The Khairlanji Atrocity – Police Ban : Dalit groups hold protests in Nagpur
Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006
4 தலித்துகள் படுகொலை விவகாரம்: நடவடிக்கைக் கோரி தலித் அமைப்பு ஏற்பாடு செய்த ஊர்வலத்துக்கு போலீஸ் தடை
நாகபுரி, நவ. 13: மகாராஷ்டிர மாநிலத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்துக்கு போலீஸôர் தடை விதித்தனர்.
கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிர மாநிலம் பந்தாரா மாவட்டம் கையர்லாஞ்ச் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இச் சம்பவத்துக்கு உயர் சாதிப் பிரிவினரின் ஆதிக்க வெறியே காரணம் என பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன.
சம்பவம் நடந்து நீண்ட நாளாகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இதனால், வெகுண்ட தலித் மக்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
நாகபுரியைச் சேர்ந்த தலித் அமைப்பு, இந்த விவகாரத்தில் நீதி கோரி ஊர்வலம் நடத்த முடிவு செய்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை, அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கூடினர்.
இதை முன்கூட்டியே அறிந்த போலீஸôர், முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும், ஊர்வலத்தால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என்று கருதி போலீஸôர் ஊர்வலத்துக்கு தடை விதித்ததாகவும் நகர போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்