Procession condemning the violence in Civic Elections taken out by CPI(M)
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006
தேர்தல் வன்முறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்
![]() |
![]() |
ஆர்ப்பாட்டக்காரர்கள் |
தமிழக தலைநகர் சென்னையின் மாநகராட்சி மன்றத்துக்கு அக்டோபர் 13ஆம் தேதி நடந்த தேர்தல் வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறையை கண்டித்து ஆளும் திமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று வியாழக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
இந்த வன்முறைகளுக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னணி கட்சியினர் சிலரே தலைமைதாங்கி நடத்தியதாகவும் அவர்கள் மீதும், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடந்தால், அது தமது கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான கூட்டணியையே பாதிக்கும் என்று எச்சரித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்