World Bank to invest in Andhra Pradesh micro-credit & Self-help Organizations
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006
ஆந்திர மகளிர் சுய உதவிக் குழுக்களுகளில் உலக வங்கி முதலீடு
![]() |
![]() |
உலக வங்கி |
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யத் தான் திட்டமிட்டுவருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
சுய உதவிக் குழுக்களின் பணிகள் சிறப்பாக உள்ளதாக தற்போது ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் கிரீம் வீலர் தெரிவித்தார். கிராம மக்களிடம் மறைந்து கிடக்கும் வியாபாரத் திறன்களை வெளிக்கொண்டுவந்து, வறுமையை குறைக்க இக் குழுக்கள் உதவுவதாக அவர் தெரிவித்தார்.
உலக வங்கி அளிக்க உள்ள நிதியில் ஒரு பகுதி பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மீதி பணம் நகர்ப்புற மேலாண்மை மற்றும் பொருளாதார முறைகளை மாற்றி அமைப்பதற்காக கொடுக்கப்படும் என்றும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்