Indian campaign ends in Olympic qualifiers
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007
கொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி
சென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.
38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.
பிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.
முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.
தென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்