Humble beginnings of Bhoomika Chawla – Interview
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
மின்சார ரெயில் பயணம்: ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் கடையில் வேலை பார்த்தேன்: நடிகை பூமிகா பேட்டி
சினிமா உலகில் இன்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகள் சிலரிடம் அவர்களின் பழைய வாழ்க்கைப் பற்றி கேட்டால், தாங்கள் ஒரு வசதியான வீட்டு பெண் என்பது போலவே காட்டிக் கொள்வார்கள். சினிமாவில் நடிக்க வராவிட்டாலும் இதே அளவு வசதியோடு வாழ்ந்திருக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். நடிகர்கள் தங்களின் பழைய வாழ்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவிப்பது போல நடிகைகள் தெரிவிப்பதில்லை.
ஆனால் பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற தமிழ் படங்களில் நடித்தவரும், தென் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தி பட உலகிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவருமான பூமிகா இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்.
இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர் ஒரு காலத்தில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் ஒரு கடையில் சேல்ஸ்கேர்ளாக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
பணம் ஏராளமாக வருகிறது என்பதற்காக நான் தாராளமாக செலவு செய்வதில்லை. பணத்தின் அருமை எனக்கு நன்கு தெரியும். காரணம் என் பழைய வாழ்க்கை அப்படி. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்நான். என் குடும் பத்தின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடையில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்த்தேன். அப்போது தினசரி மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து சிரமப்பட்டிருக்கிறேன். வாழ்க்கை எப்போதும் ரோஜாபடுக்கையாகவே இருக்காது. யாருக்கும் எந்த நேரத்திலும் கஷ்டம் வரலாம் என்கிறார் பூமிகா.
முன்னணி கதாநாயகிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் தங்க, வைர நகைகள், ஆடம்பர பொருட்கள் என்று லட்சக்கணக்கான ரூபாயில் பொருட்களை வாங்கிப் போடுவது வழக்கம். ஆனால் இவர் விரும்பி வாங்கும் பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள், டி.வி.டி.க்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்றவைதான் இடம் பெறுகின்றன. பூமிகாவிடம் கிரெடிட் கார்டு கூட கிடையாதாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்