Cho S Ramasamy, Maalan, Ira Sezhiyan – Meeting on Civic Polls : Today
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அலசல்: ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறும்
சென்னை, நவ. 15: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அலசும் பொதுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
- ராஜாஜி பொது விவகார மையம்,
- மக்கள் உரிமை மன்றம்
ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டம் சில வாரங்களுக்கு முன் சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெறுவதாக இருந்தது.
- பத்திரிகையாளர் சோ,
- நாடாளுமன்றவாதி இரா.செழியன்,
- முன்னாள் போலீஸ் அதிகாரி வி.ஆர். லட்சுமிநாராயணன்,
- ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். ராகவன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. போலீசார் அனுமதி தரவில்லை என்று சில தரப்பினர் கூறினர்.
ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கவில்லை என்றும் அமைப்பாளர்களே கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும் காவல் துறை மறுத்தது. எனினும், கூட்டம் நடத்த அனுமதி கோரி, மீண்டும் விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்தது.
தற்போது அக்கூட்டம் மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் பாரதீய வித்யா பவன் அரங்கில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் இரா.செழியன், பி.எஸ். ராகவன், சத்தியமூர்த்தி அறக்கட்டளைத் தலைமைக் காப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்