Congress Krishnasamy – ‘How many seats did AIADMK win in Tamil Nadu Civic Polls?’
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள
- 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
- 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
- 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
- 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள
- 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
- 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
- 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
- 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
- மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.
நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.
சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.
மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்