் எம்.சகானே ஆலை குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், தொழில்துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், ஜப்பான் துணைத் தூதர் ஒய்.கோடாகி, எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் ஏ.எம்.நாயக், ஆ.கிருஷ்ணசாமி எம்.பி, டி.யசோதா எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.

ஆட்சியர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் கே.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஆ.மனோகரன், எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Posted in Atoz, Auto, Automotive, Cars, Chennai, Development, Employment, Exports, Factory, Germany, Getz, Harbor, Harbour, Hyundai, Industry, infrastructure, Investment, Jobs, Korea, MK Stalin, MPT, Plan, Port, Project, Santro, Shipping, Stalin | Leave a Comment »

Money Lending practices – Checks, Loans, Accounting Backgrounder

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

போலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்

ப. முத்தையன்

இந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’

ஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.

பணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.

பணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.

எனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.

இக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.

இம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.

பணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.

கையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

எதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.

கையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்?

சேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.

ஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.

எந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.

மேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.

அரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா? சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

Posted in Accountancy, Accountant, Accounting, Analysis, Asset, Backgrounder, bank, CA, Check, Checking, Cheque, Chit Funds, Commerce, DD, Demand Draft, Draft, Finance, History, Income, Interest, Lending, Loan, Loss, MF, MO, Money, Money Order, Mortgage, Muthaian, Muthaiyan, Mutual Funds, Pa Muthaiyan, Profit, Rates, revenue, Savings, Security | Leave a Comment »

Announcement – Tamil Nadu Assembly’s alternate speakers

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

சட்டப் பேரவை மாற்றுத் தலைவராக 6 பேர் நியமனம்

சென்னை, மார்ச் 27: சட்டப் பேரவையின் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

திங்கள்கிழமை சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கியதும் இது குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவர் வெளியிட்டார்.

பேரவையின் 5-வது கூட்டத் தொடருக்கு மாற்றுத் தலைவர்களாக

  • ரங்கநாதன்,
  • துரை.சந்திரசேகரன்,
  • இ.எஸ்.எஸ்.ராமன்,
  • தி.வேல்முருகன்,
  • பாலபாரதி,
  • வை.சிவபுண்ணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டப் பேரவையில் இந்த மாதம் 30-ம் தேதி வரை கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், நிதி அமைச்சருமான க.அன்பழகன் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

Posted in Aavudaiyappan, Alternate, Assembly, Avudaiappan, Balabharathi, Balabharathy, Budget, Chair, D Velmurugan, DMK, ESS Raman, Government, Govt, Ranganathan, Renganathan, Session, Speaker, Tamil Nadu, Thurai Chandrasekaran, TN, Vai Siva Punniyam | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »

Hubli clashes between two communities – 40 arrested

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

ஹூப்ளியில் இரு சமூகத்தவர் இடையே மோதல், கல்வீச்சு: 40 பேர் கைது

ஹூப்ளி, மார்ச் 27 ஹுப்ளி அருகே இருவேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதல், கல்வீச்சு தொடர்பாக 40 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

ஹூப்ளி மாவட்டம், காமேரிபேட் காவல் சரகம், டார்வி ஹக்கல் பகுதியில் பண்ணி மகாகாளி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகோட்சவ திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அந்த இன்னிசை நிகழ்ச்சியில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார். அதற்கு அங்கிருந்த சில சமூக விரோதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட நபர் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஆத்திரம் அடைந்த அக்கும்பல், மேடையின் பின்புறத்தில் இருந்து எதிரே இருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினார்களாம்.

இதையடுத்து இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் சரமாரித் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் கல்வீசித் தாக்கப்பட்டன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர், வன்முறையில் ஈடுபட்டோர் மீது தடியடி நடத்தி அமைதியை ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (கிம்ஸ்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இருசமூகத் தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு மோதல் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Posted in Arrest, clash, Community, Festival, Hindu, Hinduism, Hubli, Karnataka, Law, Order, Police, Temple | Leave a Comment »