Libyan Court Sentences Health Workers to Death in AIDS Case
Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006
எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
![]() |
![]() |
நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
இது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.
ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்