Chennai Local Civic Elections – Ma Subramanian gets elected unopposed
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007
சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்
சென்னை, பிப்.7-
சென்னை மாநகராட்சிக்கு 100 வார்டுகளில் வருகிற 18-ந்தேதி மறு தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் முடிந்து விட்டன. பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதால் அந்த கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பாரதீய ஜனதா, தே.மு.தி.க. மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று மனுக்கள் பரிசீலனையின் போது தே.மு.தி.க. வேட்பாளர்கள் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டது. இதனால் சில வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை.
ஒரு சில சுயேட்சைகள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வினருக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சில வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
140-வது வார்டில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தி.மு.க. வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யாததால் முத்து என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் மனு தாக்கல் செய்யவில்லை.
கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது மனுவும் தள்ளுபடி ஆவிட்டது. இப்போது தியாகராஜன் என்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் மா. சுப்பிரமணியனை எதிர்த்து மனு செய்துள்ளார்.
அவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக போவதாக கூறியுள்ளதால் மா.சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
அதே போல் 135-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக காஞ்சனா களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்த தே.மு.தி.க. சார்பில் மேரி ஜுலியட் அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் உமா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆகிவிட்டது.
2 சுயேச்சைகள் மட்டும் எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களும் போட்டியில் இருந்து விலக இருப்பதால் காஞ்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் 138-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மேரி லூர்துசாமி, 139-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மகேஷ்குமார், 141-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கென்னடி 86-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சேப்பாக்கம் சுரேஷ்குமார், 91-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தீபா, 127-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி ஆகியோரை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டன.
20-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூப்சாந்தரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் இன்பசேகரன், பாரதீய ஜனதா சார்பில் பாலாஜி மனு தாக்கல் செய்த னர். இருவரும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் 11-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருபாகரனை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர் ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகி கொண்டார்.
இதனால் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் மனுக்கள் வாபஸ் முடிந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
r.ravi said
pl visit tamil,english,hindi haiku kavithaigal web http://www.kavimalar.com
pl give free link in ur web.
pl publish news about my web.thank u.
maulana aamir rashadi madni said
maulana aamir rashadi madni
Chennai Local Civic Elections – Ma Subramanian gets elected unopposed « Tamil News
Qq88 said
dominopoker
Chennai Local Civic Elections