Ardh Kumbamela begins; 20 lakh take dip
Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007
இந்தியாவில் அர்த்
கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
![]() |
![]() |
கங்கையில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் |
உலகிலேயே மிக அதிக அளவில் மக்கள் கூடுகின்ற மத விழாக்களில் ஒன்றான வட இந்தியாவில் நடக்கும் அர்த் கும்ப மேளாவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
கங்கையும், யமுனையும் கலக்கின்ற திரிவேணி சங்கமத்தில் இன்று உதயவேளையில், கடும் குளிருக்கு மத்தியில், உடலெங்கும் சாம்பல் பூசிய இந்து நிர்வாணச் சாமிமார்கள் நீராடினர்.
45 நாட்கள் தொடருகின்ற இந்த அர்த் கும்பமேளாவில், 6 நாட்கள் புனித கங்கை நீராடலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமது பாவங்களை களையலாம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
அங்கு கூடும் பக்தர்களுக்காக இந்திய அரசு பல லட்சக் கணக்கான கூடாரங்களை அமைத்துள்ளது, அத்தோடு பல்லாயிரக் கணக்கான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்