Sivaji movie shooting in Forest gets reprimand – Rajni & Shankar fined
Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006
சிவாஜி படப்பிடிப்பில் பரபரப்பு: வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு
சென்னை, நவ. 23: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சிவாஜி படப்பிடிப்பின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.
திருப்போரூர் அருகே உள்ளது ஆழத்தூர். இங்கு சிப்காட் தொழில்பேட்டை அமைந்துள்ளது. மேலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதியும் இங்கு உள்ளது.
சிவாஜி படப்பிடிப்பு:இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருப்போரூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி லீமா தோஷி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக படக்குழுவினரிடம் தெரிவித்தனர்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறையிடம் உரிய அனுமதி பெற்று இருப்பதாக படக்குழுவினர் பதில் அளித்தனர். இதை ஏற்காத வனத்துறை அதிகாரிகள்,””நீங்கள் படப்படிப்பு நடத்திய இடம் வனத்துறைக்கு சொந்தமானது,” எனத் தெரிவித்தனர்.
உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக படக்குழுவினருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் நடிகர் ரஜினியும், இயக்குநர் சங்கரும் இருந்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்