Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 15th, 2007

Sri Lanka to ban thinly clad models from Ads

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

விளம்பரங்களில் நிர்வாணத்திற்கு இலங்கை அரசு தடை

மாடல் அழகி ஒருவர்
மாடல் அழகி ஒருவர்

இலங்கையில் விளம்பரங்களின் போது ஆபாசமாக, அதாவது நிர்வாண, அரைநிர்வாண பெண்ணையோ அல்லது ஆண்களையோ பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச விளம்பரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கலாச்சார அமைச்சு பொது விளம்பரங்களின் போது நிர்வாண அல்லது அரைநிர்வாணக் கோலத்தில் மாடல் அழகிகள்/இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in 1984, Ad, Ads, Advertisement, Agency, Ban, Billboards, Cloth, Clothes, Clothless, Culture, Female, Force, Immoral, Judgmental, Law, male, Model, Moral, Nude, Order, Policing, Pose, Publishers, Seminude, Sexy, Sri lanka, Srilanka, Values | Leave a Comment »

Sa Njaanathesikan – Consumer Rights: Perspectives

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

நுகர்வோர் நீதி-ஒரு கண்ணோட்டம்

ச. ஞானதேசிகன்

மார்ச் 15, உலக நுகர்வோர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் இந்நாளில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

“”நுகர்வோரே அரசர்” என்ற நிலை இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழலில் நிலவினாலும் அது பெயரளவிற்கே பொருந்துகிறது. நிஜவாழ்க்கையில், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களினால் ஏமாற்றப்படும் அவல நிலையில்தான் நுகர்வோர்கள் உள்ளனர்.

பணம் செலுத்தி சொந்த உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் அல்லது பயன்பெறும் சேவையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

இன்றைய நுகர்வோர்கள், பொருளின் தரம், எடைகுறைவு, அதிக விலை, விளம்பரம், போலிப் பொருள்கள், ஏகபோக வணிகத்தின் மூலம் ஏமாற்றப்படும் சூழ்நிலை நிலவுகிறது. உத்தேச மதிப்பீட்டின்படி இந்திய நுகர்வோர்கள் ஆண்டுதோறும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஏமாற்றப்படுகின்றனர்.

நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வில் நமது நாட்டினர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எழுத்தறிவின்மை, ஏழ்மை, வாங்கும் சக்தி குறைவு, அலட்சியம், அக்கறையின்மை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.

நுகர்வோர் உரிமைகள்: 1962, மார்ச் 15ம் நாள் மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் யாதெனில் பாதுகாப்புரிமை, தெரிவு செய்யும் உரிமை, தகவல் பெறும் உரிமை மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் உரிமை.

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் செயல்படும் பன்னாட்டு நுகர்வோர் அமைப்பு மேலும் மூன்று உரிமைகளை வலியுறுத்தியுள்ளது. அவைகள் இழப்பீடு பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமை.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986: நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நுகர்வோர் சம்பந்தப்பட்ட பல சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றியபோதிலும், நுகர்வோருக்குக்கென்று அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், நலன் பேணவும் 1986-ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இச் சட்டம் அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைப்புகளுக்குப் பொருந்தும். இலவசப் பொருள்கள் மற்றும் இலவச சேவைகள் இச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் கலாசாரம் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் நுகர்வோரின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.

நுகர்வோர் நீதிமன்றங்கள்: இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதி வழங்க மூன்றடுக்கு கொண்ட குறை தீர்க்கும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் நிலையில் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில் செயல்படுகிறது. ரூ. 25 லட்சத்திற்குக் குறைவாக நஷ்ட ஈடு கோரும் நுகர்வோர் இம் மன்றத்தை அணுகலாம்.

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 570 மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சம் நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2 லட்சம் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர பெரும்பான்மையான நுகர்வோர் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் 88 சதவீதம்.

சிக்கிம் மாநிலத்தில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள், நுகர்வோர் குறை தீர்ப்பதில் நாட்டிலே முதலிடம் வகிக்கின்றன. தீர்வு விகிதம் 98 சதவீதம். நுகர்வோர் நீதி பெறுவதில் பிகார் மாநில மக்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். தீர்வு விகிதம் 76 சதவீதம்.

ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்கும் குறைவாக இழப்பீடு கோரும் நுகர்வோர், மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தை அணுகலாம். நாட்டில் தற்போது 34 மாநில நுகர்வோர் நீதிமன்றங்கள் மாநிலத் தலைநகரங்களில் இயங்கி வருகின்றன. இவ்வாணையங்களில் 3,59,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2,41,231 வழக்குகளில் நுகர்வோருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மாநில நுகர்வோர் தீர்ப்பாணையத்தின் தீர்ப்பு 67 சதவீதம்.

நுகர்வோருக்கு நீதி வழங்குவதில் நாட்டிலே சண்டீகர் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் முதலிடம் வகிக்கிறது. தீர்ப்பு விகிதம் 97 சதவீதம். அதேவேளையில் மிகக்குறைந்த அளவில் உத்தரப் பிரதேச மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் புதுதில்லியில் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நுகர்வோர், ரூ.1 கோடிக்கு மேல் இழப்பீடு கோரினால் தேசிய ஆணையத்தை அணுகலாம். சுமார் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 27 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் தேசிய அளவில் 78 சதவீதம்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர் அவர் சார்ந்த மாவட்ட, மாநில நுகர்வோர் தீர்ப்பாணையங்களை அணுகி இழப்பீடு கோரலாம். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஒரு ரூபாய் கூட நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்த வேண்டியதில்லை.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு 90 முதல் 150 நாள்களுக்குள் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் நீதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். தாமதமாக நுகர்வோர் நீதி வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் நிலவுகின்றன.

முதலாவதாக, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் “”வாய்தா” கேட்பதின் மூலம் நுகர்வோர் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியப்போக்கு, அக்கறையின்மை இதற்கு காரணமாக அமைகிறது.

மேலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. பெரும்பாலான நுகர்வோர் தீர்ப்பாணையங்கள் சொந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல!

மேலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாததால் நுகர்வோர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் ஆணையை நிறைவேற்றாமல் செயல்படும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணமாக நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய நீதி மேலும் தாமதமாகிறது.

மேற்கூறிய குறைகளைத் தவிர்க்க கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நுகர்வோர் நலனைப் பேணலாம்.

வழக்கறிஞர்கள் அதிக அளவில் “வாய்தா’ வாங்குவதைத் தவிர்க்க வழிவகை செய்யவேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து, முன்கூட்டியே நியமிப்பதன் மூலம் வழக்குகள் தொய்வில்லாமல் நீதி வழங்க வகை செய்ய வேண்டும். நுகர்வோர் நீதிமன்ற உள்கட்டமைப்பு வசதிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தாராள நிதி வழங்க வேண்டும். நிதி வழங்குவதிலும், நீதி வழங்குவதிலும் காலதாமதம் கூடாது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை விற்பனையாளர்கள், சேவை நிறுவனங்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமுறைப்படி கிடைக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

நுகர்வோர் தாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சேவையில் உள்ள குறைகளைத் தீர்க்க நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதுபோல், நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் தார்மிகக் கடமையாகும்.

“”நலம் சார்ந்த அரசு” நுகர்வோர் நலன் பேணட்டும் என்று இன்றைய தினத்தில் சூளுரைப்போம்.

(கட்டுரையாளர்: வணிகவியல்துறைத் தலைவர், டாக்டர் என்.ஜீ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்).

Posted in bill, Commerce, Consumer, Customer, Economy, Law, Lawsuit, Market, Njaanathesigan, Njaanathesikan, Order, Perspectives, rights, service, Suit | Leave a Comment »

TN, Bengal MPs clashes over maritime varsity venue – Analysis & Opinion

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

சிந்தித்து செய்கையை மாற்று

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் மேற்குவங்க எம்.பி.க்கள், கடந்த இரு தினங்களாக அவையை நடத்தவிடாமல் செய்துவரும் ரகளை ஆரோக்கியமான அரசியலாக இல்லை.

அமைச்சரை கைநீட்டி அடிக்கப் போகும் அளவுக்கு கைகலப்பை உருவாக்கிய இச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் இடதுசாரிகள் என்பது அரசியல் மீதான அவநம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது. கடல்சார் பல்கலைக்கழகம் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளாமல் இத்தகைய எதிர்ப்பில் அவர்கள் இறங்கியுள்ளது மற்றொரு வேதனை.

சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றும் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்றும் 2006 ஜூலை மாதத்தில் செய்திகள் வெளியாகின.

இத் தகவலைத் தெரிவித்த கப்பல்துறைச் செயலர் “இப் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தைப் போன்றே அமையும்; இதன் துணை வளாகங்கள் மும்பை, விசாகப்பட்டினம், கோல்கத்தா ஆகிய 3 இடங்களில் அமையும்; அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இதில் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை பிரதமரிடம் தெரிவித்து, சுமுகத் தீர்வு கண்டிருக்க முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரிகள் எத்தனையோ கோரிக்கைகளுக்காக பிரதமரை பலமுறை சந்திக்கும்போது, இந்த விஷயத்தைப் பற்றியும் முன்னதாகவே பேசித் தீர்த்திருக்கலாம்.

இன்னும் புத்திசாலித்தனமாக இப்பிரச்சினையை அணுகுவதாக இருப்பின், சென்னையில் மட்டுமன்றி கோல்கத்தாவிலும் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்றுகூட கோரியிருக்கலாம்.

ஏனெனில், சர்வதேச கடல்சார் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உலகம் முழுவதும் உள்ள 29 பல்கலைக்கழகங்கள் சேர்ந்துள்ளன. இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது. ஆனால் சீனாவில் 10 பல்கலைக்கழகங்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

ஆகவே இரு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் என்று மேற்குவங்க எம்.பி.க்கள் வலியுறுத்தினால் அது நியாயமானதாகவும் தேவையானதாகவும்கூட இருக்கும்.

கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படித்து பயிற்சி முடித்து வருவோரின் எண்ணிக்கை, தேவையைவிட 5 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த இடைவெளி 2010ம் ஆண்டில் 10 சதவீதமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரு பல்கலைக்கழகங்கள் அமைந்தாலும் நன்மையே.

7 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆளுகைக்குள் 23 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடல் உள்ளது. இந்திய மாணவர்களுக்கு பொதுவாக ஆங்கிலப் புலமையும் உள்ளது. உலக அளவில் கடல்சார் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தியர்களுக்கு கப்பல் துறையில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் உள்ளன.

சீனாவில் தற்போது வர்த்தகப் பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவுக்கான ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், அவர்களிடம் 10 கடல்சார் பல்கலைக்கழகங்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டால், உலக கப்பல் துறையில் இந்தியர்களுக்கான வாய்ப்புகளை சீனா தட்டிப் பறிக்கும் நிலை உள்ளதை உணரமுடியும்.

இடதுசாரிகள் இந்த ஆபத்தை உணர்ந்து, இந்தியர்களின் நலனை மனத்தில்கொண்டு, கடல்சார் பல்கலைக்கழகப் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

Posted in Analysis, Anil Basu, Baalu, Balu, Bengal, Chennai, Communist, Dinamani, DMK, Institute, Left, Madras, maritime, Marxist, MP, Op-Ed, Opinion, Politburo, Prakash Karat, Sea, Seashore, Shipping Minister, Surface Transport Minister, T R Baalu, T R Balu, TN, University, WB, West Bengal | Leave a Comment »