DMK Alliance apportions Tamil Nadu civic election leaderships
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006
நகரசபை தலைவர் பதவி: தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிரம்
சென்னை, அக். 23-
உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. கட்சி அடிப்படையில் தேர்தல் நடந்த சுமார் 20 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தி.மு.க. வசமாகி உள்ளது.
6 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் சுமார் 120 நகர சபைகளில் ஜெயித்துள்ளது. இதே போல பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிலும் தி.மு.க. சுமார் 70 சதவீத இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
இதையடுத்து மாநகராட்சி மேயர் பதவி நீங்கலாக மற்ற பதவிகளுக்கான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்பட்டது.
மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் 25 நகரசபை கள் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 561 பேரூராட்சி களில் 95 பேரூராட்சி வழங்கப் பட்டுள்ளது. 29 மாவட்ட ஊராட்சிகளில் திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்ட ஊராட்சிகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.
அது போல 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 72 ஊராட்சித் தலைவர்கள் பதவி காங்கிரசுக்கு வழங்கப் பட்டுள்ளது.
————————————————–
பா.ம.க.வுக்கு 14 நகர சபை தலைவர் பதவி கிடைத் துள்ளது. மேலும் காஞ்சீபுரம், சேலம், கடலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி யும் பா.ம.க.வுக்கு கிடைத்துள்ளது.
43 பேரூராட்சிகள், 51 ஊராட்சி ஒன்றியங்களும் பா.ம.க.வுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
————————————————–
மார்க்சிஸ்ட் கம்ï னிஸ்டு கட்சிக்கு 7 நகர சபை, 1 மாவட்ட ஊராட்சி, 24 பேரூராட்சி, 9 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது.
————————————————–
இந்திய கம்ïனிஸ்டு கட்சிக்கு 4 நகரசபை, 2 மாவட்ட ஊராட்சி அமைப்பு, 8 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங் கள் வழங்கப்பட்டுள்ளது. விடுலைசிறுத்தைகளுக்கு நெல்லிக்குப்பம், திண்டிவனம் ஆகிய 2 நகரசபைகளும், 5 பேரூராட்சிகள், 2 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
————————————————–
புரட்சி பாரதம் கட்சிக்கு திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியமும்,
————————————————–
உழவர் உழைப் பாளர் கட்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றியமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள உள்ளாட்சி பதவிகளை தி.மு.க. தன் வசம் வைத்துள்ளது.
இடப்பங்கீடு முடிந்து விட்டதால் அடுத்தக்கட்டமாக தலைவர், துணைத் தலை வர் பதவியை பெற தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகி களிடம் கடும் போட்டி ஏற்பட் டுள்ளது. எப்படியாவது தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என்று பலரும் தற்போது தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
சில இடங்களில் சுயேட்சை களை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும் மறைமுக வேலை யும் ரகசியமாக நடந்து வரு கிறது. இடப்பங்கீடு செய்யப் பட்டுள்ள இடங்களில் பதவி களை உரியவர்கள் பெறும் வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் அறிவுறுத் தினார்கள்.
எனவே தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் மோதல்களும், சிக் கல்களும் வராமல் இருக்க மாவட்ட அளவில் தி.மு.க. கூட் டணிக் கட்சிகளின் நிர்வாகி கள் பேசி வருகிறார்கள்.
நகரசபைகளில் 52ஐ கூட் டணிகளுக்கு ஒதுக்கி உள்ள தி.மு.க. சுமார் 70 நகரசபை தலைவர் பதவிகளில் போட்டி யிட உள்ளது. இந்த 70 நகரசபை தலைவர் யார், யார் என்பதை தேர்வு செய்யும் பணி மாவட்ட நிர்வாகிகள் துணையுடன் நடந்து வருகிறது.
பல இடங்களில் ஏற் கனவே இவர்தான் தலை வர் வேட்பாளர் என்று கூறப் பட்டிருந்தது. எனவே தலைவர், துணைத் தலைவர் பதவிகள் யார், யாருக்கு கிடைக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட் களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.
இதே போல பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகளும் சிக்கலின்றி தங்களுக்குரிய நகரசபை தலைவர்களை அறிவிக்க உள்ளன. ஆனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிரித்துக் கொள்வ தில் காங்கிரசில் கடும் இழுபறி இப்போதே ஏற்பட்டு விட்டது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட் டுள்ள 25 நகரசபை தலைவர் பதவியை பெற அந்த கட்சி யில் உள்ள அனைத்து கோஷ் டியினரும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்