Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tenkasi returns to normalcy: Tense after Attack on TNMMK district President

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

தென்காசியில் இயல்பு நிலை திரும்பியது: போலீஸôர் தொடர்ந்து ரோந்து

தென்காசி, மார்ச் 5: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து நிலவி வந்த பதற்ற நிலை மாறி, ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், போலீஸôர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கானை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்காசியில் மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் பதற்றம் நிலவியது. இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

சனிக்கிழமை இரவு தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு டீ கடையின் முன்பகுதியும், வாய்க்கால் பாலம் பகுதியில் ஒரு டீ கடையின் முன்பகுதியும் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

இயல்பு நிலை திரும்பியது

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தென்காசியில் இயல்பு நிலை திரும்பியது. கடைவீதிப் பகுதிகளில் 50 சதத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஒரு சில பெரிய வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

தென்காசியில் மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தலைமையில் போலீஸôர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை தாக்கியவர்களைத் தேடும் பணியில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, நகரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: