Mammootty & National Awards – Comment on Balungu Kai Opu
Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007
இருபடங்களில் சிறப்பாக நடித்தும் தேசிய விருதை இழந்து விட்டேன்: மம்முட்டி வருத்தம்
சென்னை, ஜன. 22- மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஏற்கனவே பல படங்களுக்கு சிறந்த நடிக ருக்கான விருது பெற்றுள்ளார். 1989-ல் `ஒரு வடக்கன் வீரகதா’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 1993-ல் மதிலுகள் படத்தில் நடித்ததற்காக விருது கிடைத்தது. `விதாயன் மற்றும் பொந்தன் மாதா‘ ஆகிய படங்களுக்கும் அவருக்கு விருது கள் கிடைத்தன.
1999-ல் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார் படத்தில் நடித்ததற்காக விருது பெற் றார்.
தற்போது மம்முட்டி நடித்த `பலுங்கு கை ஒப்பு‘ ஆகிய இரு படங்கள் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகின்றன. இந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் உள்ளார்.
இதுகுறித்து மம்முட்டி கூறியதாவது
`பலுங்கு கை ஒப்பு’ படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. இதில் எனது நடிப்பு சிறப்பாக இருந்தது. நிறைய பேரிடம் இருந்து பாராட்டுகள் வந்தன. குறிப்பாக `கை ஒப்பு’ படத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. டெலிபோனில் ஏராளம் பேர் பாராட்டினார்கள். ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன். பலுங்கு படத்துக்கும் பாராட்டுகள் குவிந்தன.
எனவே இப்படங்கள் எனக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் என்று எதிர் பார்த்தேன் அது நடக்கவில்லை. விருதுகளை இழந்து விட்டது. வருத்தமாக உள்ளது.
இவ்வாறு மம்முட்டி கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்