Human waste disposal workers upliftment scheme – Rs. 58 Crore allotted
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
மனிதக் கழிவு பணியாளர் : ரூ.58 கோடியில் மாற்றுத் தொழில்
சென்னை, ஜன. 21: மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ரூ.58.45 கோடியில் மாற்றுத் தொழில் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்பு விவரம்:-
“”மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் சுமக்கும் கொடுமையை அறவே அகற்றி, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளவர்கள் வருவாய் ஈட்டக்கூடிய மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள ரூ.58.45 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்