Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Dhal Exports – Govt. get 1 lac fine for stopping pulse shippings

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, நவ. 21- குஜராத் மாநிலத்தில் உள்ள “ஏசியன் புட் இன்ட்ஸ்டிரிஸ்” என்னும் நிறுவனம் மேற்காசிய நாடுகளுக்கு பருப்பு உள்ளிட்ட உணவு தானிய வகைகளை ஏற்றுமதி செய்ய ஆர்டர்கள் பெற்றிருந்தது. மொத்தம் 107 கண்டெய்னர்களில் தானி யங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி குஜ ராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 20 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டன. மீதமுள்ள 87 கண்டெய்னர்களை அனுப்ப சுங்க இலாகாவிடம் அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் ஜுன் மாதம் 22-ந் தேதி மத்திய அரசு திடீரென தானிய வகைகளை வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து 87 கண்டெய்னர் தானிய வகைகளை வெளிநாடு களுக்கு அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதனால் ஏசியன் புட் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அரசுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தது ஆனால் எந்த பலனும் கிடைக்க வில்லை.

இதையடுத்து ஏசியன் புட்இண்டஸ்டிரிஸ் நிறுவனம் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தானிய வகைகளை ஏற்று மதி செய்யலாம் என்று உத்தர விட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்தது. அந்த மனுவை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், “தானிய ஏற்றுமதிக்கு ஜுன் மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று கூறி மத்திய அரசுக்கு கண்ட னம் தெரிவித்தனர்.

சரியாக ஆராயாமல் அப்பீல் செய்ததற்காக மத்திய அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: