Pension hike for deceased Vanniyar families as per PMK’s request
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
வன்னியர் போராட்டம்: குடும்ப ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு
சென்னை, அக். 28:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த குடும்ப நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மாத ஓய்வூதியம் ரூ. 2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பிறப்பித்தார்.
உயர்த்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தின்படி குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.
elayaraja said
Govt take good steps