Disproportionate assets and corruption – ADMK’s former MLA Theni Panirselvam indicted
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தேனி பன்னீர்செல்வத்துக்கு 3 ஆண்டு ஜெயில்
சென்னை, ஜன.29-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம். இவர் 1992 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.21 லட்சத்து 36 ஆயிரத்து 435 சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இவரது மனைவிகள் ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோரும் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க் கப்பட்டனர். 7.3.97-ல் இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். போடப் பட்டது. 4.11.2003-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை தனிக் கோர்ட்டில் இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. 80-க்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
`இன்று தீர்ப்பு வழங்கப்படும்’ என்று நீதிபதி தட்சணா மூர்த்தி அறிவித்து இருந்தார். இதை யடுத்து தேனி பன்னீர் செல்வம், ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோர் இன்று சென்னை தனிக்கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். தீர்ப்பு வழங்குவதற்கு முன் னால் நீதிபதி 3 பேரிடமும் “உங்களை குற்றவாளிகள் என்று தீர்மானித்துள்ளேன். என்ன சொல்கிறீர்கள்ப” என்று கேட்டார். அதற்கு அவர்கள் `தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதில் தேனி பன்னீர்செல்வத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கை `அப்பீல்’ செய்வ தற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், 60 நாட்களுக்குள் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தேனி பன்னீர் செல்வம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பின்னர் ரூ.20 ஆயிரத்துக்கான பத்திரம் மற்றும் 2 தனி நபர் ஜாமீன் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுபோல ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்