India to Build Four Fast Breeder Nuclear Reactors – Reactor prototype ‘will be ready by 2010’
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்குள் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டம்
சென்னை ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயற்பியல்-வேதியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் யூஜின் பின்டோ, ஜெ.டேனியல் செல்லப்பா, எம்.எஸ்.ஆனந்த், பி.வி.ராமலிங்கம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கே.எஸ். விஸ்வநாதன், ஜி.அமரேந்திரா. இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள.
சென்னை, ஜன. 31: தமிழகத்தில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்பியல் மற்றும் வேதியியல் துறையினருக்கு ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஈனுலைகள் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பிரிவு இயக்குநர் பி.வி. ராமலிங்கம் பேசியதாவது:
தமிழகத்தில் 4 அதிவேக ஈனுலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஈனுலைகள் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டவை ஆகும். இந்த 4 ஈனுலைகளும் ஒரே சமயத்தில் நிறுவப்படும்.
இதில் கல்பாக்கத்தில் மட்டும் 2 ஈனுலைகள் நிறுவப்படும். கல்பாக்கத்தில் புதிய ஈனுலைகளை நிறுவுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
இதனால் தொழில்நுட்ப உதவி, ஆலோசனை மற்றும் மனித வள ஆற்றல் கல்பாக்கம் வளாகத்தில் எளிதில் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணமாக கல்பாக்கத்தில் 2 புதிய ஈனுலைகளை நிறுவுவதற்கான திட்டச் செலவு குறைய வாய்ப்புள்ளது.
மேலும் 2 ஈனுலைகளை அமைக்க விரைவில் இடம் தேர்வு: இவை தவிர தமிழகத்தில் மேலும் 2 ஈனுலைகளை அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப அடிப்படையில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் புதிய அதிவேக ஈனுலைகளை வடிவமைக்கும். அனைத்து ஈனுலைகளும் மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இருக்கும்.
வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த ஈனுலைகள் மூலம் 2,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறனுள்ள சோதனை அதிவேக ஈனுலையை நிறுவ பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த ஈனுலையை நிர்மாணிக்கும் பணிகள் தீவிரமாக தற்போது நடைபெறுகிறது. ரூ. 3,200 கோடி செலவில் இந்த ஈனுலை அமைக்கப்படும்.
இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3.20 பைசாவுக்கு உற்பத்தி செய்ய முடியும்.
அனைத்து புதிய ஈனுலைகளையும் “பாவினி’ நிறுவனம் கட்டும். தேசிய அணு மின் கழகத்தின் பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் இப் பணிகளை நிறைவேற்றத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளிக்க உள்ளனர்.
நாட்டில் ஈனுலைகள் மூலம் வரும் 2020-ம் ஆண்டில் மொத்த அணு மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட் அளவாக உயரும் என்றார் ராமலிங்கம்.
இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் பேசியதாவது:
உலகில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. எனினும், நச்சு வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 11-வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஈனுலைகள் மூலம் அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் நாம் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியும்.
நாட்டில் யுரேனியம் தட்டுப்பாடு உள்ளது. அதிவேக ஈனுலைகளை நிறுவுவதன் மூலம் யுரேனியம் பயன்பாட்டைக் குறைத்து, தட்டுப்பாட்டையும் தடுக்கலாம் என்றார் ஆனந்த்.
இக் கருத்தரங்கில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜி. அமரேந்திரா, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜே. டேனியல் செல்லப்பா, கல்லூரி முதல்வர் யூஜின் பின்டோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
This entry was posted on ஜனவரி 31, 2007 இல் 3:57 பிப and is filed under Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited, BHAVINI, DAE, Defense, Department of Atomic Energy, Dr. Baldev Raj, Electricity, Fast Breeder, Fast Breeder Test Reactor, FBTR, Homi Bhabha National University, IGCAR, India, Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, metallic fuel, Nuclear Reactors, P.V. Ramalingam, PFBR, Reactor Operation and Maintenance Group, Science, State Electricity Boards, structural mechanics, Technology, uranium-plutonium oxide. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்