Jail sentence should not exceed 14 years even after aggregation of multiple sentences
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடாது
புதுதில்லி, நவ. 27: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு வழக்கில் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல், சிறை தண்டனை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது. மூன்று குற்றங்களில் தொடர்புடைய அவருக்கு மொத்தமாக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து அக்குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பு விவரம்:
ஆயுள் தண்டனையை தவிர பிற தண்டனைக் காலம் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்புடைய ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் அளவுக்கே சிறை தண்டனை விதிக்கலாம். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது தவறாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்