54 Years of family Rule in Aalangudi comes to an end – TN Civic Polls
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
54 ஆண்டுகால வரலாறு மாறியது
ஆலங்குடி, அக்.20: ஆலங்குடி அருகே வடகாடு ஊராட்சியில் 54 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் வசமிருந்த ஊராட்சித் தலைவர் பதவி இடம் மாறியது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த வடகாடு ஊராட்சியில், ஊராட்சி ஆரம்பித்த காலமாகிய 1952 முதல் 1972 வரை 20 ஆண்டுகள் எஸ். தங்கவேல் என்பவர் ஊராட்சித் தலைவராக இருந்தார். அவருக்குப்பின் அவரது மகன் த. புஷ்பராஜ் 1972 முதல் 1996 வரையும், பின்னர் அவரது மனைவி 1996 முதல் 2006 வரையும் ஊராட்சித் தலைவராக இருந்தனர்.
மொத்தம் 54 ஆண்டுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவி வகித்து வந்துள்ளனர்.
நடைபெற்ற தேர்தலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் தம்பி மகன் தங்கவேல் அதே ஊரைச் சேர்ந்த லெ. சின்னுவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் லெ. சின்னு 807 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழரசி புஷ்பராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.
BadNewsIndia said
அதெல்லாம் சரிதான். 54 வருஷம் ஊருக்கு ஏதாவது பண்ணாங்களா, இல்ல வீட்டுக்கு மட்டும்தானா?