Former PM Chandrashekhar`s grandson declared absconder in murder
Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007
கொலை வழக்கு: முன்னாள் பிரதமரின் பேரனை போலீஸ் தேடுகிறது
மாவ் (உ.பி.), ஜன. 29: முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பேரன் ரவிசங்கர் சிங் மற்றும் இருவரை தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்ட மேலவை உறுப்பினராக உள்ள ரவிசங்கர் சிங் மற்றும் இருவர் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவர்களின் சொத்துக்களை முடக்கி வைக்குமாறும் மாவட்ட தலைமை நீதிபதி ஏ.கே.பாண்டே சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது செய்யப்படாமலும் அவர்கள் சரணடையாத நிலையில் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நிலக்கரி வியாபாரி கஜேந்திர சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரவிசங்கர் சிங், சுஷில் சிங், சுரேஷ் சிங் ஆகிய மூவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்