Love Story: Salem-1 MLA Ravichandran’s daughter elopes
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007
காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.
சேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.
கடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.
இதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.
கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கலைவாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.
கலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.
மறுமொழியொன்றை இடுங்கள்