Olympic winners and wannabes gather at Doha for Asian Games
Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006
15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது
![]() |
![]() |
தோஹா ஆசியப் போட்டியின் சின்னம் |
15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை டிசம்பர் மாதம் 1 ம் தேதி மேற்காசிய நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தொடங்குகிறது.
கத்தார் ஆசியாவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் நாளை அங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் போது , 55 ஆண்டு கால ஆசிய விளையாட்டில் இருந்திராத வகையில் இந்தப் போட்டிகள் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
எண்ணை வளம் நிறைந்த இந்த வளைகுடா நாடு, இந்தப் போட்டிகளுக்காக கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இந்தப் போட்டிகளில் இது வரை இருந்திராத அளவில் அதிகப்படியான அளவில் நாடுகள், வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளிள் பங்கு பெறுவார்கள்.
தோஹா ஆசிய விளையாட்டில், மொத்தம் 39 விளியாட்டுகளில் 46 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறும். போட்டிகளில் 45 நாடுகள் பங்குபெறவுள்ளன. 10,000 க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள்.
இந்த 15 வது தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் , கோல்ஃப், ஒருங்கிணைந்த நீச்சல், செஸ் உட்பட பல புதிய விளையாட்டுப் போட்டிகள் இடம் பெறுகின்றன.
கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவிற்கு வெளியே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கலீஃபா அரங்கில் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளும், தடகள போட்டிகளும் நடைபெறும். இந்த அரங்கம் 50,000 பேர் உட்காரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டி தோஹாவில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது.
வரும் 16-ம்தேதி வரை நடைபெறும் இப் போட்டியில் 45 நாடுகளிலிருந்து 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 39 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
வழக்கம் போல இம்முறையும் அதிகமான பதக்கங்களை சீனா அள்ளிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், புத்தாக்கம் பெற்றுள்ள கொரியா, ஜப்பான் மற்றும் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகள் இந்தியாவுக்கு கடும் போட்டியளிக்கும் எனத் தெரிகிறது.
இந்தியா: இந்தியாவிலிருந்து, அதிகாரிகள் உள்பட 350-க்கும் அதிகமானோர் 24 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆனால், தோஹா போட்டி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலில் 165 வீரர், வீராங்கனைகள் மட்டுமே இந்தியாவிலிருந்து பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடகளம்: அதிகபட்சமாக, தட களப் போட்டிகளில் 46 வீரர், வீராங்கனைகள் இந்தியாவிலிருந்து பங்கேற்கின்றனர். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட 13 வீரர், வீராங்கனைகள் இப் போட்டிக்கான இறுதிக் கட்ட பயிற்சியை மஸ்கட்டில் பெற்றுவருகின்றனர். அவர்கள் டிசம்பர் 3-ம் தேதி தோஹா சென்றடைகின்றனர்.
டென்னிஸ் மங்கை சானியா மிர்சாவும் இப் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
புசான் ஆசிய விளையாட்டில் 11 தங்கம், 12 வெள்ளி உள்பட 35 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. தடகளத்தில் மட்டும் 7 தங்கங்களை வென்றது.
மத்திய அரசின் ஒப்புதலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பிய பட்டியலில், 9 வகையான விளையாட்டுகளுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. கூடைப்பந்து, கால்பந்து, டென்பின், செபக்தக்ரா, வாள்வீச்சு, ரக்பி, ஹேண்ட்பால் உள்ளிட்ட விளையாட்டுகள் அதில் அடங்கும். ஆனால், கால்பந்து அணி, அரசின் செலவில்லா ஒப்பந்தத்துடன் தோஹா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நிகழ்ச்சி: போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக நடத்த தோஹா போட்டி அமைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
தொடக்க நிகழ்ச்சி குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் டேவிட் அட்கின்ஸ் கூறியது:
தொடக்க நிகழ்ச்சிகள் இதுவரை யாரும் காணாத வகையில் 3 மணி 20 நிமிஷங்கள் நடைபெற உள்ளன. இதில் 7 ஆயிரம் கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு மெருகேற்ற உள்ளனர்.
40 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலீஃபா ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலேயே தோஹா போட்டியே சிறப்பாக பேசப்படும் வகையில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. (முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவில் 1951-ல் நடைபெற்றது).
சீனா, கொரியா. இந்தியா, உள்ளிட்ட ஒவ்வொரு நாடும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றன. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தென் கொரிய, வட கொரிய வீரர்கள் இணைந்து வருவது, சிறப்பம்சமாக இருக்கும்.
சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை விட, ஆசிய போட்டியின் தொடக்க நிகழ்ச்சிகள் அனைவரையும் பிரம்மிக்கவைக்கும் என்றார் அட்கின்ஸ்.
மறுமொழியொன்றை இடுங்கள்